Thursday, December 30, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்னை பொருத்த வரை 2010 மிகவும் மோசமான ஆண்டு. எப்படியோ முடிந்துவிட்டது. அதுவரை சந்தோஷம். இனி வரும் வருடமும் இதைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த ஆண்டாவது, பல நாட்களாக எனது புத்தகப்பையில் தூங்கிக்கொண்டு இருக்கும் "Kafka, Fyodor Dostoevsky" ஆகியோரின் புத்தகங்களை முடித்தாக வேண்டும். இனி எவன் பேச்சை கேட்டும் ஆங்கில புத்தகங்கள் மட்டும் வாங்கவேகூடாது என்ற முடிவோடு இருக்கிறேன். அவர்கள்தான் சொன்னார்கள் என்றால் எனக்கு எங்கே போனது புத்தி, எனது ஆங்கில புலமைதான் எனக்கு நன்றாக தெரியுமே.

தமிழிலேயே எத்தனை அழகான புத்தகங்கள் இருக்கின்றன், முதலில் அவற்றை படிப்போம். அதற்கே இந்த ஆயுள் பத்தாது.

சரி சார், வரும் நான்காம் தேதி முதல் " 34வது சென்னை புத்தகக் கண்காட்சி " தொடங்க இருக்கிறது. நாம் தேடும் எல்லா புத்த்கங்களும் கிடைக்கும். கண்டிப்பாக அங்கே சந்திப்போம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Sunday, December 26, 2010

மூன்று திரைப்படங்கள்

எதாவது எழுதியாக வேண்டும். நானே எதிர்பாராமல் இந்த இடைவெளி விழுந்துவிட்டு. ஆனால், எதைப்பற்றி எழுதுவது என்று இன்னும் சரியாக தெரியவில்லை.

நான் சமீபத்தில் எழுதுவது எதுவுமே புரியவில்லை என்கிறான் நண்பன் ஒருவன். அதுவும் நல்லதுதான். நாம் எழுதுவது யாருக்காவது புரிந்தால்தான் பிரச்சனையே.

இதோ அலுவலக வேலையாக பெங்களூர் வந்து இன்றோடு பத்து நாட்கள் முடியப் போகிறது. அப்படி என்ன வேலை எனறு கேட்காதீர்கள். அது தெரியாமல்தான் நானே முழித்துக்கொண்டு இருக்கிறேன்.  அறை எடுத்துக்கொடுத்து நான் பெங்களூரில் வெட்டியாக உட்கார வேண்டும் என்று அலுவலகத்தில் ஆசைப்படுகிறார்கள், அதற்க்கு நான் என்ன செய்வது. (இது எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குதான் பாஸ், உண்மையாகவே இங்கு பயங்கர வேலை பாஸ் !!!). "இதுவரை வாழ்க்கையில் எப்பொழுதாவது வாங்குற சம்பளத்துக்கு வேலை பார்த்திருக்கியா??. இப்பொழுது நல்லா அனுபவி" என்கிறாள் தோழி ஒருத்தி.

"மன்மதன் அம்பு" திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். கமலும், கே.எஸ்.ரவிக்குமாரும் மீண்டும் இணைந்து திரைப்படம் பண்ணாமல் இருக்க இறைவனை ஒருமுறை வேண்டிக்கொண்டேன். "நீ நீலவானம் " என்ற பாடலை எடுத்திருக்கும் அழகுக்காக, திரைப்படத்தை கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். காட்சிகள் எல்லாம் பின்நோக்கி நகரும் போது, கமலின் உதடு அசைவுகள் பாடலை சரியாக பாடுவது அருமை. ஒரு பாடலை பின்நோக்கி பாடுவது அந்தளவு சுலபமில்லை.

போன வாரமே பார்த்த இன்னொரு திரைப்படம் "ஈசன்". திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாருமே தாங்கள் செய்வது தவறு என்று நினைக்கவில்லை. திரைப்படத்தை இயக்கிய சசிக்குமாரும் கூட!!!!. "பருத்திவீரன்" வெற்றியை தொடர்ந்து, ஒரு ரேப் சீன் இருந்தால் மட்டும் திரைப்படம் வெற்றி அடையும் என்று நம்ப தொடங்கிவிட்டார்கள். ஒரு மணிநேரத்தில் சொல்லவேண்டியதை சுருக்கமாக சொல்லி, ஒரு மிக சிறந்த திரைப்படமாக எடுத்திருக்கலாம். ஆனால், சொல்லவந்ததை மீண்டும் மீண்டும் சொல்லி 3 மணிநேர திரைப்படமாக எடுத்ததால், மிக மிக சுமாரான திரைப்படமாக அமைந்துவிட்டது.

நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் அடுத்த திரைப்படம் வெற்றிமாறனின் "ஆடுகளம்".  பாடல்கள் ஏற்கனேவே நன்றாக வந்துள்ளது.  முக்கியமாக "அய்யய்யோ" மற்றும் "ஒத்த சொல்லால" ஆகிய பாடல்கள். நீங்களே ஒருமுறை கேட்டு பாருங்கள். என்னுடயை அடுத்த டயல் டோன் "ஒத்த சொல்லால" பாடல்தான்.

Thursday, December 16, 2010

அருணின் கடிதம்

அருண் (பேரின்பா), ஏன் இப்பொழுது எல்லாம் எதுவுமே எழுதுவதில்லை என்று தெரியவில்லை.

சமீபத்தில் சாருவின் புத்தக வெளியீட்டு விழா பற்றி சாருவுக்கு அருண் எழுதிய கடிதம் (சாருவின் வலைப்பதிவிலிருந்து).

( குறிப்பு : எனக்கும் இந்த புத்தக வெளியீட்டு விழா பற்றி எழுத ஆசைதான். என்ன செய்ய, எனது இலக்கிய ஆர்வம் அருண் சொல்வது போல் "சமோசா சாப்பிடணும்னா சாப்ட்டு வா” என்பதிலேயே முடிந்து விடுகிறது. )

சாருவுக்கு,

நேற்றைய விழா பற்றி ஒன்றும் பேசாமல் இருந்தால் பழநிமலை முருகன் என்னை கோபித்துக் கொள்வான்.  நான் எம்.பி.ஏ.  படிக்கிறேன். நேற்று எனக்கு Corporate Finance பரிட்சை. இரவு தூங்குவதற்கு மூன்று மணி ஆகிவிட்டது. பரிட்சை முசுவில் காலையில் சாப்பிடவில்லை. தூக்கமில்லாமல் படிப்பதால் சமயங்களில் பரிட்சை ஹாலில் தூக்கம் வந்து விடுகிறது; அதனால் காலையில் சாப்பிடுவதில்லை.  மதியம் இங்கே  நல்ல சோறு கிடைப்பதில்லை என்பதால் ப்ரெட்டும் ஜாமும் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் கண்ணயர்ந்து விட்டுக் கிளம்பலாம் என்று படுக்கையில் விழுந்தேன்.  மொபைலை சார்ஜ் போட்டுவிட்டுப் படுத்தவன் கண் விழித்த போது மணி ஐந்து!

வெளியீட்டு விழா பற்றி என் தோழியிடம் ஒரு மாதமாக சொல்லி வந்திருக்கிறேன். அவளும் என்னை எழுப்புவதற்கு  ஆறு முறை போன் செய்திருக்கிறாள். எனக்கு அது காதில் விழவில்லை. அப்படி ஒரு தூக்கம்.  நான் இருக்கும் அம்பத்தூர் OTயில் இருந்து மவுண்ட் ரோடு வர  ஒன்றரை மணி நேரம். அதுவும் நான் இருக்கும் இடத்தில் இருந்து அம்பத்தூர் OT வரவே 15 நிமிடம். என் நண்பனுக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள 30 ரூபாய் கொடுத்து அம்பத்தூரில் கொண்டு விடச் சொன்னேன். வண்டி பாதியிலேயே நின்று விட்டது. வழியில் என் தோழி நான் வண்டியில் போவதை பார்த்திருக்கிறாள் போலும்; “Formals போட்டியே.. பெல்ட் போட்டியா?” என்று கேட்டு எஸ்ஸெம்மெஸ் அனுப்பினாள்.

சரவணன் வழியில் போன் செய்து தான் ஆபீஸில் இருந்து அப்போதுதான் வந்ததாகவும், வழியில் சேர்ந்து கொள்வதாகவும் சொன்னான். அதனால் திருமங்கலத்தில் இறங்கி அவனுக்காகக் காத்திருந்து இருவரும் வந்து சேர்ந்தோம். அங்கு வரும் போது மணி 6 45 ஆகிவிட்டது. அரங்கம் நிரம்பியிருக்க வேண்டும் என்பதே எங்கள் இருவரின் கவலை. முக்கால்வாசிக்கும் சற்று கம்மியாக இருந்தது. பரவாயில்லை;  கொஞ்சம் சிறிய ஹாலில் வைத்திருந்தால் சிரமம் என்று பேசிக் கொண்டோம். கடும் பசி. புத்தகம் வாங்கிவிட்டு வந்த சரவணன் “சமோசா சாப்பிடணும்னா சாப்ட்டு வா” என்றான். அப்போதுதான் எனக்கு உயிர் வந்தது.  காது கேட்க ஆரம்பித்தது.

புத்தக வெளியீட்டைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை. நான் கண்டது, கேட்டது, பார்த்தது எல்லாம் அனைவரும் பார்த்தது; அனைவரும் உணர்ந்தது. அனைவரும் உண்மையாய் இருந்த தருணத்தில் நானும் இருந்தேன் என்பதே மிகப் பெரிய சந்தோஷம்.  நான் உங்களின் ‘கலகம் காதல் இசை’ மட்டுமே முழுமையாய்ப் படித்திருக்கிறேன். மற்றும் உங்கள் வலைமனையின் தீவிர வாசகன். உங்களைப் பின் தொடர்பவன். அவ்வளவே. ஒருகாலத்தில் உங்களை வசை பாடியிருக்கிறேன். அது என் காதுகளும் கண்களும் மூடியிருந்த காலம்.  மாற்றுக் கருத்துக்களை விரும்பாத காலம். உங்களை என்னால் மறுக்கமுடியாமல் கொண்டு செல்வது எது என்று புரியவில்லை. ஒருவேளை நேற்று மதன் சொன்னது போல் உங்களின் நேர்மையான எழுத்தாக இருக்கலாம்..

விழா முடிந்து இரவு 10:30 மணிக்கு நானும் சரவணனும் ஜெமினி வரை நடந்து,  ஓடிப் பிடித்து ஆவடி பஸ்சில் ஏறினோம். அதை விட்டால் அவ்வளவு தூரம் போக இன்னும் நேரமாகிவிடும் என்பதால் ஏறிவிட்டோம். 11 30 மணிக்கு அம்பத்தூரில் எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தது. அன்று மதியம் முதல் இன்று காலை வரை நீங்கள் கொடுத்த சமோசாதான் என்னை காப்பற்றியது.  ஆதலால் சமோசாவுக்கும், காப்பிக்கும் உங்கள் நண்பர்களுக்கும், உங்களுக்கும் நன்றி.

அன்புடன்,
அருண். T.
http://perinba.wordpress.com/

Friday, December 10, 2010

நண்பனின் வலைப்பதிவு

சிலர் எழுதுவதைப் படிக்கும் போது எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றும், சிலர் எழுதுவதைப் படிக்கும் போது இப்படியும் எழுதலாம் போல என்று தோன்றும்.

சிலரின் எழுத்துக்கள் பிடிக்காவிட்டாலும் அவரை தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்போம். சிலரின் எழுத்துக்கள் பிடித்தாலும், படிக்காமல் இருக்கவே முயற்சிபோம். சிலரின் எழுத்தைப் படிக்கும் போது நாமெல்லாம் எழுதவேண்டுமா?? என்று தோன்றும். சிலரின் எழுத்தைப் படிக்கும் போது நாமெல்லாம் ஏன் எழுதகூடாது?? என்று  தோன்றும். சிலரின் எழுத்தைப்படிக்கும் போது, நம்மைப்போலவே எழுதுகிறார்கள் என்று தோன்றும், இன்னும் சிலரின் எழுத்தை படித்தால், நாம் எழுதியதையே எழுதியிருக்கிறார்கள் என்று  தோன்றும். 

சிலரின் எழுத்துக்கள் படித்தவுடனே புரிந்துவிடும். சிலரின் எழுத்துக்கள் பலமுறை படித்தால் மட்டுமே புரியும். சிலரின் எழுத்துக்கள ஒவ்வொருமுறை படிக்கும்போது வெவ்வேறு அர்த்தம் தரும். இன்னும் சிலரின் எழுத்துக்கள் எத்தனைமுறை படித்தாலும் புரியாது.


சிலர் எழுதுவதைப் படிக்கும்போது, ஏன் இவர்கள அரிதாக எழுதுகிறார்கள்?? என்று தோன்றும். இன்னும் சிலர் எழுதுவதைப் படிக்கும் போது, இவர் அரிதாகவே எழுததும் என்று தோன்றும்.

என்ன சார், ரொம்ப குழப்புறேனா??.. விடுங்க சார், கொஞ்ச நாட்களாக நானே ரொம்ப குழம்பிப் போய்தான் இருக்கேன்.

நான் இங்கு சொல்ல வந்த விசயமே வேறு. அதைத்தவிர மற்றவற்றை பேசிக்கொண்டு  இருக்கிறேன். சமீபத்தில் சகா ராகுல் தொடர்ந்து நன்றாக எழுதிவருகிறான். அவனுடைய ஒரு பதிவு கிழே,

I resign...

Being loved is greatest
And now am great
Want to became the greatest by you

I don’t have enough courage
To hear, you saying “NO”
And hence, I resign...

Let me reside in your cover
And love you for ever
Or else free me to resign
And leave this region

I don’t have enough tears
to shed, on hearing “NO”
And hence, I resign...

Accept me as a whole
Take my heart and soul
If not…
Let me, stop here and cry
Atleast, give me to die.

I don’t have enough power
to change you to say “YES”
And hence, I resign...

You made me love-coward
You gave me fear-of –rejection
And hence, … … …
-ராகுல்

ராகுலின் வலைப்பதிவு முகவரி:

http://truepages.blogspot.com/