Saturday, December 20, 2008

ஏழு காரணங்கள்

அசோக் திடிர் என்று ஒரு நாள் வேலையை ரிசைன் செய்து விட்டான். மற்றவர்களை போல மாதம் ஒரு கம்பேனியாக வேலைக்கு போகும் ஆள் அவன் இல்லை. கடந்த ஒரு ஆண்டாக அவன் அந்த கம்பேனியில் தான் வேலை செய்கிறான். அவன் செய்கின்ற மொக்கை வேலைக்கு அந்த கம்பேனியை தவிர வேறு யாரும் இந்த அளவு சம்பளம் தர மாட்டார்கள் என்று அவனே பல முறை சொல்லி இருக்கிறான். இந்த காலத்தில் IT கம்பேனில வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் போது அவன் வேலையை விட்டது அவன் Roomates எல்லாருக்கும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. அசோக் வேலையை ரிசைன் செய்ததற்கு அவன் சொல்லும் ஏழு காரணங்கள்,

1) அசோக் அலுவலகத்தில் வெள்ளி, சனியை தவிர அனைத்து நாட்களும் formal dress தான் போட வேண்டும், ஆனால் அசோகிற்கு எந்த ஒரு formal dress'ம் match ஆகாததால்.

2) அவன் வேலை பார்க்கும் கம்பேனி 24*7, ஆகவே அவன் எப்பொழுதும் cab'ல தான் ஆபிஸ் போவான். cab'ல் கூட வருகிற சிலர், சிலரை impress செய்ய மொக்கை காமெடி சொல்லி சிரிப்பதால்.

3) அசோக் அலுவலகத்தில் security violation என்று சொல்லி website அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. Internet'ல் company internal site மட்டும் தான் open செய்து பார்க்க முடிவதால்.

4) அசோக் cabin'க்கும் அடுத்த cabin'ல் உட்கார்ந்து இருக்கும் பெண், தினமும் முகம் முழுவதும் make-up போட்டு கொண்டு முகத்தை அவன் அருகில் காட்டி பயமுறுத்துவதால்.

5) மதியம் உணவிற்கு எப்பொழுதும் அசோக் Non-Veg தான் விரும்பி சாப்பிடுவான். ஆனால் ஆபிஸ் canteen மதிய உணவில் non-veg item எதுவும் இல்லாததால்.

6) ஆபிஸில், எல்லா வெள்ளிகிழமை மாலை வேளைகளிலும் அந்த நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் மற்றவர்களை பற்றி
எல்லாம் கவலைப்படாமல், பாட்டு போட்டி, டான்ஸ் போட்டி, கண்ணாமுச்சி போட்டி என்று மொக்கை போட்டிகளை நடத்துவதால்.

7) ஆபிஸில் தண்ணீர் குடிக்கும் இடத்தில் cost-cutting என்று சொல்லி பேப்பர் கப்புக்கு பதிலாக எவர்சில்வர் டம்ளருக்கு மாறியதால்.


அசோக் வேலையை ரிசைன் பண்ணியதற்கான காரணங்களை பார்க்கும் போது, அவன் செய்தது சரி என்று தான் தோன்றுகிறது. உங்களுக்கு?????......


” நீ எதையாவது சகித்து கொண்டு வாழ்கிறாய் என்றால், நீ அடிமையாக வாழ்கிறாய் என்று அர்த்தம் ”

“ சகிப்புத்தன்மை என்பது அடிமைத்தனம் ”


3 comments:

Ree_mathi said...

Ithu romba toooooooo much .... I thought he had some legitimate reasons ...
number 4 ..... romba kodama than othukuren .. hehehe

Subramania Athithan said...

//” நீ எதையாவது சகித்து கொண்டு வாழ்கிறாய் என்றால், நீ அடிமையாக வாழ்கிறாய் என்று அர்த்தம் ”

“ சகிப்புத்தன்மை என்பது அடிமைத்தனம் ”// luv these lines. used it in my orkut. sorry :)

make up and cab mokkais r really kodumada :)

anu said...

Hey that 4th reason is super:) ha ha..very nice:)