Tuesday, February 8, 2022

.

திருமணமான ஒருவன் தனது 35-வது வயதில் முதல் முறையாக ஒரு காதல் கவிதை எழுதியபோது, இந்தச் சமூகம் அவன் மீது முதல் சந்தேகப் பார்வையை வைத்தது.

முதலில் அவனுக்கு ஒரு காதலி இருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர், அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கதை கோர்க்கப்பட்டது. அவன் தனது பத்தாவது காதல் கவிதையை எழுதியபோது, அவள் அவனுடைய பழைய கல்லூரிக் காதலி என்றும், அவளுடைய கணவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்துவிட்டதாகவும் ஒரு உபகதை சேர்க்கப்பட்டது.

யாரோ ஒருவன் எழுதும் கவிதையால், யாரோ ஒருத்தியின் தனிப்பட்ட வாழ்க்கை விவாதத்திற்கு உட்படுவதை எண்ணி, இந்தச் சமூகத்தைச் சபித்துக்கொண்டே டாஸ்மாக் பாரில் அன்றைய காதல் கவிதையை எழுதி முடித்தான்.

பின்னர், “வீட்டுக்கு வரும்போது அண்ணாச்சி கடையில் ஒரு பாக்கெட் தோசை மாவு வாங்கி வர வேண்டும்” என்று மனைவி சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டான்.