Friday, October 31, 2008

Globalization'னும் கணேஷ் பீடியும்



இப்பொழுது எல்லாம் எந்த செய்தி சேனலை எடுத்தாலும் நாம் கேட்கும் வார்த்தை Globalization (உலகமயமாக்கல்). அது என்னங்க Globalization??. நான் எற்கனவே blog'ல் Globalization பற்றி சில புகைப்படங்களை பதிவு செய்து இருந்தேன். அதன் link கீழே...

http://saravanaidea.blogspot.com/2007/11/blog-post.html


சரி, இனி Globalization என்றால் என்னவென்று பார்ப்போம், நான் சொல்ல போவது..." நான் Globalization பற்றி என்ன அறிந்துக் கொண்டு உள்ளேன் " என்பதை மட்டுமே, இது சரியா, தவறா எனபதைப் நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

"World Is Flat" என்கின்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் Globalization உருவாகி உள்ளது. World Is Flat என்பதை உலகில் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்ற பொருளில் நாம் எடுத்துக்கொள்ளலாம், அதாவது அமெரிக்கா white house'ல் வசிக்கும் ஜார்ஜ் புஷ்ம், இங்கு அக்கரைப்பேட்டையில் வசிக்கும் குப்புச்சாமியும் சமம் என்ற பொருள்.

உலகம் தட்டை என்ற கோட்பாட்டின் மூலம், ஒரு பொருளின் விலை உலகம் முழுவதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளுக்கும் சமமான export,import வரி ( சுங்க வரி) இருக்க வேண்டும். எந்த கம்பேனி வேண்டுமானாலும் அவர்களின் தயாரிப்புகளை எந்த நாட்டுக்கும் கொண்டு செல்லலாம். அமெரிக்காவில் இருக்கும் "Wall Mart" இந்தியாவில் எல்லா இடங்களிலும் கடைகளை விரிக்கலாம். நம் "Reliance"ம் உலகம் முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் புதிய "Factory, Mall, Retail Stores" என்று தொடங்கலாம். இப்படி வெளிப்படையாகப் பார்த்தால் பல நல்ல விசயங்கள் இருப்பது போல் காட்சியளிப்பது Globalization.

Globalization'னை ஓர் example'வுடன் பார்ப்போம். நம் தமிழகத்தில் பிரபலமான கணேஷ் பீடி மதுரையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு கட்டு பீடி 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உலகமயமாக்கல் வந்ததன் காரணமாக வெளிநாட்டு பீடி கம்பெனிகள் பல இந்தியாவிற்கு வருகின்றன. இதன் காரணமாக கணேஷ் பீடி விற்பனை குறைகிறது. நமது கணேஷ் பீடி owner தந்திரமாக யோசனை செய்து கணேஷ் பீடியை வெளிநாடுகளுக்கு export செய்கிறார். கணேஷ் பீடி உலகம் எங்கும் கிடைக்கின்றது. அமெரிக்காவில் கணேஷ் பீடி ஓர் கட்டு 1/2 டாலருக்கு (half dollar) விற்பனை செய்யப்படுகிறது. "World Is Flat" என்கின்ற வீதிப்படி அதன் தமிழ்நாடு விலையும் 1/2 டாலர் (25 ரூபாய்) என்று நிர்ணயம் செய்யப்படுகிறது.

இப்படி 5 ரூபாய்க்கு கிடைக்ககூடிய பொருளை 25 ரூபாய்க்கு மாற்றுவது தான் Globalization. கணேஷ் பீடிக்கு பதிலாக ஓர் விவசாயியை வைத்து பார்த்தால் இதன் உக்கிரம் நமக்கு புரியும்.

மேலே சொன்ன உதாரணம் உலகமயமாக்கலின் ஓர் பகுதி தான். இதை போல் எத்தனையோ உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் மேலும் Globalization'னை பற்றி அறிந்துக் கொள்ள கீழே உள்ள link'யை பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Globalization

http://www.globalization101.org/

பின்குறிப்பு:
=======

நான் கடந்த சில நாட்களாக சிறுகதை எழுதலாம் என்று முயற்சி செய்தேன். வீட்டில் குப்பைகள் தான் அதிகமாகிறதே தவிர சிறுகதை வளர்ந்த மாதிரி தெரியவில்லை.கடைசியில் எதாவது ஹிந்தி சிறுகதையை ரிமேக் செய்யலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன்.

இதை டைப் அடிக்கும் போது எனக்கு தோன்றிய தத்துவம்,

எழுத்து என்பது சைக்கிள் மாதிரி,
நீங்கள் என்ன தான் மிதித்தாலும்… handlebar இருக்கும் பக்கம் தான் சைக்கிள் செல்லும்.

:-)................

Tuesday, October 21, 2008

இரண்டு புத்தகங்கள்




சமிபத்தில் இரண்டு புத்தகங்களை படிக்க நேர்ந்தது. ஒன்று Chetan Bhagat எழுதிய "One Night at Call Center" என்ற புத்தகம், மற்றொன்று நடிகர் சூர்யாவின் "இப்படிக்கு சூர்யா' என்ற புத்தகம்.


1) ONE NIGHT AT CALL CENTER:

"FROM INDIA'S BEST SELLING ENGLISH NOVEL WRITER" என்கின்ற தலைப்புடன் வந்திருக்கும் புத்தகம் இது. 2005ல் வெளிவந்த புத்தகம். Chetan Bhagat இதற்கு முன் "Five Point Someone" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். நான் இன்னும் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. "One Night at Call Center" புத்தகத்தை நண்பன் ஒருவன் மிகவும் நல்ல புத்தகம் என்று கூறிக் கொடுத்தான். நானும் மிகவும் எதிர்பார்புடன் வாங்கிப் படித்தேன். புத்தகம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேறும் அபத்தங்கள்.

இப்படி தான் கதை ஆரம்பிக்கின்றது, ஓர் train compartment'ல் Chetan'னும் ஓர் இளம்பெண்ணும் தனியாக பயணம் செய்கிறார்கள். (!!!!!!...). அந்த பயணத்தில் அந்த இளம்பெண் ஓர் உண்மை கதையைச் சொல்ல சம்மதிக்கிறாள், ஆனால் அந்தக் கதையை அடுத்தப் புத்தகமாக எழுத வேண்டும் என்ற condition'வுடன். இப்படி புத்தகம் ஆரம்பத்திலேயே ஓர் சினிமாத்தனம். இந்த சினிமாத்தனம் புத்தகம் முழுவதும் தொடர்கிறது. கிளைமாக்ஸில் கடவுள் வந்து அவர்களிடம் போனில் பேசும் போதும், அடுத்து பிளான் செய்து project manager'யை ஏமாற்றும் போதும், chetan அங்கிலப் படங்களை மிஞ்சி விடுகிறார்.

IT கம்பெனியில் வேலைப் பார்பவர்கள் அனைவரும் அவர்களுடைய manager'யை வெறுக்கிறார்கள் என்ற ஓர் point'யை வைத்துக்கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார் chetan. ஷியாம், பிரியங்கா, ராதிகா, வரூண், மிலிட்டரி அங்கிள், இஷா என்று இந்த கதையில் ஆறு முக்கியக் கதாபாத்திரங்கள். ஆனால் யாரை பற்றியும் முழுமையாக சொல்லவில்லை. கால்சென்டரில் வேலை செய்பவர்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார் Chetan. ஓர் ஆங்கிலப் படத்திற்கு தேவையான Romance, Comedy, Sex, Twist என்று சகலமும் இதில் உள்ளது. ஓருவேளை இவை தான் இந்த புத்தகத்தை வெற்றியடைய செய்ததா என்று தெரியவில்லை. இப்பொழுது இந்த கதை "Hello" என்ற பெயரில் படமாக வெளிவந்து உள்ளது. என்ன கொடுமை சார் ???...

2) இப்படிக்கு சூர்யா

Landmark புத்தகக்கடையில் பல மாதங்களாக நான் பார்த்தப் புத்தகம் "இப்படிக்கு சூர்யா". ஓர் நடிகனால் என்ன எழுத முடியும் என்ற எண்ணத்தில் இந்த புத்தகத்தை தொட்டு கூட பார்த்தது இல்லை. தவிர்க்கமுடியாத மற்றும் சொல்லமுடியாத சில காரணங்களால் இந்த புத்தகம் என் கைக்கு வந்தது. ஓர் கோபத்தில் தான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன். ஆனால் அந்த புத்தகத்தின் வந்த முதல் அத்தியாயமே என்னை படிக்க தூண்டியது.

"கடல் வேண்டாம்என்று துப்புகிற கிளிஞ்சல்களைக்கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கின்ற தாழ்வு மனப்பான்மைத்தான் என் ஓரே சொத்து" என்பது தான் முதல் அத்தியாயம். நாம் நினைப்பது போல் சூர்யா ஓர் ஹீரோவாகவே பிறந்து விடவில்லை. அவருடைய பள்ளி நாட்களில் தன்னால் ஓன்றும் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையில் தவித்து இருக்கிறார். எல்லோரும் தன் தம்பியிடம் பாசமாக இருப்பதை பார்த்து தம்பியை வெறுத்து இருக்கிறார். ஏழாம் வகுப்பில் "FAIL" ஆனதால் வேறு பள்ளியில் ஏட்டாம் வகுப்பு பயில்கிறார். இவை அனைத்தும் மிகவும் யதார்தமாகவே கூறப்பட்டு உள்ளது.

மேலே கூறியவை எல்லாம் முதல் 80 பக்கங்களில் முடிந்து விடுகின்றன். அடுத்து வரும் பக்கங்கள் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை பற்றி சொல்கின்றன். இவற்றை படிக்கும் போது ஓர் சலிப்பு உண்டாகிறது. முதல் 80 பக்கங்களை மட்டும் வைத்துப் பார்த்தால், இது கண்டிப்பாக ஓர் சிறந்த "SELF MOTIVATION" புத்தகம். என்னால் 130 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை.



பின்குறிப்பு:
=======

அருண் தனது வலைபதிவில் கவிதைகள் எழுதி வருகிறான். அதன் முகவரி ::: http://www.perinba.wordpress.com/

அந்த கவிதைகளை படித்தவுடன் எனக்கு தோன்றிய கவிதை........................

தெருமுனை டீக்கடையில்
படிக்கிறேன் தினத்தந்தி

தயவு செய்து கவிதை எங்கே என்று மட்டும் கேட்காதீங்க.... முடிந்தால் முடிவில் "கன்னித்தீவு தொடர்கிறது" என்று சேர்த்துப் படிக்கவும்.

கீழே மறந்தமிழனின் கவிதை....

என் தேவைகளுக்காக
ஓர் தேவதையைத் தேடினேன்
அவளும் தேவதையாகத் தான் இருந்தால்
அவள் தேவைகள் முடியும் வரை.


என்னை அடிக்க எதையோ தேடுவது போல தெரிது????/

Tuesday, October 7, 2008

மஜ்னு

நண்பர்களுக்கு போன், sms, Orkut Scrap ஆகியவற்றின் மூலம் என்னுடைய முதல் பதிவை பற்றி அறிவித்து விட்டு feedback க்காக காத்துக்கொண்டு இருந்தேன்.

முதலில் நரேன் போன் செய்தான், என்னுடைய பதிவு நன்றாக இருப்பதாகவும் சில தமிழ் பிழைகள் இருப்பதாகவும் கூறினான். நரேன் இதுவரை எதையும் நன்றாக இல்லை, இது waste என்று சொன்னது இல்லை. அவன் கதிரவன் ஹோட்டல் உணவையே நன்றாக இருக்கு என்று சொன்னவன். யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு.

அடுத்து செல்வா பேசினான் "இனிமேல் நீ தமிழில் blog எழுதினா முகப்பேர் வந்து உன்னை அடிப்பேன்" என்றான். சங்கர் போன் செய்து எனது பதிவில் சந்திப்பிழை இருப்பதாக கூறி அரைமணி நேரம் பேசினான், ஆனால் கடைசிவரை சந்திப்பிழை என்றால் என்னவென்று அவன் சொல்லவில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் french'யை second language ஆக படித்த கவிதா எனது பதிவில் உள்ள பிழைகளை கூறியவுடன், என்து தமிழ் புலமை மிது எனக்கு சிறிது சந்தேகம் வர அரம்பித்தது.

நான் தமிழில் கடைசியாக் எழுதியது பிளஸ் 2 examக்கு என்று ஞாபகம். அதன் பிறகு நான் தமிழ் புத்தகங்கள் பலவற்றைப் படித்தாலும் நான் இது வரை தமிழில் எழுதுவதற்கு முயற்சி செய்தது கிடையாது. அதனால் தான் எனது பதிவில் பல தவறுகள் உள்ளன என்று பொய் சொல்ல மாட்டேன்.

எனக்கு சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கணம் என்றால் ஆகாது. எனக்கு பள்ளியில் வந்த ஆசிரியர்கள் அப்படி. ஒருவேளை நல்ல அழகான தமிழ் டிச்சர் யாராவது வந்து இருந்தால் நான் இந்நேரம் ஓர் தமிழ் வித்வான் ஆகியிருக்கலாம். என் எல்லா பள்ளியிலும் கணிணி ஆசிரியர்கள் மட்டும் அழகாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நான் எட்டாவது படிக்கும் போது ஓர் நாள் தமிழ் வகுப்பில் என் நண்பனிடம் "ஏன்டா நேருவை எல்லோரும் மாமா மாமானு சொல்றாங்களே, அவரு மாமா வேலை ............... " அப்படினு கேட்க, அந்த உத்தமபுத்திரன் அப்படியே தமிழ் டிச்சரிடம் சொல்லிவிட்டான். அந்த period மூமுவதும் நான் நிற்க வைக்கபட்டேன். இதன் காரணமாகவே நான் வைராக்கியமாக இரண்டு மூன்று மாதங்கள் தமிழ் புத்தகத்தை தொடாமல் இருந்தேன். அப்புறம் அப்பாவிடம் பல அடிகள் வாங்கி படித்தது தனி கதை.இப்படி தமிழுக்கும் எனக்கும் உள்ள பினைப்பு பல சண்டை சச்சரவுகளை உடையது.

என்ன தான் இருந்த போதும் நான் தமிழில் blog எழுதுவதை நிறுத்துவதாக இல்லை. தமிழ் இலக்கணத்திற்கு எதாவது நல்ல website இருந்தால் எனக்கு இ-மெயில் அனுப்பவும்.

என்னிடம் பேசுபவர்கள் எல்லாரும் இப்பொழுது என்னிடம் கேட்கும் முதல் கேள்வி யார் அந்த கவிதா ??, யாரும் என்னிடம் உனக்கும் சாருவுக்கும் எப்படி பழக்கம் என்று கேட்காததை நினைத்து எனக்கு வருத்தம் தான்.

பின்குறிப்பு::
==========
இதை எழுதி முடிக்கும் பொழுது மணி 2.25 AM. ரேடியோ மிர்ச்சியில் வைரமுத்துவின் வரிகளில் 'மஜ்னு' பட பாடல் ஒலித்து கொண்டு இருந்தது,

"இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்,என்னையும் கவிஞன் ஆக்காதே!என்னையும் கவிஞன் ஆக்காதே!"

சரத் அவன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஓர் பெண்ணிடம் அவள் பெயரை கேட்ட அன்றே "இந்த வாரம் சினிமாவுக்கு போலாமா " என்று கேட்டு இருக்கிறான். அதற்கு அவள் " சினிமாவுக்கு போயிற்று, அடுத்தது beach-க்கு போலாம் என்றால் நான் வருகிறேன்" என்று சொல்லியிருக்கிறாள். சரத் கடந்த மூன்று நாட்களாக பைக்கை துடைத்து கொண்டு இருக்கிறான்.

ரேடியோ மிர்ச்சியில் இன்னும் அந்த பாடல் ஒலித்து கொண்டு இருக்கிறது.

"ஏற்கனவே மனம் எரிமலை தானே,ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?"

Saturday, October 4, 2008

என் முதல் பதிவு

"ஏன்டா நீ தயிருக்கு உப்பு போட்டுக்கல ?" என்று வினோத் கேட்டவுடன் எனக்கு உப்பு போட மறந்த விசயம் ஞாபகம் வந்தது. தயிர் சாதத்தை முடிக்க போகிறேன், இனிமேல் உப்பு போட்டாலும் பயன் இல்லை. நான் எப்பொழுதுமே உப்பு கம்மியா தான் போட்டு சாப்பிடுவேன்.

நான் சுயநினைவில் தான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக கடை பையனிடம் அருணுக்கு ஒர் சாப்பாடு பார்சல் சொல்லிவிட்டு, "எப்பொழுதும் தயிருக்கு உப்பு போட்டுக்க மாட்டேன்" என்று வினோத்திடம் கூறினேன்.

"அதனால் தான் உனக்கு கோபமே வர மாட்டேங்குது" என்றான் வினோத்.

இதை கேட்டவுடன் எனக்கு சுறுக்கு என்றது. ஆம் நான் எப்பொழுது கடைசியாக் கோவபட்டேன், எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அப்படி என்றால் எனக்கு கோபமே வருவது இல்லையா. நான் எப்பொழுதும் cool ஆகவே இருக்கிறேனா?? இது எவ்வளவு நல்ல விசயம். எனக்கு எப்பொழுதும் கோபம் வருவது இல்லை. நான் எல்லா பிரச்சினையின் போதும் சிரித்து தான் பேசுகிறேன். நான் கோபமே படுவது கிடையாது.

நான் கோபமே படுவது கிடையாது என்பது பொய். நான் வீட்டுக்கு போகும் போது எல்லாம் கண்டிப்பாக அம்மாவிடமோ அப்பாவிடமோ கோபமாக ஒர் வார்த்தையாவது பேசி விடுவேன். அப்படி என்றால் இந்த சென்னை என்னை கோபம் இல்லாதவனாக மாற்றி விட்டதா ??. எப்பொழுதும் பிரியமானவர்களிடம் தான் நம் கோபத்தை காட்ட முடியும் என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.

அப்படினா, இங்கு யாருமே எனக்கு நெருக்கமானவர்கள் இல்லையா??. நேற்று ஹிந்து பேப்பர்ல கிறிஸ்தவ மதத்தினர் கொடுமைப்படுத்த படுகிறார்கள் என்று படித்தவுடன் கோபம் வந்ததே.

இந்த மாதிரி நினைத்து கொண்டு இருக்கும் போது, வினோத் சொன்னான் " மச்சி, உனக்கு கோபமே வராது என்பது எல்லாம் பொய். நீ கோபத்தை மறைக்கிற, எப்பொழுதும் கோபத்தை வெளியில் காட்டனும் இல்லைனா blood pressure, stress, tension இப்படி எல்லாமே வரும்" என்றான்.

அவன் சொன்னது எனக்கு பயத்தை உண்டாக்கியது. இனிமேல் கண்டிப்பாக கோவபடனும் என்று முடிவு செய்தேன். நாளைக்கு அருணை சாப்பிட கூப்பிடும் போது orkutல உட்காந்து கொண்டு " மச்சி எனக்கு பார்சல் என்பான்" அப்ப அவன் கன்னத்தில் பளார் பளார்னு விடனும்.

Friday, October 3, 2008

என் தனி மனித தேடல்

நான் என்பது நான் மட்டுமே. இந்த உலகில் நான் எப்பொழுதும் தனியாகவே பயணம் செய்கிறேன். இங்கு என் கண்ணீரையோ சிரிப்பையோ பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை. நான் வாழ்வது எதோ ஒர் கற்பனை உலகில் என்று எண்ணி கொள்ள வேண்டாம். நானும் உங்களோடு இந்த உலகில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். திசைகள் அற்று தனியாக பயணம் செய்யும் எறும்பை போல தனியாக பயணம் செய்கிறேன். எனக்கு திசை காட்டவோ துணைக்கோ யாரும் தேவை இல்லை, என்னோடு பயணம் செய்ய சக பயணியை தான் தேடுகிறேன்.