Monday, September 28, 2009

ஆகவே கேள்வி கேளுங்கள்

ஏதாவது கேளுங்கள்
சிறுபிள்ளைத்தனமாக
அல்லது அறிவாழித்தனமாக
ஏதாவது கேளுங்கள்

கேள்வி கேட்காதவன் முட்டாளாகிறான்
கேள்வி கேட்காதவன் அடிமையாகிறான்
கேள்வி கேட்காதவன் ஏமாளியாகிறான்
ஆகவே கேள்வி கேளுங்கள்

உங்கள் இருப்பை
இந்த உலகிற்க்கு காட்டுவதற்க்கு
உங்கள் கேள்வி துணையிருக்கும்
ஆகவே கேள்வி கேளுங்கள்.

உங்களுக்கு பதில் தெரிந்தாலும் கேளுங்கள்
அது இன்னொருவனுக்கு
கேள்வி கேட்க ஊன்றுகோலாய்
இருக்கலாம்

எல்லா கேள்விகளுக்கும்
பதில் இருக்கிறது
ஆகவே கேள்வி கேளுங்கள்

1 comment:

Subramania Athithan said...

நம்ம கேள்வி கேட்க ஆரம்பித்தால் பலர் feel பண்ண வேண்டியிருக்கும். ஏம்பா :)