Thursday, August 13, 2009

வத்ஸலா

எனக்கு அவளை பிடித்து இருக்கிறது. மூன்றாவது கேபினில் அமர்ந்து இருக்கும் குமார் சொல்கிறான் "அவள் character சரியில்லையாம்". ஆமாம் இவன் பெரிய உத்தமன் மற்றவர்களை பற்றி பேசவந்துவிட்டான். குமார் பற்றி என்னிடம் நூறு கதைகள் இருக்கிறது. அத்தனையும் உண்மை கதைகள். சாருவே இவனை பார்த்துதான் "ராஸ லீலா" எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.


இது அவளை பற்றிய கதை, ஆகவே குமாருக்கு இந்த intro போதும். எனக்கு அவளை பிடிக்க பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவள் பெயர். ஓ சாரி, இன்னும் அவள் பெயரை சொல்லவில்லை. பெயர் வத்ஸலா. பெயரை உச்சரிக்கும் போது "வ-த்-ஸலா" என்றுதான் உச்சரிக்க வேண்டும். இது அவளே என்னிடம் சொன்னது. ஒருமுறை வத்ஸலா பற்றி அருணிடம் சொன்னபோது, "அது என்னடா பெயர் வத்தலா?? " என்றான் அருண். இதுவரை வத்ஸலாவை இவன் நேரில் பார்த்தது இல்லை, பார்த்து இருந்தால் இப்படி வத்தலா என்று கேட்டு இருக்கமாட்டான்.


இரண்டாவதாக பிடித்தது அவள் அழகு.சும்மா கும்கானு இருப்பாள். அது என்ன கும்கா என்கிறீர்களா?? ஒரு பெண்ணை பார்த்தவுடன் மனசுல ஒரு feelings வந்துச்சுன்னா, அது கும்கா figure என்று அர்த்தம். இந்த வார்த்தையை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது நரேன். அவன் வீடு இருப்பது ஸ்ரீ-நகர் காலணியில். இது சைதாப்பேட்டை கோர்ட் பின்புறம் உள்ளது. மிகவும் அமைதியான, ரம்மியமான் ஏரியா. அண்ணநகர், அடையாறு எல்லாம் தோற்றுவிடும்.


அடுத்து வத்ஸலாவிடம் எனக்கு பிடித்தது. இதை சொல்வதற்க்கு முன்னால் என்னை பற்றி ஒரு உண்மையை உங்களிடம் சொல்லவேண்டும். மற்றவர்கள் எதாவது சாதனை செய்தால், என் நம்மால் அதே சாதனையை செய்யமுடியாதா?? என்ற எண்ணம்தான் எனக்குவரும். நானும் செய்ய துணிந்து, அது முடியாமல் போகும் போது எனக்கே என் மீது கோபமாகவரும். inferiority complex என்பார்களே அது எனக்கு நிறையவே உண்டு. அப்படிபட்ட என்னிடம், என்னைப்பற்றி புகழ்ந்து பேசினால் எப்படியிருக்கும். இது என்மீது எனக்கே எரிச்சலைத்தான் உண்டு பண்ணியது. என்னை புகழ்ந்து பேசும் கூட்டம் என்னை எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. "நீங்கள் புகழும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை" என்று சொன்னாலும் யாரும் கேட்பதாக இல்லை. உனக்கு தன்னடக்கம் அதிகம் என்று அதற்க்கும் புகழ்ச்சி. ஆனால் வத்ஸலா இதுவரை ஒருமுறைக்கூட என்னை புகழ்ந்து பேசியது இல்லை. நான் அவளிடம் பாராட்டை பேருவதற்க்கு எத்தனையோ வழிகளை கையாண்டேன். ஆனால் அனைத்திலும் தோல்விதான். இந்த தோல்வி எனக்கு மிகவும் பிடித்துஇருந்தது. "நான் புதுசா Blog update செய்து இருக்கேன், படிச்சு பாரேன்" என்றேன். அதற்க்கு வத்ஸலா சொன்ன பதில் " போடா நீயும், உன் Blog'ம்" என்றாள்.


ஒரு கையில் காபியும், மறுகையில் செல்போனையும் வைத்துக்கொண்டு பேசும் அழகு, "போடா பக்கி" என்று திட்டுவது, ஒரு விரலால் தலைமுடியை கோடும் ஸ்டைல், இரவு ஒருமணிக்கு போன் செய்து போனை எடுத்தவுடம் " இன்னும் தூங்கலையா" என்று கேட்கும் குறும்பு, என்று எனக்கு அவளிடம் பிடித்தவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.


இப்பொழுது வத்ஸலாவின் நடவடிக்கை சரியில்லை என்று குமாரை போல் பலர் என்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு அது பற்றி கவலையில்லை. மற்றவர்கள் எது சொன்னாலும் பரவாயில்லை, தனக்கு சரி என்று தெரிவதை செய்யும் வத்ஸலாவை எனக்கு இன்னும் அதிகமாக பிடித்துவிட்டது

When they kept on questioning him, he straightened up and said to them, "If any one of you is without sin, let him be the first to throw a stone at her." - John 8:7

1 comment:

anu said...

vathala..sorry..vath-sa-la..Nice one!!