Wednesday, September 16, 2026

UPIக்கும் கட்டணமா? டிஜிட்டல் இந்தியா என்னாச்சு?

 

ஒரு காலத்தில் கடைக்குச் சென்றால் கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டும். பிறகு ATM வந்தது. Debit card, Credit card வந்தன. இப்போது கையில் பணமே இல்லாமல் ஒரு QR code-ஐ ஸ்கேன் செய்து சில நொடிகளில் பணம் செலுத்திவிட்டு வெளியே வந்து விடுகிறோம்.

ஒரு சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய shopping mall வரை, தெருவோர வியாபாரி முதல் ஆன்லைன் வணிக நிறுவனம் வரை, இன்று UPI இல்லாத வணிகத்தை நினைத்துப் பார்ப்பதே கடினம். GPay, PhonePe, BHIM, Paytm என்று பல பேர் பல பெயர்களில் சொன்னாலும், இவை எல்லாமே அரசின் BHIM Architecture-ல் வேலை செய்கின்றன. இந்த UPI-க்கு முதன்முதலில் அடிக்கல் போட்டது Paytm தான். முன்னர் Paytm Wallet-ல் நாம் பணத்தைப் போட வேண்டும்; பின்னர் அங்கிருந்து நாம் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாகப் பணம் அனுப்பிக்கொள்ளலாம். Wallet-ல் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடையாது. Paytm-க்கு ஒரு பெரிய தொகை வட்டியில்லாமல் சேருவதால், Paytm-யும் இந்தச் சேவையை இலவசமாகத் தந்தது. ஆனால் மறைமுகமாக Wallet-ல் உள்ள பணத்தை வேறு விதமாகப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு பெரிய தொகை Paytm-க்கு லாபமாகக் கிடைத்தது. இதன் பின்னர்தான் அரசின் BHIM வந்தது; Wallet முறை அழிக்கப்பட்டு, வங்கி அக்கவுண்ட் நேரடியாக இணைக்கப்பட்டது. இதன் காரணமாக Wallet-ஐ நம்பியிருந்த Paytm, PhonePe போன்ற கம்பெனிகள் ஆரம்பத்தில் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தனர். பின்னர் தங்கள் Business Style-Insurance, Trading, Other Financial Services என்று மாற்றிக்கொண்டனர். சில Wallet கம்பெனிகள் இழுத்து மூடப்பட்டதும் அப்போதுதான் நடந்தது. இது எல்லாம் பழைய கதை.

இன்று இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றங்களில் ஒன்றாக UPI மாறிவிட்டது. இதற்குக் காரணம் UPI எளிதானது. வேகமானது. முக்கியமாக இலவசமானது.

ஆனால் இப்போது அந்த இலவச UPI முறையில் ஒரு பெரிய மாற்றத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

அக்டோபர் 15, 2026 முதல் ₹2,000-க்கு மேல் வணிகர்களுக்கு செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% Merchant Discount Rate (MDR) விதிக்கப்பட உள்ளது. மேலும் அரசு, “இது வாடிக்கையாளரிடம் திணிக்கப்படாது. இது வணிகர் மற்றும் payment ecosystem-க்கு இடையிலான MDR” என்று சொல்கிறது.

ஆனால், கண்டிப்பாக அப்படி இருக்கப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அதிகக் கட்டணம் வாடிக்கையாளர் மீதுதான் எப்படியிருந்தாலும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ திணிக்கப்படப் போகிறது.

பொருளாதாரத்தின் அடிப்படை விதி என்ன? ஒரு வணிகத்தின் செலவு அதிகரித்தால், அந்தச் செலவு எப்படியாவது வணிகத்தின் விலைக் கட்டமைப்புக்குள் சென்று, கடைசியாக வாடிக்கையாளரிடம் நிறைவடையும்.

மூலப்பொருள் விலை அதிகரித்தால் வாடிக்கையாளர் வாங்கும் பொருளின் விலையும் அதிகரிக்கும். மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் விலை அதிகரிக்கும். வாடகை அதிகரித்தால் விலை அதிகரிக்கும். பெட்ரோல் செலவு அதிகரித்தால் விலை அதிகரிக்கும்.

அதேபோல payment processing cost அதிகரித்தாலும், விலை அதிகரிக்கும்.

ஒரு வியாபாரி வெளிப்படையாக, “UPI charge ₹20” என்று வாடிக்கையாளரிடம் கேட்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அந்த ₹20 வேறு ஒரு வழியில் விலைக்குள் கலந்துவிடம். ஏற்கனவே Flipkart, Amazon போன்றவை Processing Fee, Handling Fee, Discount Fee என்று வேறு வேறு பெயர்களில் மறைமுக வசூல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

UPI ஒரு சாதாரண தனியார் app அல்ல. NPCI-ஆல் இயக்கப்படும் இந்தியாவின் payment infrastructure. இதன் மூலம் வங்கிகள், payment apps, payment service providers, technology infrastructure என ஒரு மிகப்பெரிய ecosystem இயங்குகிறது.

அரசின் தற்போதைய விளக்கம் என்னவென்றால், MDR என்பது அரசாங்கம் வசூலிக்கும் வரி அல்ல; அது payment ecosystem-ல் பங்கேற்கும் வங்கிகள், payment service providers மற்றும் UPI application providers உள்ளிட்டவர்களிடையே பகிரப்படும் கட்டணம். இதன் நோக்கம் UPI ecosystem-ஐ நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கச் செய்வது என்று அரசு கூறுகிறது.

இப்பொழுது வரை இந்தச் செலவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்றுக்கொண்டு உள்ளது. இனியும் அந்தச் செலவினை அரசால் ஏற்க முடியாது என்பது அரசின் வாதம்.

சாலை அமைப்பதற்கு அரசு செலவு செய்கிறது. ரயில்வே infrastructure-க்கு அரசு செலவு செய்கிறது. அதேபோல், டிஜிட்டல் public infrastructure-க்கும் அரசு செலவு செய்யலாம்.

ஏனென்றால் UPI மூலம் அரசுக்கே பல நன்மைகள் கிடைக்கின்றன. பணப் பரிவர்த்தனைகள் formal economy-க்குள் வருகின்றன. வங்கிகளின் digital ecosystem வளர்கிறது. எனவே UPI-யை ஒரு சாதாரண payment service போல மட்டும் பார்க்காமல், இந்தியாவின் digital public infrastructure என்று பார்க்க வேண்டும்.

மேலும் ஒரு முக்கியமான செய்தி, UPI-யில் கட்டணம் கொண்டு வர அமெரிக்கா அழுத்தம் தருகிறது என்பது.

card networks-க்கு UPI ஒரு போட்டியாளராக இருப்பது இயல்பானது. 2026-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க வர்த்தகத் தடைகள் அறிக்கையைச் சுற்றிய விவாதங்களில், இந்தியாவின் UPI அமைப்பு அமெரிக்க electronic payment service providers-க்கு சமமான போட்டிச் சூழலை வழங்கவில்லை என்ற அமெரிக்கக் கவலை வெளிப்பட்டுள்ளது. UPI-யின் வளர்ச்சி Visa, Mastercard, Amex போன்ற பாரம்பரிய card networks-க்கு போட்டியாக இருப்பது பற்றியும் ஆய்வுகள் விவாதித்துள்ளன.

அமெரிக்காவின் அழுத்தத்தால் தான் நாம் UPI-க்கு கட்டணம் வசூலிக்க இருக்கிறோம் என்றால், அதைவிட ஒரு கேவலமான விஷயம் வேறு எதுவும் இல்லை.

கடைசியாக,

ஏற்கனவே அரசாங்கம் நம்மிடம் பல வரிகளை வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறது. வங்கிகளும் நம்மிடம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பல கட்டணங்களை வசூலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே இந்த UPI செலவினை தொடர்ந்து அரசாங்கமே செய்ய வேண்டும். மக்கள் மீதும், வணிகர்கள் மீதும் திணிக்கக் கூடாது.

எப்படி ராணுவத்துக்கு செலவு செய்வது ஒரு நாட்டிற்கு முக்கியமோ, அதேபோல் அந்த நாட்டின் வளர்ச்சிக்காக டிஜிட்டல் public infrastructure-க்கும் அரசு செலவு செய்வது முக்கியமே.

அதுதான் நியாயமான டிஜிட்டல் இந்தியா.

 

No comments: