வாழ்க்கையில் கவலையே இல்லாதவன் ஒரு காதல் கவிதை எழுதுகிறான்.
வாழ்க்கையில் கவலையே இல்லாதவன் அந்த காதல் கவிதையை படித்து, ஒரு காதலியை தேடுகிறான். ஒரு கட்டத்தில் ஏமாற்றத்தால் கதறி அழுகிறான்.
பல நாட்களுக்கு பின், முன்னவனும் பின்னவனும் ஒரு மதுபான வீடுதியில் சந்திக்க நேர்ந்தது. நம்மை போலவே அவர்களுக்கும் யார் முன்னவன், யார் பின்னவன் என்ற குழப்பம் ஏற்பட, ஒரு நிம்மதியுடன் இருவருமாக, ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உறங்கினர்.
No comments:
Post a Comment