Friday, August 14, 2009

எனக்கு பிடிக்காத நாவல்

சமீபத்தில் நண்பர் ஒருவர் தன் மகளை இவளை போல் வளர்க்க வேண்டும் என்று ஒரு பெண்ணை சுட்டிக்காட்டினார், எனக்கு உடனே சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" நாவல்தான் நினைவில் வந்தது. அதன் முன்னுரையில் இப்படிவரும் " இந்த நாவல் தொடர்கதையாக வந்த சமயத்தில், பல அப்பாக்கள் தன் குழந்தைக்கு மதுமிதா என்று பெயர்வைத்தார்கள். தன் மகளை மதுமிதா போல் வளர்க்க ஆசைபட்டார்கள்".

"பிரிவோம் சந்திப்போம்" நாவலை படித்து இரண்டு வருடங்கள் மேல் இருக்கும். பலருக்கு பிடித்த புத்தகம் நமக்கு பிடிக்காமல் போகலாம். அப்படி எனக்கு சிறிதும் பிடிக்காத நாவல் பிரிவோம் சந்திப்போம். காரணம் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. மதுமிதாவின் முதிர்ச்சியில்லா கதாபாத்திரம் எனக்கு ஒருவிதமான வெறுப்பைதான் உண்டுபண்ணியது. ரகுபதி, கோவிந்தராஜ், ரத்னா போன்ற கதாபத்திரங்களை விட மதுமிதாவிற்கு முன்னுரையில் கூடுத்த முக்கியத்துவம்தான், எனக்கு இந்த நாவல் பிடிக்காமல் போனதற்க்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

நேற்று "பிரிவோம் சந்திப்போம்" நாவலை தேடி கண்டுபிடித்து மிண்டும் படிக்க தொடங்கினேன். இந்தமுறை முன்னுரையை படிக்கவில்லை. இப்பொழுதும் மதுமிதா கதாபாத்திரம் எனக்கு வெறுப்பைதான் உண்டு பண்ணியது. முழுவதும் படித்த பிறகு மதுமிதாவைவிட ரகுபதியை நினைக்கும் போதுதான் பாவமாய் இருந்தது.

யாருக்கு தெரியும் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு, மிண்டும் இந்த நாவலை படிக்கும்போது எனக்கு மதுமிதா கதாபத்திரம் பிடித்துபோகலாம். என் குழந்தைக்கு மதுமிதா என்றுகூட பெயர்வைக்கலாம்!!!!

No comments: