நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக.
உன்னைப் பற்றி எழுதும் போதெல்லாம், நான் நூறு முறையாவது யோசித்துதான் எழுதுகிறேன். எழுதியதை மீண்டும் மீண்டும் படித்து பார்க்கிறேன். நான் எழுதியது, உன்னைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடுமோ என்று கவலைப்படுகிறேன். நான் எழுதியதுமேல் எனக்கே திருப்தியில்லாமல், எழுதியதை அழித்துவிட்டு, ஒரு சில சிறந்த வாக்கியங்களின் உதவியால் உன்னைப் பற்றி மீண்டும் எழுதுகிறேன். மீண்டும் அதே யோசனை, அதே எண்ணம், அதே கவலை, மீண்டும் மீண்டும் அழித்துவிட்டு, திரும்ப திரும்ப எழுதிப்பார்க்கிறேன்.
இதை தொலைவிலிருந்து பார்க்கும் ஒருவன் "என்னைப் பைத்தியம்" என்கிறான். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி??. ஆனால், அவன் பார்க்கும் எல்லாரிடமும் சொல்கிறான் "நான் பைத்தியம்" என்று. உன்னிடம் கூட அவன் பலமுறை சொல்லியிருக்கலாம். அவன் எதையும் தெளிவாக செய்கிறான், பயமில்லாமல் செய்கிறான், அனைவரும் நம்பும்படி செய்கிறான். அவனை எல்லாரும் நம்ப தொடங்கினார்கள். ஏன்?, அதை நீ கூட நம்பியிருக்கலாம். மீண்டும் சொல்கிறேன், எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி?
எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் உனக்காக படைப்பேன் - உலகின் மிகச் சிறந்த காவியங்களை, உலகின் மிகச் சிறந்த அதிசயங்களை, உலகின் மிகச் சிறந்த இதிகாசங்களை. ஆனால், அதற்கு சில வருடங்கள் ஆகலாம், சில நூற்றாண்டுகள் ஆகலாம், ஏன், சில யுகங்கள் கூட ஆகலாம். உன்னால் அது வரை காத்திருக்க முடியுமா?? எதையும் என்னால் தெளிவாக சொல்ல முடியாது, நான் சொல்வதை நீருபிக்க கூட என்னால் முடியாது. இப்பொழுது சொல், அதுவரை உன்னால் காத்திருக்க முடியுமா??.
எனக்கு பயமாக இருக்கிறது. காரணமில்லாத பயம் அது, என்னை நானே கேட்கும் ஓராயிரம் கேள்விகளால் ஏற்பட்டப் பயம். அந்த கேள்விகள் உன்னைப் பற்றியே, அந்த கேள்விகளுக்கான பதிலை நீ சொல்வதாக நினைத்து எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
'உன் பதில் என்ன என்பது எனக்கு தெரியும். அந்த பதில், என்னை எந்த விதத்திலும் மகிழ்ச்சி அடைய செய்யபோவதில்லை என்பதும் எனக்கு தெரியும்."
எடுத்துக்கொள் எல்லாவற்றையும். என்னிடம் எனக்காக ஒன்றுமே இல்லை. எனக்கு உன் அன்பின் மீது எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் கைவிடப்பட்டவன். இன்று இல்லையென்றாலும் என்றோ ஒரு நாள், யாரோ ஒருவரால் நீயும் கைவிடப்படுவாய். அப்பொழுது எனக்காக நீ வருத்தப்படலாம் அல்லது என் நினைவுகள் உன்னிடம் அழிந்திருக்கலாம். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை. நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக.
இதை தொலைவிலிருந்து பார்க்கும் ஒருவன் "என்னைப் பைத்தியம்" என்கிறான். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி??. ஆனால், அவன் பார்க்கும் எல்லாரிடமும் சொல்கிறான் "நான் பைத்தியம்" என்று. உன்னிடம் கூட அவன் பலமுறை சொல்லியிருக்கலாம். அவன் எதையும் தெளிவாக செய்கிறான், பயமில்லாமல் செய்கிறான், அனைவரும் நம்பும்படி செய்கிறான். அவனை எல்லாரும் நம்ப தொடங்கினார்கள். ஏன்?, அதை நீ கூட நம்பியிருக்கலாம். மீண்டும் சொல்கிறேன், எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி?
எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் உனக்காக படைப்பேன் - உலகின் மிகச் சிறந்த காவியங்களை, உலகின் மிகச் சிறந்த அதிசயங்களை, உலகின் மிகச் சிறந்த இதிகாசங்களை. ஆனால், அதற்கு சில வருடங்கள் ஆகலாம், சில நூற்றாண்டுகள் ஆகலாம், ஏன், சில யுகங்கள் கூட ஆகலாம். உன்னால் அது வரை காத்திருக்க முடியுமா?? எதையும் என்னால் தெளிவாக சொல்ல முடியாது, நான் சொல்வதை நீருபிக்க கூட என்னால் முடியாது. இப்பொழுது சொல், அதுவரை உன்னால் காத்திருக்க முடியுமா??.
எனக்கு பயமாக இருக்கிறது. காரணமில்லாத பயம் அது, என்னை நானே கேட்கும் ஓராயிரம் கேள்விகளால் ஏற்பட்டப் பயம். அந்த கேள்விகள் உன்னைப் பற்றியே, அந்த கேள்விகளுக்கான பதிலை நீ சொல்வதாக நினைத்து எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
'உன் பதில் என்ன என்பது எனக்கு தெரியும். அந்த பதில், என்னை எந்த விதத்திலும் மகிழ்ச்சி அடைய செய்யபோவதில்லை என்பதும் எனக்கு தெரியும்."
எடுத்துக்கொள் எல்லாவற்றையும். என்னிடம் எனக்காக ஒன்றுமே இல்லை. எனக்கு உன் அன்பின் மீது எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் கைவிடப்பட்டவன். இன்று இல்லையென்றாலும் என்றோ ஒரு நாள், யாரோ ஒருவரால் நீயும் கைவிடப்படுவாய். அப்பொழுது எனக்காக நீ வருத்தப்படலாம் அல்லது என் நினைவுகள் உன்னிடம் அழிந்திருக்கலாம். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை. நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக.