Friday, March 20, 2009

யாருப்பா அது!!!!!

இனி அசோக் blog எழுதக் கூடாது என்று முடிவு எடுத்து இருக்கிறான். அவன் தனது வலைப்பதிவில் " அசோக்கின் அத்தைமகள் " என்ற பெயரில் சமீபத்தில் ஒரு கதை எழுதியிருந்தான். அதை படித்தவர்கள் அனைவரிடமும் சத்தியமாய் அது கதைதாங்க என்று அசோக் சொல்லியும் யாரும் நம்புவதாக இல்லை. அது அசோக்கின் உண்மை கதை என்று அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அசோக்கிற்கு இன்னொரு பிரச்சனை. Orkut'ல அசோக்கும் ஒரு account வைத்து உள்ளான். அவனுடைய profile'ல தனது வலைப்பதிவு முகவரியையும் இனைத்து இருக்கிறான்.

அசோக்கின் உண்மையான அத்தை மகள் லலிதா Orkut'ல எப்படியோ இவனை தேடி கண்டுபிடித்து, வலைப்பதிவையும் படித்துவிட்டாள். உண்மையில் லலிதா இப்பொழுது மதுரையில உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் Bsc. Computer Science இரண்டாம் ஆண்டு படித்துவருகிறாள்.

வலைப்பதிவை படித்தவுடன் அசோக்கிற்கு போன் செய்த லலிதா " டேய், அந்த அத்தை பெண் நான் இல்லைல?? யாருப்பா அந்த கவிதா?? எப்பல இருந்து இது நடந்துக்கொண்டு இருக்கிறது. சத்தியம் சினிமாவுக்கு பையன் கூட போனியா, இல்ல கவிதா கூட போனியா?? அது என்னப்பா பாட்டியாலா டிரஸ், நீ தான் வாங்கிகொடுத்தியா?? மாமாவுக்கு இந்த matter எல்லாம் தெரியுமா, உன்னை ரொம்ப நல்ல பையன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். உங்க அம்மாவுக்கு போன் செய்து கவிதாவை பற்றி விசாரிக்க சொல்றேன்." என்று அவள் பேசிக் கொண்டே போனாள்.

சொந்தகார பையன் குமாருடன் லலிதா மதுரையை சுற்றிக்கொண்டு இருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னதை, அசோக் லலிதாவிடம் கேட்க நினைத்து பின் எதற்காக பிரச்சனை என்று கேட்காமலே போனை வைத்துவிட்டான்.

3 comments:

Ree_mathi said...

Nice continuation for the original story ... :)
PS: Ashok konjam bad boyaa irunthu ... could have said something about Latha's suthal's .... hehehehe

Subramania Athithan said...

amaa antha paiyam peru ashok or saravana :)

Shakthee said...

If one fine day Ashoak will meet both lalitha and kavitha together...then wat happens???
hehehehe...!!!!!Ninachen...Rasichen...Ashoak...!!!!