மன்னியுங்கள்…
உங்கள் கொண்டாட்டங்களின் நடுவில்
என்னால் கைதட்ட முடியவில்லை.
உங்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சி,
என் மனதில் மட்டும்
ஒரு கனமான அமைதியை விட்டுச் செல்கிறது.
நீங்கள் இதை வெற்றி என அழைக்கிறீர்கள்;
நான் இதை
வரலாறு தவறாக திரும்பும் தருணம் என பார்க்கிறேன்.
உண்மைகள் தோற்கும் போது,
பிம்பங்கள் அரியணை ஏறும் போது,
கூட்டத்தின் சத்தம் கூட
உங்களுக்கு பாடலாகவே கேட்கிறது.
இன்று ஏற்றப்பட்ட இந்த விளக்குகள்
நாளை எதை எரிக்கப் போகின்றன என்று தெரியவில்லை.
எதையும் எரிக்காமல் இருக்கவே
நானும் விரும்புகிறேன்.
ஆனால்
நமது விருப்பப்படி எல்லாம் நடந்திருந்தால்,
இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே
இருந்திருக்காது அல்லவா?
தெளிவில்லா தெளிவுரை
தமிழக அரசியலில் தற்போது ஒரு வித்தியாசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எந்த பெரிய கொள்கையோ சித்தாந்தமோ இல்லாமல், ஒரு நடிகரின் பிம்பத்தை நம்பி மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சினிமாவில் கிடைத்த புகழும் ரசிகர் ஆதரவும் அரசியலிலும் வெற்றி தரும் என்று பலர் நம்ப தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. ஆனால் இப்போது சமூக வலைத்தளங்கள் காரணமாக ஒரு மனிதரின் பிம்பம் மிக வேகமாக பெரியதாக மாற்றப்படுகிறது. மக்கள் அவரை ஒரு தலைவராக பார்க்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் நல்ல நிர்வாகம், அரசியல் அனுபவம், தெளிவான திட்டங்கள் போன்றவை இருக்கிறதா என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.
இப்போது உருவாகியிருப்பது உண்மையான அரசியல் நம்பிக்கையா, அல்லது வெறும் உணர்ச்சி மற்றும் ரசிகர் மனப்பான்மையா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். இந்த பிம்பம் ஒருநாள் உடைந்து போகுமா, அல்லது மக்கள் ஆதரவால் இன்னும் பெரிய சக்தியாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



