Wednesday, June 16, 2010

பேயோன்

கடந்த சில நாட்களாக அவரின் வலைப்பதிவை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டு இருக்கிறேன். அப்படி ஒன்றும் உலகமகா கருத்துகள் எதுவும் அவர் சொல்லவில்லை. சொல்லபோனால் அவர் பதிவில் கருத்துகள் என்று ஒன்றுமே இல்லை, கதைகளும் இல்லை, கவிதைகளும் இல்லை, கட்டுரைகளும் இல்லை. ஆனால் எதோ ஒன்று அவரின் எழுத்துகளை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது. அவர் "எழுத்தாளர் பேயோன்". பேயோன் அதுதான்யா அவர் பெயர். அது என்ன பெயர் பேயோன் என்கிறீர்களா, உலகமகா எழுத்தாளர்கள் இப்படிதான் பெயர் வைத்துக்கொள்வார்களாம். இதுவும் அவர் சொன்னதுதான்.

அவர் வலைப்பதிவு முகவரி:http://www.writerpayon.com/

சில மாதஙகளுக்கு முன்னால், பா.ரா தான் இவரை பற்றி பதிவு எழுதி எனக்கு அறிமுகப்படுத்தினார். பேயானின் உண்மையான பெயர், வயசு, இருப்பிடம் போன்றவை யாருக்குமே தெரியாது. அதனால்தான், அவரால் இந்தளவு கேலியாகவும், கற்பனையாகவும் எழுத முடிகிறது.

பேயோன் twitter'மூலம்தான் முதலில் அனைவருக்கும் அறிமுகமானார். இவரின் 1000 ட்விட்கள் புத்தகமாக வந்து இருக்கிறது.

இவர் சோதனை முயற்சிக்காக எழுதுகிறாரா ?? இல்லை, இதுதான் அவர் எழுத்து நடையா என்று எதுவும் புரியவில்லை.

அவரைபற்றி ஒன்றும் அதிகமாக நான் புகழவில்லை. நீங்களே இந்த கவிதையை படித்துபாருங்கள். பின்னூடம் பார்த்துதான் எனக்கே இது கவிதை என்பது தெரியும்.

No comments: