அசோக்'க்கு வாழ்க்கையில் இப்பொழுது திடீரென்று ஒரு வெறுமை தோன்றியது போல் ஒரு உணர்வு அவனுக்கு.
40 வயதை கடந்தால் அப்படித்தான் இருக்கும் என்று அவன் மனைவி அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். அவள் அதை மிகவும் சாதாரணமாக சொல்கிறாள். “எல்லாருக்கும் வரும்…” என்று. ஆனால் அசோக்'க்கு அது சாதாரணமாக தெரியவில்லை. சில நேரங்களில் இரவு இரண்டு மணிக்கு திடீரென்று தூக்கம் கலைந்து ceiling fan-ஐ பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறான். வாழ்க்கை எங்கோ pause செய்து வைக்கப்பட்ட video போல தோன்றுகிறது.
இந்த வெறுமையை கடக்க மீண்டும் புத்தகங்கள் படிக்கலாம் என்று நினைத்தான். அலமாரியில் இருந்த பழைய புத்தகங்களை எல்லாம் எடுத்துப் புரட்டிப் பார்த்தான். ஒருகாலத்தில் ஒரே இரவில் முடித்த புத்தகங்களை இப்போது இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. மூன்றாவது பக்கத்திற்கு செல்லும் முன்பே மனசு எங்கோ சென்று விடுகிறது.
Intraday செய்யலாம் என்றாலும் அதிலும் விருப்பம் இல்லை.
ஒருகாலத்தில் market open ஆகும் நேரத்திற்கு முன்னரே laptop முன் ready-ஆ உட்கார்ந்திருப்பான். இப்போது candle chart-களை பார்த்தாலே சலிப்பு வருகிறது. பச்சை நிறமோ, சிவப்பு நிறமோ எந்த உணர்வையும் தரவில்லை.
திரைப்படம், web series, OTT recommendation… எதுவும் கைக்கொடுக்கவில்லை. Netflix open செய்து அரை மணி நேரம் scroll பண்ணிவிட்டு எதையும் பார்க்காமல் close செய்து விடுகிறான்.
கடைசியாக இந்த வெறுமையை கொஞ்சம் தள்ளி வைத்தது Ubuntu தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பழைய laptop ஒன்றை format செய்து Ubuntu install பண்ணியிருந்தான். install ஆகி முடிந்த பிறகு வந்த அந்த கருப்பு terminal screen-ஐ பார்த்தபோது ஏனோ ஒரு அமைதி கிடைத்தது. அதன்பிறகு பழைய Unix command-களை எல்லாம் தூசி தட்டி பயன்படுத்த ஆரம்பித்தான்.
grep
awk
sed
cron
இந்த command-களை type பண்ணும்போது மட்டும் அசோக்'க்கு இன்னும் உலகத்தின் control ஏதோ தன்னிடம் இருப்பது போல தோன்றுகிறது.
என்னதான் Windows போல அனைத்து வசதிகளும் Ubuntu-வில் வந்துவிட்டாலும், command போட்டு இரண்டு தட்டு தட்டினால்தான் ஒரு திருப்தி. GUI-யில் mouse click பண்ணுவது விட terminal-ல் blinking cursor முன் உட்கார்ந்திருப்பதில் ஒரு தனி அமைதி இருக்கிறது.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேலை மாறி புதிய கம்பெனிக்கு சென்றபோது நடந்த ஒரு விஷயம் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வருகிறது.
ரொம்ப வருடங்களாக pending-ஆ கிடந்த ஒரு issue. Senior engineer-கள் கூட touch பண்ண பயந்த issue. அசோக் ஒரு அரை மணி நேரம் logs எல்லாம் பார்த்துவிட்டு, crontab-ல் ஒரே ஒரு time option சேர்த்து restart பண்ணியிருக்கிறான். பிரச்சினை சரியாகிவிட்டது.
அந்த floor முழுக்க அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.
டீமில் இருந்த ஒருவர் “How did you find this?” என்று கேட்டது இன்னும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது.
அந்த நாளில் issue fix ஆன சந்தோஷத்தை விட, “நமக்கும் ஏதோ தெரியும்” என்ற உணர்வே அவனுக்கு பெரிய நிம்மதியை கொடுத்தது.
இப்போது இரவுகளில் Ubuntu open செய்து வெறுமனே terminal-ஐ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான் அசோக்.
கருப்பு screen.
அதில் வெறும்:
user@ubuntu:~$

