Friday, January 16, 2009

புதிர் போட்டி




மேலே உள்ள படத்தில் இருப்பது யார்?

a) மங்கள பாண்டே "அமிர் கான்"
b) விவேகானந்தர்
c) வில்லு "விஜய்"
d) இதில் யாரும் இல்லை.

பின்குறிப்பு:
==========

கேள்வியை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடையவேண்டாம். இந்த கேள்விக்கு பின்னால் பல கதைகள் இருக்கிறது.
கதை சுருக்கம்:

இந்த படத்தை எனது செல்போனின் Wallpaper'ஆக கடந்த ஒரு மாதமாக வைத்து இருக்கிறேன். இதை பார்த்துவிட்டு எனது வடமாநில நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி " Is It Mangal Pandey Aamir Khan". "No, Its Bharathi" என்றேன். அவன் கேட்ட அடுத்த கேள்வி " Who is Bharathi??".. சரி அவனுக்கு புரிகின்ற மாதிரி சொல்வோம் என்று " The Great Patriotic Tamil Poet. He wrote Vanthey Matharam in Tamil" என்றேன். உடனே அவன் " In tamil What he translated for Vanthey Matharam ??" என்றான். "Same... Vanthey Matharam only" என்றேன். நான் சொன்னது சரி தானே??...

கதை சுருக்கம் 2:

வில்லு படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு என் நண்பன் என்னிடம் சொன்னது " மச்சி, டிரைலர் கடைசியில் தலைவர் விவேகானந்தர் வேடத்தில் வருகிறார் டா"... இவன் தான் சார் உண்மையான தமிழன்.

கதை சுருக்கம் 3:

இரண்டு நாட்களுக்கு முன்னால் என் போனில் உள்ள Wallpaper'யை பார்த்துவிட்டு ஆபிஸில் உள்ள ஒருவர் என்னிடம் கேட்டது " என்னங்க விஜய் படம் எல்லாம் வச்சிருக்கிங்க... நீங்கள் விஜய் ரசிகரா ?? "... " விஜய் ரசிகரா?? " என்று அவர் கேட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.

4 comments:

Ree_mathi said...

Kathai 1 -- ok since u have mentioned he is not tamil ...
Matha RENDUM PADUUUUU KOdumai ... I did laugh like anything when i read it aana ... after that when i thought about it Sogama irthunthuchu :(

பினாத்தல் சுரேஷ் said...

அடப்பாவிங்களா.. என்ன கொடுமை இது சரவணன்?

ஆமாம், நீங்க ஏன் சுபாஷ் சந்திர போஸ் போட்டோவை வால்பேப்பரா வச்சீருக்கீங்க?

சரவண வடிவேல் said...

சுபாஷ் சந்திர போஸ்'னா.... ச.மு.க கட்சி தலைவர் சரத்குமார் தானே???

Subramania Athithan said...

machi. did u forget. dis s my photo taken in ur mob only know..photoshop la nalla work panni irukka :)