Thursday, April 1, 2010

கேட்டதில் பிடித்தது

காரணங்கள் இல்லாமலேயே நமக்கு சில பாடல் வரிகள் பிடித்துவிடும். அப்படி எனக்கு சமீபத்தில் பிடித்த பாடல் வரிகள் , "முந்தினம் பார்த்தேனே" திரைப்படத்தில் வரும் "பேசும் பூவே" . அந்த வரிகள்,

பெண்ணே
உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் எனை ஈர்த்ததா?


ஒரு பெண் நம்மை ஈர்ப்பதற்கு இத்தனை காரணங்கள் இருக்கிறது என்பதை இப்பொழுதுதான் புரிந்துக்கொண்டேன்.

------------------------------------------------------------

எப்படியாவது அங்காடித் தெரு திரைப்படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று நினனத்தேன். ஆனால் அக்காவின் கல்யாண வேலைகளால் படத்தை பார்க்க முடியவில்லை. திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் படத்தை புகழ்கிறார்கள், வசந்தபாலனுக்கு வாழ்த்துகள். விரைவில் இந்த திரைப்படத்தை பற்றி எழுத எனக்கு ஆசை.

1 comment:

நிலவுக்காதலன் said...

jus hear this song and dont see video :) n call me wen u go for அங்காடித் தெரு....