Saturday, October 4, 2008

என் முதல் பதிவு

"ஏன்டா நீ தயிருக்கு உப்பு போட்டுக்கல ?" என்று வினோத் கேட்டவுடன் எனக்கு உப்பு போட மறந்த விசயம் ஞாபகம் வந்தது. தயிர் சாதத்தை முடிக்க போகிறேன், இனிமேல் உப்பு போட்டாலும் பயன் இல்லை. நான் எப்பொழுதுமே உப்பு கம்மியா தான் போட்டு சாப்பிடுவேன்.

நான் சுயநினைவில் தான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக கடை பையனிடம் அருணுக்கு ஒர் சாப்பாடு பார்சல் சொல்லிவிட்டு, "எப்பொழுதும் தயிருக்கு உப்பு போட்டுக்க மாட்டேன்" என்று வினோத்திடம் கூறினேன்.

"அதனால் தான் உனக்கு கோபமே வர மாட்டேங்குது" என்றான் வினோத்.

இதை கேட்டவுடன் எனக்கு சுறுக்கு என்றது. ஆம் நான் எப்பொழுது கடைசியாக் கோவபட்டேன், எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அப்படி என்றால் எனக்கு கோபமே வருவது இல்லையா. நான் எப்பொழுதும் cool ஆகவே இருக்கிறேனா?? இது எவ்வளவு நல்ல விசயம். எனக்கு எப்பொழுதும் கோபம் வருவது இல்லை. நான் எல்லா பிரச்சினையின் போதும் சிரித்து தான் பேசுகிறேன். நான் கோபமே படுவது கிடையாது.

நான் கோபமே படுவது கிடையாது என்பது பொய். நான் வீட்டுக்கு போகும் போது எல்லாம் கண்டிப்பாக அம்மாவிடமோ அப்பாவிடமோ கோபமாக ஒர் வார்த்தையாவது பேசி விடுவேன். அப்படி என்றால் இந்த சென்னை என்னை கோபம் இல்லாதவனாக மாற்றி விட்டதா ??. எப்பொழுதும் பிரியமானவர்களிடம் தான் நம் கோபத்தை காட்ட முடியும் என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.

அப்படினா, இங்கு யாருமே எனக்கு நெருக்கமானவர்கள் இல்லையா??. நேற்று ஹிந்து பேப்பர்ல கிறிஸ்தவ மதத்தினர் கொடுமைப்படுத்த படுகிறார்கள் என்று படித்தவுடன் கோபம் வந்ததே.

இந்த மாதிரி நினைத்து கொண்டு இருக்கும் போது, வினோத் சொன்னான் " மச்சி, உனக்கு கோபமே வராது என்பது எல்லாம் பொய். நீ கோபத்தை மறைக்கிற, எப்பொழுதும் கோபத்தை வெளியில் காட்டனும் இல்லைனா blood pressure, stress, tension இப்படி எல்லாமே வரும்" என்றான்.

அவன் சொன்னது எனக்கு பயத்தை உண்டாக்கியது. இனிமேல் கண்டிப்பாக கோவபடனும் என்று முடிவு செய்தேன். நாளைக்கு அருணை சாப்பிட கூப்பிடும் போது orkutல உட்காந்து கொண்டு " மச்சி எனக்கு பார்சல் என்பான்" அப்ப அவன் கன்னத்தில் பளார் பளார்னு விடனும்.

3 comments:

Arun said...

நல்ல முயற்சி டா...வாழ்த்துக்கள்...
எப்ப கடைசியா பார்சல் கேட்டேன் ....
ஞாபகப்படுத்தி சொல்லு...தெரியலைனா நா பளார் பளர்னு விடுவேன்....

Comrade Ragul Anand said...

saravana don't delete the comment even if you r not with it..
this one is good.. as i had a chance to stay with you all for a shot while.. there is a livelyness in your room, every one is distinct.. try to put it in your nxt item and also with comedy manner..

Subramania Athithan said...

hmmm, feel lik first post s d best written post til now da machi :)