Thursday, March 26, 2009

சோகக் கதை

நேற்று இரவு போதையில் அருண் என்னிடம் சொன்னது " நீ என்னத்தான் சொன்னாலும் உன்னால் சோகமான கதை எதையும் எழுத முடியாது டா. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விசயம்தான் எழுத்தாக வெளிவருகிறது. உன்னை பொருத்தவரை உனக்கு அதிகபட்சம் கவலை தரக்கூடிய அல்லது வருத்தப்பட வைப்பது என்றால் அது "எதாவது ஒரு பெண் உன்னை பார்த்து சிரிக்கவில்லை என்பதுதான்". இதை உன் blog'ல எழுதுனா கண்டிப்பாக அது படிப்பவர்களுக்கு சோகக் கதை இல்லை, அது நகைச்சுவை கதை. துக்கம் என்பது நாம் எழுதுகிற எழுத்து ஒவ்வொன்றிலும் கூடவே வரவேண்டும்." என்று அருண் சொல்லிக்கொண்டே போனான். அருண் இன்னைக்கு அடித்த சரக்குக்கு நான் உருகாய் போல் மாட்டிக்கொண்டேன். இந்த மாதிரி குடிமகனிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காவது தினமுன் நானும் சரக்கு அடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அருண் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான் " ஒரு தகப்பன் மகளை இழந்த சோகமும், ஒரு கணவன் மனைவியை இழந்த சோகமும் கண்டிப்பாக ஒன்று அல்ல. அதை எழுதிகின்ற போது மரண சோகம் என்று ஒரே வரியில் எழுதலாம், ஆனால் அப்படி எழுதக்கூடாது. ஒரு துக்கமான விசயத்தை படிக்கும் போது அதை படிப்பவனும் கண்டிப்பாக அழ வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அந்த துக்கத்தின் ஆழமாவது தெரியவேண்டும்"

எனது வாய் சும்மா இல்லாமல் நடுவில் பேசியது " நீ சொல்கின்ற மாதிரி நானும் ஒரு சோகமானக் கதை எழுதுறேன் டா" என்றேன்.

"சோகம்'னா எதைப் பற்றி எழுதபோற"

"ம்... இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி"

"இலங்கை தமிழர் பற்றி எழுதுனா அது கதை இல்ல, ஒரு உண்மை சம்பவம் பற்றிய கட்டுரை". என்றான் அருண்.

"சரி, வேற எதை பற்றி எழுதுவது அதை நீயே சொல்"

"கதை எனபது நம் வாழ்க்கையில் நடந்த ஒன்றாக இருக்க வேண்டும், அப்பொழுதுதான் நன்றாக இருக்கும். நீ கடைசியாக எப்பொழுது அழுதாய் அதை கதையாக எழுது"

நான் கடைசியாக அழுதது எப்பொழுது சிறிது நேரம் யோசித்தேன். ஆம் போன வாரம் விடுமுறையில் வீட்டில் இருந்த போது, அம்மா வெங்காயம் வெட்டிக்கொண்டு இருந்தாள். அதை அருகில் இருந்து பார்த்த எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

இந்த கண்ணீர் கதையை அருணிடம் சொல்வதற்குள் அவன் போதை மயக்கத்தில் தூங்கி போனான்.

பின்குறிப்பு:
----------

மேலே உள்ள சோகக் கதையை ஒரு கையால் வெங்காயத்தை உரித்துக்கொண்டே படிக்கவும், அப்பொழுதுதான் அருண் சொன்னது போல் படிக்கும்போது feelings வரும்.

3 comments:

Subramania Athithan said...

Machi super da.. :) exactly says abt ur character :) but as far as i know people havin such char(athan pa cool head) will def hide their sogamss inside them lik ur luv matter.

enna machi intha bit pothuma :))

தமிழ் பிரியன் said...

இதை விட இதற்கு எதிர்பதிவு சூப்பரா இருக்கு!

பேரின்பா said...

சரவணா தூக்கத்துல எழுதினியா? எழுந்துக்கோ... தண்ணியடிக்கற பழக்கம் அருணுக்கு கிடையாது. தெரியுமில்ல...