Monday, April 6, 2009

அயன்


எல்லா திரைப்படங்களை போல Disco'வில் ஒரு பெண் நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறாள். Backround'ல பாடல் ஒலிக்கிறது. வில்லன் ஒரு பதினாறு வயதுமிக்க ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வருகிறான். அவளுக்கு Pepsi'யில் மயக்கமருந்து கலந்துக்கொடுக்கிறான். இதை எல்லாம் தொலைவில் இருந்து நம் ஹீரோ பார்க்கிறான். இப்பொழுது நம் ஹீரோ என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், ஹீரோ அந்த பெண்ணை காப்பாத்த வேண்டும். இது தானே நம் திரைப்பட கலாச்சாரத்தின் பண்பாடு. ஆனால் நம் ஹீரோ அதை செய்யவில்லை, வில்லன் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை நம் ஹீரோ வீடியோ படம் எடுத்து, அதை CD'யில் அந்த பெண்ணின் அப்பாவிற்கே காண்பிக்கிறான். இதன் காரணமாக அந்த அப்பா மனம் திருந்தி (!!!!) அந்த வில்லனுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்ல சம்மதிக்கிறார்.

மேலே உள்ளது எதோ ஒரு ஆங்கில படம் என்று நினைக்கவேண்டாம். அயன் படத்தில் வரும் ஒரு காட்சித்தான் அது. ( இப்பொழுது உள்ள முக்கால்வாசி பெண்கள் சூர்யாவின் ரசிகைகள் என்பதை அவர் மறந்துவிட்டார் போல ). அடுத்த காட்சியில் நம் ஹீரோ வில்லனை அடித்து நொருக்குகிறார், உடனே திரையரங்கில் விசில் சத்தம் பறக்கிறது. நம் தமிழ்நாட்டு மக்களின் திரைப்பட ரசனை எந்த அளவு மட்டமாக சென்றுக்கொண்டு இருக்கிறது என்பதற்க்கு இது ஒரு உதாரணம்.

கே.வி.ஆனந்த் பல திரைப்படங்களின் DVD'யில் இருந்து ஒவ்வொரு காட்சியாய் எடுத்து இந்த அயன் படத்தை எடுத்து இருக்கிறார். ம்... அப்புறம், நம் சூர்யா நன்றாக நடிக்கிறார், நன்றாக சண்டை செய்கிறார், நன்றாக dance செய்கிறார், நன்றாக Romance செய்கிறார். ஆனால் எனக்கு ஏனோ இந்த திரைப்படம் பிடிக்கவில்லை.

2 comments:

டக்ளஸ்... said...

Simply Super..

குடுகுடுப்பை said...

என்னை ஒத்துப்போகும் மற்றொருவர்