Friday, January 1, 2010

எனக்குப் பிடித்த பாடல்

"சொல்லிவிடு வெள்ளி நிலவே" என்று தொடங்கும் இந்த பாடலின் படம் "அமைதிப்படை".

திரைப்படத்தில் இடம்பெறாத இந்த பாடலை யார் எடிட்டிங் செய்து youtube'ல் போட்டார்கள் என்று தெரியவில்லை, எடிட்டிங் நன்றாக உள்ளது.




இந்த பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா இல்லை, கார்த்திக் ராஜாதான் என்று என் நண்பன் அடித்து சொல்கிறான். திரைப்படத்தில் இசையமைப்பாளர் என்று இளையராஜாவின் பெயரும், பின்னனி இசையமைப்பாளர் என்று கார்த்திக்ராஜாவின் பெயரும் டைட்டில் கார்டில் காட்டபடுகிறது.

இவர் இளையராஜாவின் முதல் மகன். இவரும் சிறந்த இசையமைப்பாளர்தான், மெலடி பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இளையராஜாவின் பாணியிலேயே இவரும் பாடல்கள் இயற்றவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்ததால், வானில் தோன்றிய நட்சத்திரமாக மறைந்து போனார். பிரபலங்களுக்கு மகனாக பிறப்பதால் எற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. ஆனால், யுவன் இவற்றில் எதிலேயும் சிக்காமல் தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி கொண்டார். "ஏன், இப்பொழுது எல்லாம் கார்த்திக் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக்கொண்டார்??" என்று தெரியவில்லை.

No comments: