Saturday, February 14, 2009

அசோக்கின் அத்தை மகள்

"காபியா, டீயா" எனறு கேட்டாலே பதில் சொல்ல திணறும் அசோக்கிடம் ஒருவன், "இதுவரை எந்த பெண்னை'யாவது பார்த்து காதலிக்க வேண்டும் என்று தோன்றியிருக்கா??" என்று கேட்டால் எப்படி இருக்கும். அசோக் வழக்கம் போல ஒரு புண்ணகையுடம் நிறுத்தி கொண்டான்.

அசோக்கிற்கே சந்தேகம் " இதுவரை நமக்கு இப்படி எதாவது தோன்றியிருக்கிறதா என்று ?? ". சொல்ல போனால் தனக்கு பிடித்த பெண்கள் என்று அசோக் ஒரு பட்டியலே வைத்து இருக்கான், இதில் Latest "Delhi 6" சோனம் கபூரும் அடங்கும். அப்படி பார்த்தால் இந்த பட்டியலில் இருக்கும் எல்லாம் பெண்களையுமே காதலிக்க வேண்டுமே. அந்த பட்டியலை இங்கு வெளியிட்டால் அப்பறம் அசோக்கிடம் தற்பொழுது " Hi, Bye " சொல்லிக் கொண்டு இருக்கும் ஒண்ணு ரெண்டு பெண்களும் பேசாது.

அசோக்கிற்கு அத்தை பெண் ஒருத்தி உண்டு. அசோக்கிற்கும் அவளுக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். சின்ன வயதில் இருந்தே இருவரும் எங்காவது வெளியில் போனால் "ஜோடியா மாப்பிள்ளையும் பெண்ணும் எங்கே கிளம்பிட்டிங்க??" என்று ஊரில் உள்ள அனைத்து பெருசுகளும் கேட்கும். எதாவது கல்யாண வீட்டிற்கு சென்று விட்டால், அசோக்கையும் அவன் அத்தை பெண்ணையும் பற்றி பேசவே ஒரு பெருசு கூட்டம் தயாராக இருக்கும். அதுவும் மதுரை பெருசுகளை பற்றி சொல்லவே வேண்டாம்.

இதன் காரணமாகவே அந்த பெண்ணை தனக்கு தான் கல்யாண செய்து வைப்பார்கள் என்ற எண்ணம் அசோக்கிற்கு வந்துவிட்டது. அத்தை பெண்ணும் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். அவள் அழகை பற்றி அசோக்கிடம் கேட்டால் அசோக் ஒரு நாள் முழுவதும் அவள் அழகை பற்றி வர்ணிப்பான்.

சில நாட்களுக்கு முன்னால் அசோக்கின் அம்மா அசோக்கிற்கு போன் செய்து, அசோக்கின் அத்தை பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்து இருப்பதாக சொன்னாள். மாப்பிள்ளை CA படித்துவிட்டு எதோ ஒரு வெளிநாட்டில் இருக்கிறானாம். அந்த மாப்பிள்ளையின் பெயர் கூட அசோக்கின் நினைவில் தங்கவில்லை. இந்த கல்யாணத்திற்கு தன் அம்மாவிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று அசோக் எதிர்பார்த்தான். ஆனால் அம்மாவோ அசோக்கின் அத்தையை விட மும்முரமாக இந்த கல்யாணத்தை முடிப்பதில் தீவிரமாக இருந்தாள். அசோகின் அப்பாவோ இதை போல் ஒரு வரன் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லி கொண்டு இருந்தார்.

பேசாமல் நாமே போய் மாமாவிடம் பெண் கேட்டுவிடலாம் என்று கூட அசோக் நினைத்தான். சின்ன வயதில் பேசிய பெருசுகள் எல்லாம் இப்பொழுது உயிருடன் கிடைத்தால், கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறான்.

தீடிர் என்று கல்யாண எற்பாட்டில் ஒரு தடை. அசோக்கின் அத்தை பெண் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டது, அப்படியும் மாப்பிள்ளை பார்ப்பதற்கு அழகாக தான் இருந்தான். ஆனால் பிடிக்காமல் போனதற்கு காரணம் " அந்த பெண் ஒருவனை விரும்புகிறாளாம்". அசோக்கிற்கு ஒரு நப்பாசை " ஒருவேளை அந்த பையன் தான் தானோ என்று ?? ". பாவம் அசோக்கிற்கு கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும் பழக்கம் இல்லை.

வீட்டில் உள்ள பெரியோர்கள் எல்லாம் எப்படி எப்படியோ பேசி கடைசியாக அந்த பெண்ணை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டர்கள். இதில் அசோக்கின் அம்மாவிற்கு முக்கிய பங்கு உண்டு.

மீண்டும் அசோக்கின் ஆசையில் மண் விழுந்தது மன்னிக்கவும் பாராங்கல்லு விழுந்தது. ஆனால் அசோக் இன்னும் ஒரு முடிவோது தான் இருக்கிறான். கல்யாண மணவறையில் மாப்பிள்ளைக்கு பெண்ணின் காதல் விசயம் தெரிய வந்து, மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள், உடனே அதே மணவறையில் தன் அத்தை பெண்ணிற்கு தானே ஒரு தாலி கட்டி தன் அத்தை பெண் மானத்தையும், குடும்ப மானத்தையும் காக்க வேண்டு என்பது தான் அந்த முடிவு. என்னதான் இருந்தாலும் இதை போல் ஒரு நல்ல மனசு அசோக்கை தவிர யாருக்கும்மே இருக்காது.

பின்குறிப்பு:
===========

மேலே உள்ள கதையில் இந்த வாக்கியங்களை சேர்த்துக் கொள்ளவும்.

"அசோக்கிற்கும் அவளுக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். ஆம் அசோக்கை விட அவன் அத்தை மகள் இரண்டு வயது மூத்தவள் !!!!!" :)

4 comments:

வெட்டிப்பயல் said...

கதை சூப்பர் :)

Subbu said...

நல்ல கதை... சுருக்கென்று முடிந்துவிட்டது போல் தோன்றுகிறது.

Ree_mathi said...

romba super ... pinnkurippu excellent !!!!

பேரின்பா said...

அத்தை பொண்னு மாமா பொண்ணுனு தாளிக்காதீங்க பாஸ்...