Saturday, February 28, 2009

விடுங்க பாஸ்

ராகுல் எங்கள் ரூம்க்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அவனுக்கு எங்க ரூமில் இருந்த எல்லா விசயங்களும் வியப்பாக இருந்தது. " எப்பொழுதும் சிகரெட் பிடித்துக் கொண்டு Orkut'ல் இருக்கும் வினோத், இரவு முழுவதும் இணையத்தில் எதாவது மேய்ந்துக் கொண்டு இருக்கும் அருண், எப்பொழுதும் எதாவது படித்துக் கொண்டு இருக்கும் ராம், சினிமா செய்திகளை மட்டும் விரும்பி படிக்கும் சசி, மதியம் 12 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து ஆபிஸ் போகும் பிரதீப் " என்று அனைத்து விசயங்களும் ராகுலுக்கு வியப்பாக இருந்த்து.

ரூமில் நானும் அருணும் ஒரு நாள் " Trade " என்ற Mexican திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது வந்த ராகுல் " என்னடா Mexican படம் எல்லாம் பார்க்கிறீர்கள். Mexican மொழி எல்லாம் தெரியுமா?? " என்றான்.

அருண்::::: " English படமும் தான் பார்க்கிறோம், அதனால் எங்களுக்கு English தெரியும்னு அர்த்தமா.... விடுங்க பாஸ்... எங்களுக்கு English படம், Mexican படம் எல்லாம் ஒன்று தான் பாஸ் ".


பின்குறிப்பு:
==========


இந்த " Trade " திரைப்படம் English cum Mexican படம். மெக்சிகோவில் வசிக்கும் ஒருவன் கடத்தபட்ட தன் தங்கையை தேடி கண்டுப்பிடிப்பது தான் கதை. சூப்பர் படம். நேரம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.

Thursday, February 26, 2009

விளக்கம்

என் பதிவை படிப்பவர்கள் அனைவரும் ( இந்த எண்ணிக்கை ஐந்தை தாண்டாது என்பது முக்கியம் ) என்னிடம் கேட்கும் முதல் கேள்வி " என் எப்பொழுதும் காதல், பெண்கள், தேவதை, அழகி என்றே எழுதுகிறாய் " என்பது தான். நான் அவர்களிடம் எல்லாம் சொல்ல விரும்பும் ஒரே பதில் " சாருவின் ரசிகன் நான். அவர் எழுத்தை பார்த்து தான் இந்த வலைப்பதிவை எழுத தொடங்கினேன், அப்படி பட்ட என்னிடம் நீங்கள் வேறு எந்த மாதிரி எழுத்தை எதிர்பார்க்க முடியும். சாருவின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ' I Hate Men '".

Saturday, February 14, 2009

அசோக்கின் அத்தை மகள்

"காபியா, டீயா" எனறு கேட்டாலே பதில் சொல்ல திணறும் அசோக்கிடம் ஒருவன், "இதுவரை எந்த பெண்னை'யாவது பார்த்து காதலிக்க வேண்டும் என்று தோன்றியிருக்கா??" என்று கேட்டால் எப்படி இருக்கும். அசோக் வழக்கம் போல ஒரு புண்ணகையுடம் நிறுத்தி கொண்டான்.

அசோக்கிற்கே சந்தேகம் " இதுவரை நமக்கு இப்படி எதாவது தோன்றியிருக்கிறதா என்று ?? ". சொல்ல போனால் தனக்கு பிடித்த பெண்கள் என்று அசோக் ஒரு பட்டியலே வைத்து இருக்கான், இதில் Latest "Delhi 6" சோனம் கபூரும் அடங்கும். அப்படி பார்த்தால் இந்த பட்டியலில் இருக்கும் எல்லாம் பெண்களையுமே காதலிக்க வேண்டுமே. அந்த பட்டியலை இங்கு வெளியிட்டால் அப்பறம் அசோக்கிடம் தற்பொழுது " Hi, Bye " சொல்லிக் கொண்டு இருக்கும் ஒண்ணு ரெண்டு பெண்களும் பேசாது.

அசோக்கிற்கு அத்தை பெண் ஒருத்தி உண்டு. அசோக்கிற்கும் அவளுக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். சின்ன வயதில் இருந்தே இருவரும் எங்காவது வெளியில் போனால் "ஜோடியா மாப்பிள்ளையும் பெண்ணும் எங்கே கிளம்பிட்டிங்க??" என்று ஊரில் உள்ள அனைத்து பெருசுகளும் கேட்கும். எதாவது கல்யாண வீட்டிற்கு சென்று விட்டால், அசோக்கையும் அவன் அத்தை பெண்ணையும் பற்றி பேசவே ஒரு பெருசு கூட்டம் தயாராக இருக்கும். அதுவும் மதுரை பெருசுகளை பற்றி சொல்லவே வேண்டாம்.

இதன் காரணமாகவே அந்த பெண்ணை தனக்கு தான் கல்யாண செய்து வைப்பார்கள் என்ற எண்ணம் அசோக்கிற்கு வந்துவிட்டது. அத்தை பெண்ணும் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். அவள் அழகை பற்றி அசோக்கிடம் கேட்டால் அசோக் ஒரு நாள் முழுவதும் அவள் அழகை பற்றி வர்ணிப்பான்.

சில நாட்களுக்கு முன்னால் அசோக்கின் அம்மா அசோக்கிற்கு போன் செய்து, அசோக்கின் அத்தை பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்து இருப்பதாக சொன்னாள். மாப்பிள்ளை CA படித்துவிட்டு எதோ ஒரு வெளிநாட்டில் இருக்கிறானாம். அந்த மாப்பிள்ளையின் பெயர் கூட அசோக்கின் நினைவில் தங்கவில்லை. இந்த கல்யாணத்திற்கு தன் அம்மாவிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று அசோக் எதிர்பார்த்தான். ஆனால் அம்மாவோ அசோக்கின் அத்தையை விட மும்முரமாக இந்த கல்யாணத்தை முடிப்பதில் தீவிரமாக இருந்தாள். அசோகின் அப்பாவோ இதை போல் ஒரு வரன் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லி கொண்டு இருந்தார்.

பேசாமல் நாமே போய் மாமாவிடம் பெண் கேட்டுவிடலாம் என்று கூட அசோக் நினைத்தான். சின்ன வயதில் பேசிய பெருசுகள் எல்லாம் இப்பொழுது உயிருடன் கிடைத்தால், கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறான்.

தீடிர் என்று கல்யாண எற்பாட்டில் ஒரு தடை. அசோக்கின் அத்தை பெண் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டது, அப்படியும் மாப்பிள்ளை பார்ப்பதற்கு அழகாக தான் இருந்தான். ஆனால் பிடிக்காமல் போனதற்கு காரணம் " அந்த பெண் ஒருவனை விரும்புகிறாளாம்". அசோக்கிற்கு ஒரு நப்பாசை " ஒருவேளை அந்த பையன் தான் தானோ என்று ?? ". பாவம் அசோக்கிற்கு கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும் பழக்கம் இல்லை.

வீட்டில் உள்ள பெரியோர்கள் எல்லாம் எப்படி எப்படியோ பேசி கடைசியாக அந்த பெண்ணை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டர்கள். இதில் அசோக்கின் அம்மாவிற்கு முக்கிய பங்கு உண்டு.

மீண்டும் அசோக்கின் ஆசையில் மண் விழுந்தது மன்னிக்கவும் பாராங்கல்லு விழுந்தது. ஆனால் அசோக் இன்னும் ஒரு முடிவோது தான் இருக்கிறான். கல்யாண மணவறையில் மாப்பிள்ளைக்கு பெண்ணின் காதல் விசயம் தெரிய வந்து, மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள், உடனே அதே மணவறையில் தன் அத்தை பெண்ணிற்கு தானே ஒரு தாலி கட்டி தன் அத்தை பெண் மானத்தையும், குடும்ப மானத்தையும் காக்க வேண்டு என்பது தான் அந்த முடிவு. என்னதான் இருந்தாலும் இதை போல் ஒரு நல்ல மனசு அசோக்கை தவிர யாருக்கும்மே இருக்காது.

பின்குறிப்பு:
===========

மேலே உள்ள கதையில் இந்த வாக்கியங்களை சேர்த்துக் கொள்ளவும்.

"அசோக்கிற்கும் அவளுக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். ஆம் அசோக்கை விட அவன் அத்தை மகள் இரண்டு வயது மூத்தவள் !!!!!" :)

Friday, February 13, 2009

பிப்ரவரி 14

இன்று காதலர் தினம். நண்பர் ரீ-மதி தன் வலைபதிவில் சொன்னது போல " காதலை கொண்டாட 365 நாட்களும் இருக்கும் போது எதற்காக இந்த காதலர் தினம் ".


நேற்று நானும் என் நண்பனும் "மெளனம் பேசியதே" திரைப்படம் பார்க்கும் போது பேசிக்கொண்டது.

நான்.." டேய் அருண், நம்மள மாதிரியே சூர்யாவிற்கும் காதல்'னா பிடிக்காது போல".

அருண்... " மச்சி, அவனுக்கு காதலிக்க பிடிக்காது, நம்மக்கு காதலிக்க தெரியாது".

Saturday, February 7, 2009

நான் கடவுள்

"Evil Dead" படத்தை தியேட்டரில் தனியாக உட்கார்ந்து பார்பவருக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவிக்கபட்டது போல, "நான் கடவுள்" படத்தை கண் மூடாமல் பார்பவருக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவிக்கலாம்.

மனதில் பல பிரச்சனைக்கு நடுவில் கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்கலாம் என்று திரைப்படத்திற்கு போய். மனதில் இன்னும் அதிகமான பாரத்தோடு திரும்பி வந்தேன். கண்டிபாக இந்த படம் இதயம் பலவீனம் ஆனவர்களுக்கு அல்ல ( என்னையும் சேர்த்து தான் ).

பாலா சார், ஒரு கொடூரமான திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நாங்க உங்களிடம் இருந்து அனைவரும் ரசிக்கும் படியான திரைப்படத்தை எதிபார்கிறோம். காசியில் கதை ஆரம்பிக்கும் போது இருந்த பிரம்மிப்பு கொஞ்சம்கொஞ்சமாக கதை செல்ல செல்ல ஒரு அருவருப்பாக மாறியது. ஒர் உண்மையை தான் சொல்லியிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதை திரைப்படத்தில் சொல்லும் பொழுது மக்கள் ரசிக்கும் படி சொல்ல வேண்டியது அவசியம். இந்த படத்தில் மூலம் தமிழ் திடைப்படங்களை நீங்கள் அடுத்த பரிணாமத்திற்கு கொன்டு சென்றதாக கொஞ்ச மக்கள் சொல்லலாம். அவர்களிடம் "பசி, சோறு" போன்ற படங்களை பார்க்க சொல்ல வேண்டும்.

இந்த படத்தின் பல காட்சிகளை நான் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டேன். ஆகவே இந்த படத்தை பற்றி முழுமையாக விமர்சனம் செய்ய நான் தகுதியற்றவன் ஆகிறேன்.

பாலா, ஜெயமோகன், ஆர்யா, பூஜா, இளையராஜா, கவிஞர் விக்கிரமாதித்யன் என்று இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த படம் ஒரு மைல்கல். ஆனால் இந்த படத்தை நான்கு வருடமாக தாயாரித்த தயாரிப்பாளருக்கு????


பின்குறிப்பு:
-------------

இந்த திடைப்படத்தை பார்த்த அந்த இரவு சரியாக தூங்க முடியவில்லை, பல நினைவுகள் என்னை சூழ்ந்துக் கொண்டு இருந்தன. ஒருவேளை இது தான் இந்த திரைப்படத்தின் வெற்றியா???.

Wednesday, February 4, 2009

நல்லவன் எனக்கு நானே நல்லவன்

மங்களூரில் ஸ்ரீ ராம சேனாவை சேர்ந்தவர்கள் Pub'ல் வன்முறை தாக்குதல் நடத்திய மறுநாள், ஆபிஸில் ஒரு நண்பர் சொன்னது " நேற்று டிவியில அந்த அடியை எல்லாம் பார்த்தியா? தலையில் நச்சு நச்சு வச்சான் பாரு.. செம அடி. வரிசையா எல்லா பெண்களையும் நிக்க வைத்து அடிச்சான். எல்லாம் Teen- age பொண்ணுங்க தான். இந்த Pub, Disco'வுக்கு வர பெண்களை எல்லாம் பார்த்து இருக்கியா?? பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும். அதுவும் தண்ணியடிச்சு அதுங்க அடிக்கிற ஆட்டம் இருக்கே. வரது எல்லாம் முக்கால்வாசி Pair'ஆ தான் வரும். எல்லாம் பணம் இருக்கிற திமிர். இதுங்கள எல்லாம் இப்படி தான் அடிக்கனும். இனிமே கொஞ்ச நாள் எவனும் Pub, Disco'னு போகமாட்டான் பாரு. இன்னும் ரெண்டு சாத்து சாத்தி இருக்கனும்."

கம்யூனிஸ்ட் தோழன் ராகுல் சில நாட்களுக்கு முன்னால் என்னிடம் சொன்னது ஞாபகம் வந்தது. "இப்ப இருக்கிற எல்லா பிரச்சனைக்கும் காரண்ம் உங்கள மாதிரி I.T பீப்பிள் தான்டா. எல்லாம் உட்கார்ந்த இடத்தில் பணம் சம்பாரிக்கும் திமிர்டா. உங்கள் யாருக்காவது உடல் உழைப்பு என்றால் என்னவென்று தெரியுமாடா?? என்னைக்காவது வேர்வை சிந்தி சம்பாரித்து இருக்கிங்களா. சும்மா இல்லாம ஊருல அமைதியா வேலை பார்க்கிற்வனையும் I.T பக்கம் வாடானு சொல்லி உசுப்பு எத்துறது. நீங்கள் எல்லாம் 1000 ரூபாய் வாடகை வீட்டை 5000 ரூபாய் தந்து பிடிச்சா, நாங்க எல்லம் எங்கடா போறது??. இப்ப எல்லாரும் விவசாயம் என்பதையே மறந்து போய்ட்டீங்க, இப்படியே போனா சாப்பிடற அரிசிக்கு என்ன பண்ணுவீங்க பார்போம். ஏன்டா எவனோ முகம் தெரியாத அமெரிக்கனுக்கு வேலை பார்க்க வெட்கமா இல்லை. பணம் தந்தா எதையும் செய்வீங்களா. I.T கம்பேனி'ல வேலை பார்க்கிற எல்லாரையும் நடுரோட்டில் நிக்க வைச்சு அடிக்கனும்."