Saturday, January 21, 2023

துணிவு திரைப்படமும், Yes bank AT1 Bond, LIC மற்றும் அதானி ஷேர்களும்....

“துணிவு திரைப்படத்தில் வருவது போல் Mutual Fund Scam'க்கு வாய்ப்பு உள்ளதா?” என்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டு இருக்கிறபோதுதான், நேற்று உயர்நீதிமன்றம் Yes Bank AT1 Bond Write off செல்லாது என்று தீர்ப்பு அளித்து உள்ளது. இதன் மதிப்பு கிட்டதட்ட 8000 கோடி ரூபாய்.

போதுவாக எல்லா Financial Scam'களும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை, "இதற்கு முன்னாடி இது மாதிரி நிறைய தடவை நடந்து உள்ளது, ஆனால் இதுதான் First Time" என்ற வாக்கியம் Financial Scam'களுக்கு சுலபமாக பொருந்தும்.

முன்று வருடங்களுக்கு முன்னால், யெஸ் பேங்க் திவாலாகிய நிலைமையில் இருந்தது. உடனே மத்திய அரசும், ஆர்பிஐ'யும் யெஸ் பேங்கை காப்பாற்ற சில மூக்கிய முடிவுகளை எடுத்தனர். அதில் ஒன்றுதான் இந்த யெஸ் பேங்க் AT1 Bond write-off, அதாவது இந்த பாண்ட் வாங்கியவர்கள் யாருக்கும் பணம் தரதேவையில்லை. AT1 Bond'யை பொது மக்களும் வாங்கலாம், ஆனால் பெரிய கம்பேனிகள், Pension Scheme மற்றும் mutual fund நிறுவனத்தினர் தான் அதிகம் வாங்குவார்கள். இந்த write-off'யில் அனில் அம்பானியின் Reliance Mutual Fund'க்கு (புதிய பெயர் Nippon Mutual Fund) மட்டும் 2500 கோடி ரூபாய் வரை நஷ்டம். Mutual Fund'க்கு நஷ்டம் என்றால் அது அவர்களின் நஷ்டம் இல்லை, அந்த Mutual Fund வாங்கிய பொதுமக்களுக்கு நஷ்டம். இந்த write-off காரணமாக Debt Mutual Fund Scheme'கள் பல அந்த வருடம் Negative Returns தந்தன.

இந்த யெஸ் பேங்கில் மட்டும் "இதுதான் First Time" என்ற வகை Financial Scam'கள் இதுவரை பல நடந்து உள்ளன.அதில் இன்னொன்று, பத்து ரூபாய்க்கு யெஸ் பேங்க் ஷேரினை SBI மற்றும் ஏழு தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கினார்கள். அவர்கள் அதை 40 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்று லாபம் பார்த்தார்கள். இதைப்பற்றி பின்னர் ஒரு முறை பொருமையாக பார்ப்போம்.

கடைசியாக, இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ஒரு Financial Scam'யை பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன்.

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடந்த ஆறு வருடங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதானி Enterprises ஷேரின் விலை மட்டும் 7700% உயர்ந்து உள்ளது, அதாவது 2016'யில் ஒரு லட்சம் ரூபாய் போட்டு இருந்தால், இப்பொழுது 78 லட்சம் ரூபாய். கடந்து இரண்டு வருடங்களாக LIC நிறுவனம் அதானி குழுமம் ஷேர்களை தொடர்ந்து வாங்கி வருகிறது, இப்பொழுது அதானி குழுமத்தின் 5 சதவீத அதிக பங்குகள் LIC'யிடம் தான் உள்ளது. எதற்காக எற்கனவே விலை அதிகம் உள்ள அதானி ஷேர்களை LIC தொடர்ந்து வாங்கவேண்டும். யார் சொல்லி வாங்குகிறார்கள் ?. இதற்கிடையில் அடுத்த வாரம் அதானி நிறுவனம் FPO மூலம் இன்னும் அதிக ஷேர்களை சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். அதையும் இந்த LIC'தான் வாங்குவார்கள். எல்லாம் நன்றாக நடக்கும் வரை எந்த Financial Scam'மும் வெளியில் தெரியாது. எங்காவது பிரச்சனையென்றால் தான் இந்த மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.

சரி நேரமாகி விட்டது, நானும் எனது மகனும் அடுத்து தேவி திரையரங்கில் “வாரிசு” மேட்னி ஷோக்கு செல்ல வேண்டும். நன்றி வணக்கம்.

No comments: