Saturday, September 25, 2010

கடவுளே கணபதி - மீள்பதிவு

அசோக்கின் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் அவள் வேலைக்கு சேர்ந்தாள். பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். முகத்தில் எப்பொழுதும் ஒரு பிரகாசம் இருக்கும். பெளர்ணமி அன்று பிறந்து இருப்பாள் போல.

ஒரு முறை பார்த்தால் இன்னொருமுறையும் பார்க்க தூண்டும் முகம். முகமாவது ஒருமுறைதான் பார்க்க தூண்டும், மற்றவைலாம் அவளை தொடர்ந்துப் பார்த்துக்கொண்டே இருக்க வைக்கும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் 30-28-32 என்று சொல்லலாம். ஊர் ஏதோ மதுரை பக்கம். மதுரை தியாகராஜா கல்லூரியில் B.E முடித்துவிட்டு, campus interview'வில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள். பார்ப்பதற்கு அமைதியான பெண்னை போல் காட்சியளித்தாள்.

அடுத்த ஒரு மாதத்திற்கு அலுவலகத்தில் இருந்த முக்கால்வாசி ஆண்கள் அவளைப் பற்றிதான் விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். அசோக்கின் குரூப்பில், சதிஷ் தான் அவளிடம் முதலில் பேசத் தொடங்கினான். பேசிய அடுத்த நாளே அசோக்கிடம் சதிஷ் சொன்னது “ ரொம்ப நல்ல பொண்ணுடா, நல்லா பேசுது, அப்பா Hydrabad'ல வேலை செய்கிறாராம் “.

அடுத்து அவளிடம் பேச தொடங்கியவன் பிரதாப். பிரதாப் கொஞ்சம் ஸ்டைலான ஆள். எப்பொழுதும் ipod'ல எதாவது pop பாடலை கேட்டுக்கொண்டே இருப்பான். பிரதாபும் அவளும் ஒரு நாள் Cafeteria’ல பேசிக்கொண்டு இருப்பதை அசோக் பார்த்தான். அடுத்த நாள் பிரதாப் அசோக்கிடம் சொன்னது “ டேய் அவளுக்கும் Akon பாட்டுத்தான் பிடிக்குமாம். ‘ Sorry - Blame it on me ' பாட்டை அப்படியே பாடுறாடா, ரொம்ப நல்ல பொண்ணுடா “.

இப்படி அசோக்கின் நண்பர்கள் ஒவ்வொருவரும் அவளிடம் பேசுவதில் தீவிரமாக இருந்தனர். ஏனோ அசோக்கிற்கு அவளிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. எற்கனேவே அசோக் சில பிரச்சனைகளில் இருந்ததால் அவன் அவளிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பிரதாபும், சதிஷ்’ம் தொடர்ந்து அவளிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்த மூன்று மாதத்தில் அவர்களுக்குள் சணடையே வந்துவிட்டது யார் அவளிடம் பேசுவது என்று. பிரதாப்’ம் சதிஷ்’ம் ஒவ்வொரு முறை பார்த்துக்கொள்ளும் பொழுதும் பகைவர்களை போல் பார்த்துக்கொண்டார்கள்.

அடுத்த சில நாட்களில் சதிஷ் அசோக்கிடம் சொன்னான் “ மச்சி, நேற்று நானும் அவளும் Delhi-6 படத்திற்க்கு போனோம்’டா, அதை எப்படியோ இந்த பிரதாப் தெரிச்சுக்கிட்டு அவளுக்கு போன் செய்து டிஸ்டர்ப் செய்றான்’டா. பார்த்துக்கிட்டே இரு, இந்த பிரதாப் ஒரு நாள் என்கிட்ட நல்லா வாங்க போறான்.”

பிரதாப்பிடம் அசோக் இதை பற்றி கேட்ட போது, பிரதாப் சதிஷ் மேல் புகார்களை அடுக்கிக்கொண்டே போனான். அசோகிற்க்கு இந்த போட்டியில் பிரதாப்'தான் வெற்றி பெறுவான் என்று தோன்றியது.

இது நடந்த இரண்டு மாதங்களில் அவள் இந்த இரண்டு பேரிடமும் பேசுவதை குறைத்துக்கொண்டாள். சொல்ல போனால் அவள் இவர்களிடம் பேசுவதே கிடையாது. அவள் தற்பொழுது telecom Project'ல இருக்கும் அரவிந்தனுடம் சுற்றிக்கொண்டு இருப்பதாக அனைவரும் பேசிக்கொண்டனர். அரவிந்தனும் அவளும் காதலிப்பதாக சிலர் சொல்ல அசோக் கேள்விபட்டான்.

இன்று அசோக், பிரதாப், சதிஷ் எல்லாரும் பாரில் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டு இருந்த போது, சதிஷ் சொன்னான் “ மச்சி, உங்களுக்கு matter தெரியுமா?? அரவிந்தனும், அவளும் நேற்று மாகாபலிபுரம் போய் இருக்காங்க. நான் அப்பவே அவளைப் பற்றி சந்தேகப்பட்டேன். இப்பொழுது conform ஆயிடுச்சு” என்றான்.

இதை கேட்ட பிரதாப் “ ஆமாம்’டா சதிஷ், நான் கூட அவளுடைய college பொண்ணு பவித்ராகிட்ட விசாரித்தேன். அவள் college'லயும் இப்படிதானாம். நமக்குதான் தெரியாம போச்சு.”

ஆறு மாதங்களுக்கு முன்னால் இதே பாரில் சதிஷும், பிரதாப்பும் அவளை தேவதை என்று புகழ்ந்து பேசியது ஞாபகம் வந்தது. அசோக் சிரித்துக்கொண்டான்.

சிறிது நேர அமைதிக்கு பிறகு சதிஷ் மீண்டும் அரம்பித்தான் “சரி பிரதாப், இந்த பவித்ரா எப்படி ??”.

கடவுளே கணபதி!!!!!!!

2 comments:

சுப்பிரமணி சேகர் said...

திரிஷா இல்லனா திவ்யா... இந்தப் பசங்களே இப்படித்தான் நண்பா!

தனி காட்டு ராஜா said...

குத்துங்க எசமான் ... குத்துங்க...இந்த பொண்ணுங்களே இப்படி தான் .....