Monday, May 18, 2009

என்னை பார்த்தால் பாவமாய் இல்ல???

அசோக் வேலைக்கு சேர்ந்த புதிது. மொத்தம் இருபது பேர் அவனுடம் வேலைக்கு சேர்ந்து இருந்தார்கள். அனைவருமே Freshers. சேர்ந்த முதல் வாரத்திலேயே அசோக்கிற்கு ஒரு நண்பர் கூட்டம் கிடைத்துவிட்டது. அசோக், நரேன், ராஜா, மதன், விமலா, கீதா என்று ஆறு பேர் அந்த கூட்டணியில். இவர்கள் அனைவரும் ஒரே கல்லூரி என்ற போதிலும், கல்லூரியில் ஒருமுறைக் கூட பேசிக்கொண்டது இல்லை.

அடுத்த சில வாரங்களில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பெசன்ட் நகர், சத்தியம் சினிமாஸ், சிட்டி செண்டர், ஸ்பென்சர் என்று சுற்ற ஆரம்பித்தனர். ஞாயிறு மாலை வேளைகளில் கண்டிப்பாக இவர்களை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்திக்கலாம். மதனிடம் மட்டும் அப்பொழுது பைக் இருந்தது. அவனுக்கு பைக் என்றால் உயிர்.

இந்த விமலாவிற்கு ஊர் சற்றுவது மிகவும் பிடித்த பொழுதுப்போக்கு. இதற்காகவே அவளுக்கு அவள் அப்பா ஒரு மாருதி 800 வாங்கி தந்து இருந்தார். அடுத்த இரண்டு மாதங்கள் சம்பளத்தை சேமித்து Loan’ல புதிதாக Santro வாங்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வாள்.

அன்று கடற்கரையில் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த போது, விமலா மதனிடம் கேட்டால் “ டேய் வாடா, பைக்’ல ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம்”. இப்படி விமலா கேட்பது முதல்முறை அல்ல. க்டற்கரைக்கு வரும் ஒவ்வொரு முறையும் விமலா மதனிடம் கேட்பது இதைத்தான். மதன் உடனே O.K சொல்லமாட்டான் மாட்டான். மதன் கொஞ்சம் யோசனை செய்ய தொடங்கியவுடன் விமலா முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு ” என்னை பார்த்தால் பாவமாய் இல்ல??” என்பாள்.

அன்றும் அப்படித்தான் மதன் முடியாது என்றான். விமலா ” என்னை பார்த்தால் பாவமாய் இல்ல??” என்றாள். இப்பொழுது அவள் முகத்தை பார்த்து முடியாது என்று சொல்பவன் கண்டிப்பாக கல் நெஞ்சக் காரனாகத்தான் இருப்பான்.

விமலாவும், மதனும் பைக்கில் சென்றவுடன் அவர்கள் தங்கள் அரட்டையை தொடர்ந்தார்கள். அனைவருக்குமே தெரியும், கண்டிப்பாக சென்றவர்கள் இப்பொழுது திரும்பமாட்டாட்கள் என்று.

விமலா “ நான் பாவம்’ல், நான் பாவம்’ல “ என்று சொல்லியே E.C.R Tollgate வரைக்கும் அவனை அழைத்து சென்றுவிடுவாள்.

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் பிடிக்கும் மதனுக்கும், விமலாவிற்கும் ஒரு பந்தயம் “ ஒரு வாரத்திற்கு மதன் சிகரட் பிடிக்காமல் இருந்தால் ஒரு Temptation Chocolate”. இதில் முதல் இரண்டு வாரம் மதன் வெற்றியும் பெற்றுவிட்டான். பேசாமல் நாமும் சிக்ரெட் பிடிக்க கற்றுக்கொள்ளலாம் என்று அசோக்கும், நரேனும் பேசிக்கொண்டார்கள்.

ஒரு வருடத்தில் விமலா வேறு கம்பெனியில் வேலை கிடைத்து சென்றுவிட்டால், இருந்தாலும் ஞாயிறு சந்திப்பு மட்டும் மாறவே இல்லை ஆனால்,.கடந்த இரண்டு மாதமாக மதனும், விமலாவும் கடற்கரைக்கு வராமல் எதோ காரணம் சொல்லிக்கொண்டு இருந்தனர்.

கீதா சொன்னால் “போன வாரம் Ascendas Food Court'ல இவர்கள் மூவரும் சந்தித்து பேசிய போது கூட மதனும், விமலாவும் பேசிக்கொள்ளவில்லையாம். கீதா எத்தனையோ முறை உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டும், அவர்கள் ஒன்றும் சொல்லவில்லையாம்”

தீடிரென மதன், போன வாரம் சத்தியம்’ல அனைவருக்கும் ’அயன்’ டிக்கேட் புக் செய்தான். விமலாவும் வருகிறாள் என்றான்.

சத்தியம் திரையரங்கு வெளியில் அவர்கள் அனைவரும் விமலாவிற்க்கு காத்துக்கொண்டு இருக்க, அவள் “ முக்கியமான Meeting இருப்பதால் தன்னால் வர முடியாது ” என்று மதனிடம் போனில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

மதன் போனில் “ என்னை பார்த்தால் பாவமாய் இல்லயா??? “ என்று கேட்டுக்கொண்டு இருந்தான். அப்பொழுது மதனை பார்க்க உண்மையாகவே பாவமாய் இருந்தது.

பின்குறிப்பு:
===========

என்னுடைய அனைத்து கதைகளை போலவே இந்த கதையும் கற்பனைத்தான்.

நம்புங்க பா.. “ என்னை பார்த்தால் பாவமாய் இல்ல??? “

சென்ற மாத உயிர்மை இதழில் மனுஷ்யபுத்திரன் எழுதிய ”சிநேகிதிகளின் கணவர்கள்” என்ற கவிதையின கடைசி வரிகள்,


நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று

ஒரு சிநேகிதியை
‘ சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

- மனுஷ்ய புத்திரன்

என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

நேற்று நண்பன் கனடாவில் இருந்து போன் செய்து “ பிரபாகரன் செத்து போய்விட்டார் என்று CNN-IBN Website’ல வந்துயிருக்கிறது. செய்தி உண்மையா?? “ என்றான். நானும் CNN-IBN Website'ல செய்தியை பார்த்து உறுதி செய்துவிட்டு தொலைக்காட்சியில் ஒவ்வொரு செய்தி சேனலாக மாற்ற ஆரம்பித்தேன்.

எல்லா செய்தி சேனல்களிலும் புதிய மக்களவையில் யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி என்பதை பற்றிதான் செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு நமது அண்டை நாட்டில் நடுக்கும் பிரச்சனைகள் பற்றி அக்கறை இல்லை. ஏன் என்றால் இப்பொழுது மக்களவை செய்திக்குத்தான் விளம்பரம் கிடைக்கும்.

ஆங்கில செய்தியாவது பரவாயில்லை, கலைஞர் மற்றும் சன்’னில் ” திமுக கூட்டணிக்கு கிடைத்த் வெற்றி தமிழ்மக்களுக்கு கிடைத்த வெற்றி “ என்று ஒவ்வொரு தலைவர்களும் பேட்டி தந்துக்கொண்டு இருந்தனர்.

பாவம் அவர்கள் அனைவருக்கும் இலங்கை தமிழர் என்ற வார்த்தையே மறந்துவிட்டது. சீமானை நினைக்கும் போது பாவமாய் இருந்தது. தமிழக மக்கள் தி.மு.க கூட்டணிக்கு 28 இடங்களில் வெற்றி வாங்கித்தந்து இருக்கிறார்கள். நம் தமிழனுக்கு தனது சகோதரன் இலங்கையில் துயரம் அடைவது பற்றி சிறிதும் வருத்தம் கிடையாது, தன் ஒட்டுக்கு பணம் வந்தால் போதும். கற்றது தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி “இன்னைக்கு நாற்பது ஆயிரம் பணத்திற்காக பெயரை மாற்றுவாய், நாளைக்கு 5 லட்சம் பணம் தந்தால்...”

வேறு என்ன நான் சொல்ல “ என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ”

Sunday, May 17, 2009

கடவுளே கணபதி

மஞ்சள் வெயில்
-------------------

எளிய மனிதர்களுக்கு
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

எளிய முறையில்
எளிய தீர்வுகளை நோக்கிச் செல்கிறார்கள்

அவர்களுக்குப்
புரியவேயில்லை
நகரம் மஞ்சள் வெய்யிலில்
குளித்துக்கொண்டிருந்த
ஓரு மாலையில்
ஓரு மனிதனுக்கு
தீடிரென ஏன்
பைத்தியம் பிடிக்கிறதென்று

- மனுஷ்ய புத்திரன் (12.10.2002)
மணலின் கதை புத்தகம்


பின்குறிப்பு:
===========

சில காரணங்களால் இங்கு இருந்த கதை நீக்கப்பட்டுவிட்டது.