Friday, May 7, 2010

So what?

இப்பொழுது எல்லாம் அசோக்கிற்க்கு எதைப் பற்றி பதிவு எழுதுவது என்றே தெரியவில்லை. "இனிமேல், சொந்த அனுபவங்களை பதிவாக எழுத மாட்டேன்" என்று அவளிடம் சத்தியம் செய்ததில் இருந்துதான் இந்த பிரச்சனை. நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே புனைவுகளாக எழுத முடியும் என்று நம்புகின்றவன் அசோக். அவன் போய் இப்படி ஒரு சத்தியம் செயதால், பின் எப்படி அவனால் பதிவுகள் எழுத முடியும்.

கற்பனை கதைகளை எழுத அசோக் முயற்சி செய்தான், சிலவற்றை பதிவும் செய்தான். அவை எல்லாம் சுறா திரைப்படதை விட கேவலமான தோல்வியில் முடிந்தது. எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாரும் இல்லை" என்ற புத்தகதை படித்து முடித்த அன்றே அவன் எழுதிய கதைதான் "எது கற்பனை". அந்த கதையை எழுதி முடித்த பிறகு, அதை எஸ்.ராவிற்க்கு மெயில் அனுப்பலாம் என்று நினைத்தான். அந்த அசம்பாவிதம் மட்டும் நடந்து இருந்தால், எஸ்.ரா தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பார். அசோக்கின் நண்பன் பேரின்பா எப்பொழுது சொல்வான், "நீ, மற்றவர்களின் பாதிப்பு டா". அது உண்மைதான் போல.

அடுத்து அவன் எழுதிய "இதோ, ஒதோ" கதையும் நூறு சதவீதம் கற்பனை கதைதான்.ஆனால், பலர் அதை நம்ப மறுத்து விட்டார்கள். ராகுல் மட்டும்தான் சரியா கண்டுபிடித்தான் "machi, ur girl is missing da" என்றான்.

இந்த அசோக்கிற்க்கு எப்பொழுதும் ஒரு பிரச்சனை உண்டு, தான் சொல்ல நினைப்பதை சரியாக சொல்ல தெரியாது. இந்த மொக்கை பதிவை இவ்வளவு நேரம் படிக்கும் உங்களுக்கே இது நன்றாக தெரிந்து இருக்கும். எதை பற்றி சொல்ல நினைக்கிறானோ, அதை தவிர்த்து மற்ற அனைத்தை பற்றியும் பேசுவான் என்று. இப்பொழுது கூட பாருங்கள் அவன் சொல்ல வந்தது அந்த nikkle'யை பற்றிதான். அசோக்கின் வலைபதிவை ஒருவர் பொறுமையாக படிப்பதே பெரிய விசயம், அதிலும் படித்துவிட்டு ஒருவர் பின்னூடம் எழுதியிருந்தால் அவர் எந்தளவு பொறுமைசாலியாக இருப்பார். nikkle'னின் பின்னூடத்திற்க்கு பதில் அளிக்கிறேன் என்று சொல்லி அந்த பொறுமைசாலியை tension ஆக்கிட்டான் இந்த அசோக். நல்லவேளை இப்பொழுது இருவருமே சமாதானம் அடைந்து நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

இந்த பின்னூடம் பற்றி சொல்லும் போது, இந்த சுப்புரமணியை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அசோக்கின் எல்லா பதிவுக்கும் பின்னூடம் அளிக்கும் ஒரே மனிதன் இந்த சுப்புரமணி மட்டும்தான். அசோக், அந்த சத்தியத்திற்க்கு பின் எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் ஒரு பாடலின் வரிகளை பதிவாக போட்டான். அந்த பதிவுக்குகூட சுப்புரமணி பின்னூடம் போட்டு "super" என்றான். அப்படிபட்ட நல்ல உள்ளம் படைத்தவன் சுப்புரமணி. அசோக் சொஞ்ச நாட்களுக்கு முன்னால் தன் வலைபதிவில் இருந்து எல்லா பதிவுகளையும் அழித்த போது, அசோக்கைவிட சுப்புரமணி ரொம்ப வருத்தப்பட்டான். எனென்றால் "அவனுடைய எல்லா பின்னூடங்களும் அழிந்து விட்டதாம்."

நம்ம அசோக் அவளிடம் சத்தியம் செய்த பிறகு, வலைப்பதிவில் என்ன எழுதுவது என்று தெரியாமல், இரவு 10 மணி அளவில் குப்புறபடுத்து யோசனை செய்து கொண்டு இருந்தான். மின்சாரம் நின்று விட்டது. மீண்டும் 11க்கு தான் வரும். சென்னையிலாவது பாராவாயில்லை, தினமும் இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் கட், நீடாமங்கலம் பக்கம் வந்து பாருங்கள். இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும். சட்டசபையில் தாத்தா சொல்கிறார் "தமிழக்கத்தில் மின்சார பஞ்சமே இல்லையாம்". அரசியல் இங்கே வேண்டாம் பாஸ். நாம் அசோக்கின் கதைக்கே போவோம் என்கிறீர்களா??. கதையா, அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது. இதைதான் அசோக் இந்த வாரம் வலைபதிவில் எழுத போகிறான். என்ன தலைப்புதான் கிடைக்கவில்லையாம்.

பின் அந்த சத்தியம் என்ன ஆச்சு?? என்கிறீர்களா. நானும் அதைதான் அவனிடம் கேட்டேன். அதற்க்கு அசோக் சொன்ன பதில் " so what ??". கடைசியாக தலைப்பும் கிடைச்சாச்சு.

1 comment:

நிலவுக்காதலன் said...

"அவனுடைய எல்லா பின்னூடங்களும் அழிந்து விட்டதாம்." saga this is too much :) here after no comments. ;)