Wednesday, December 24, 2008

அசோக்கின் டைரியில் இருந்து சில பக்கங்கள்.

நாள் : 19-12- 2008

இதோ சத்தியம் தியேட்டர் வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறேன். போனை எடுத்து நேரத்தை பார்த்தேன், இப்பொழுது தான் மணி 5:45 ஆகியிருக்கிறது. திரைப்படம் 6:30க்கு தான் ஆரம்பிக்க போகிறது. அது வரை இப்படி தான் தியேட்டர் வாசலில் உள்ள குட்டி சுவரில் உட்கார்ந்து இருக்க வேண்டும். டிக்கெட்டும் என்னிடம் இல்லை, சிவாவிடம் தான் இருக்கிறது. சிவா கண்டிப்பாக படம் ஆரம்பிக்க ஒரு ஐந்து நிமிடம் முன்னால் தான் வருவான். அதுவரை இப்படி தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். பேசாமல் Landmark கடையில் இன்னும் ஒரு அரைமணி நேரம் செலவழித்து இருக்கலாம். ஆனால் எவ்வளவு நேரம் தான் அந்த ஒரே ஓர் அடுக்கில் இருக்கும் தமிழ் புத்தகங்களை பார்த்து கொண்டு இருப்பது. ஏன் Landmark'ல் தமிழ் புத்தகங்கள் இன்னும் கொஞ்சம் வாங்கி வைத்தால் தான் என்ன்??..

இந்த மாலை நேரத்தில் இப்படி சத்தியம் தியேட்டர் வாசலில் உட்கார்ந்து கலர் கலராய் பார்த்துக் கொண்டு இருப்பதும் நன்றாக தான் இருக்கிறது. அப்படியே என் கண்கள் அங்கும் இங்கும் அலைய தொடங்கின. எனக்கு எதிரில் ஒரு ஜோடி நின்று கொண்டு இருக்கிறது, ஏன் அவன் அவளை இப்படி இறுக்கமாக அனைத்துக்கொண்டு இருக்கிறான் ??.. நடுவில் சிறிது இடைவெளி இருந்தாலும் இன்னொருவன் வந்து அவளை தள்ளிக்கொண்டு போய் விடுவான் என்ற பயமா??.. எனக்கு அவனை நினைக்க நினைக்க சிரிப்பாக வந்தது.

என்னை போல சிலர் தான் தனியாக நின்று கொண்டு இருந்தார்கள். மற்ற அனைவரும் ஒரு Group'கவோ அல்லது ஜோடியாகவோ தான் இருக்கிறார்கள். எனக்கு வலது பக்கத்தில் ஒரு பெண் தனியாக நின்று கொண்டு இருக்கிறாள். Low Hip ஜீன்ஸ் பேண்டடும், டி-சர்ட்டும் நல்ல பொருத்தமாக தான் அணிந்து இருந்தாள். கண்டிப்பாக வயது 20'யை தாண்டி இருக்காது. நான் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்ததை அவள் பார்த்து விட்டாள். ஆனால் அவளிடம் எந்த ஒரு Reaction'ம் இல்லை. இதே போல் எத்தனை பேரை அவள் பார்த்து இருப்பாள். இப்பொழுது அவளை பொறுத்தவரை நான் பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ஒரு பொம்பளை பொறுக்கி.

இந்த எண்ணமே எனக்கு என் மீது எரிச்சலை உண்டு பண்ணியது. நான் வேறு பக்கம் திரும்பி கொண்டேன். அய்யோ இந்த பக்கமும் ஒரு பெண். ஏன் இன்று சத்தியம் தியேட்டர் வாசலில் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் ??. இல்லை என் கண்கள் பெண்களை மட்டும் தான் பார்க்கிறதா ??...இப்பொழுது எல்லோரும் என்னையே பார்ப்பது போல் எண்ணம் உருவானது. என்னை இங்கு காக்க வைத்த சிவாவின் மீது கோபமாக வந்தது. நான் இந்த எண்ணங்களில் இருந்து வெளிய வர, போனை எடுத்து சசிக்கு போன் செய்தேன்.

போனில் சசியிடம் சத்தியம் தியேட்டரில் இருப்பதாக கூறியவுடன், அவன் கேட்டது " என்ன மச்சி ?.. பிகரா கலக்கு...". நான் பதிலுக்கு " உன்னை மாதிரிலாம் இல்ல மச்சி " என்றேன். நானும் அவனும் இதுவரை எந்த ஒரு பெண் கூடவும் ஒரு T,V Show கூட பார்த்தது இல்லை என்பது எங்கள் இரண்டு பேருக்குமே நன்றாக தெரியும். சசிக்கு ஆபிஸில் வேலை இருப்பதாகவும், அவனே திரும்பி அழைப்பதாகவும் சொல்லிவிட்டு அவன் போனை வைத்துவிட்டான்.

அடுத்து சிவாவிற்கு போன் செய்தேன். வண்டியில் வந்து கொண்டு இருப்பான் போல, போனை எடுக்கவில்லை,. மணி இப்பொழுது 6:10, இன்னும் 20 நிமிடத்தை கழித்தாக வேண்டும். அந்த Low Hip ஜீன்ஸ் பெண் அங்கேயே தான் நின்று கொண்டு இருந்தாள். அவள் இப்பொழுது என்னை முறைப்பது போல் இருந்தது. அவளுடன் இப்பொழுது புதிதாக இன்னொருவள் சேர்ந்து இருந்தாள். வந்தவள் நீல நிற பாட்டியலாவும் வெள்ளை நிற மேல்சட்டையும் அணிந்து இருந்தாள். நீல நிற பாட்டியலாவை பார்த்தவுடன் எனக்கு கவிதாவின் ஞாபகம் வந்தது.

கவிதாவுக்கு பிடித்தமான டிரஸ்களில் அதுவும் ஒன்று, அதில் அவள் தேவதையை போல் இருப்பாள். கடைசியாக அவளை நேற்று அண்ணா டவர் பார்க்கில் பார்த்த போது கூட அவள் நீல நிற பாட்டியலா தான் அணிந்து இருந்தாள்.

பின்னால் இருந்து யாரோ அழைப்பது போல இருந்தது, என் எண்ணங்களில் இருந்து விடுப்பட்டேன். சிவா வந்து விட்டான். சிவா சொஞ்சம் லேட்டாக வந்து இருக்கலாம் என்று தோன்றியது. மணி இப்பொழுது 6:20, நேரத்தை சரியாக கடைப்பிடிக்க சிவாவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் பேசிவிட்டு, நானும் சிவாவும் சத்தியம் உள்ளே நுழைந்தோம். திரும்பி பார்த்தேன், Low Hip ஜீன்ஸ் பெண்ணுடன் இப்பொழுது நான்கு,ஐந்து பேர் நின்று கொண்டு இருந்தார்கள். அதில் அந்த நீல நிற பாட்டியலா பெண் மட்டும் தனியாக தெரிந்தால்.

1 comment:

Ree_mathi said...

Very Nice :) ....
I know how small or rather seemingly small things constantly remind us of loved ones !!!!