Tuesday, February 8, 2022

.

திருமணமான ஒருவன் தனது 35வது வயதில் முதல் முறையாக காதல் கவிதை எழுதிய போது, இந்த சமூகம் அவன் மீது முதல் சந்தேக பார்வையை வைத்தது.

முதலில் அவனுக்கு ஒரு காதலி இருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கோர்க்கப்பட்டது. அவன் தனது பத்தாவது காதல் கவிதை எழுதிய போது, அவள் அவனுடைய பழைய கல்லூரி காதலி என்றும், அவள் கணவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்து விட்டதாகவும் ஒரு உபக்கதை சேர்க்கப்பட்டது.

யாரோ ஒருவன் எழுதும் கவிதையால் யாரோ ஒருத்தியின் தனிப்பட்ட வாழ்க்கை விவாதத்துக்கு உட்படுவதை எண்ணி, இந்த சமூகத்தை சபித்துக்கொண்டே டாஸ்மாக் பாரில் அன்றைய காதல் கவிதையை எழுதி முடித்தான். பின்னர், "வீட்டுக்கு வரும் போது அண்ணாச்சி கடையில் ஒரு பாக்கெட் தோசை மாவு வாங்கி வர வேண்டும்" என்று மனைவி சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைவில் நிறுத்திக்கொண்டான்.