Sunday, February 18, 2007

perunthil Nee Enakku... (pori)...lyrics

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

[சரணம் 1]

பயணித்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுக்கையில் தினரும் புன்னகை
அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீதானே

தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீ....தானே

[பேருந்தில் நீ....]

[சரணம் 2]

தாய்மடி தருகிற அரவனைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

தேய்பிறை போல்தொடும் நகக் கனுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல்போன் சினுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே

பிடித்ததும் தருகிற பரிசு பொருளும்
அன்பே அன்பே நீதானே

எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ....தானே

[பேருந்தில் நீ....]

6 comments:

Jayarathina Madharasan said...

நன்று!

நன்றி!

Rick said...

Hi there,

I was looking for this song's lyrics and I bumped into your blog. I'm actually from Kerala and I can 'manage' to read Tamil, but not fast enough to sing along with the song. If you can post it in English, it'll be greatly appreciated. I mean, "Perunthil Nee Enakku Jannaloram"... like...

Thanks in advance,
Rick.

vigneshchozhan said...

Superb

by vigneshchozhan

Unknown said...

NACHINU IRUKU \

Unknown said...

Thanks

Unknown said...

Lyrics written by who?