Thursday, June 30, 2011

படித்ததில் பிடித்தது

இந்த மாத உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் கவிதைகளைப் படித்தீர்களா??. முக்கியமாக "புத்தகம் எரிப்பதன் பலன்கள்" மற்றும் "மூக்குத்தி அணிந்த பெண்கள்". இரண்டுமே மிகவும் அற்புதமான கவிதைகள். மனுஷ்ய புத்திரனால் மட்டுமே எழுதக் கூடிய கவிதைகள்.

அந்த கவிதைளை இங்கு பதிவிட ஆசை, ஆனால் கைவசம் தற்பொழுது புத்தகம் இல்லை. புத்தகம் இருந்த சமயம் கணினி இல்லை. ஒருவேளை இரண்டு இருந்திருந்தால், இணையம் இருந்திருக்காது. அடுத்த முறை கண்டிப்பாக அந்த கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன்.

"படித்ததில் பிடித்தது" எனற தலைப்பில் எழுத ஆரம்பித்தால், மனுஷ்ய புத்திரனின் எல்லா கவிதைகளையுமே இங்கு பதிவிட வேண்டும். அதே இந்த மாத உயிர்மை புத்தத்தில் "சேனல் 4" என்ற தலைப்பில் ஒர் கவிதை எழுதியுள்ளார், இரண்டு பக்கம் மேல் செல்லும் கவிதை அது. சேனல் 4 தற்பொழுது வெளியிட்ட ஈழத்தமிழர்கள் வீடியோ சம்மந்தப்பட்ட கவிதை, கண்டிப்பாக அந்த கவிதைக்கு பாராட்டுகள் குவியும் என்பது உறுதி.

உங்களுக்கு "மூக்குத்தி அணிந்த பெண்கள்" கவிதையைப் பிடிக்க, முக்கியமாக ஒரு விசயம் நடந்திருக்க வேண்டும். அது "மூக்குத்தி அணிந்த பெண்" யாராவது உங்களை பாதித்திருக்க வேண்டும். கண்டிப்பாக அது காதலியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது, எனது சிறுவயதில் எங்க எதிர்வீட்டு அக்கா முதல் முறையாக மூக்குத்தி அணிந்தக்கொண்டு "எப்படி'டா இருக்கு" என்று என்னிடம் கேட்ட சம்பவம்.

அதே போல் "புத்தகம் எரிப்பதன் பலன்கள்" கவிதைக்கு, "புத்தகம் படிப்பதன் மூலம் எனக்கு தெளிவு பிறக்கிறது, எனக்கு உலகம் தெரிகிறது" என்று மட்டும் சொல்லிக்கொண்டு அலையாமல், "புத்தகம் படிப்பதால் அடையும் மனதளவு மாற்றங்கள்ப் பற்றி நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்". 

"எதற்க்காக புத்தகங்களைப் படிக்க தொடங்கினோம்" என்று எப்பொழுதாவது மனதளவில் நீங்கள் வருத்தப்பட்டு இருந்தால், "புத்தகம் எரிப்பதன் பலன்கள்" கவிதை கண்டிப்பாக உங்களைப் பற்றிய கவிதை.

இதற்க்குமேல் இந்த கவிதைகள்ப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. கவிதைகளை நாமே படித்து அனுபவித்து புரிந்துக்கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்கள் சொல்லியல்ல, என்று நம்புகிறவன் நான்.

புத்தகம் படிப்பதால் அடையும் மனதளவு மாற்றங்கள் பற்றி, நானும் எழுதி ஒரு பதிவை தயார் செய்து வைத்திருந்தேன். இனி அந்த பதிவு தேவையில்லை. ஒரு கவிதையின் மூலம் அதை மிகவும் தெளிவாக சொல்ல முடியும் போது, எதற்க்கு தேவையில்லாமல் அவ்வளவு பெரிய யாருக்கும் புரியாத பதிவு. சரிதானே..

No comments: