Friday, August 10, 2012

சுதந்திர தின வாழ்த்துகள்

இன்னும் நான்கு நாட்களே உள்ளன. Facebook'ல் இந்திய கொடியை போட்டு அதற்கு கீழே "Proud to be Indian" என்று எழுதுவதற்கு. கொடியை மட்டும் போடாமல் கூடவே இந்தியாவின் வரலாற்றையும் சாதனைகளையும் சேர்த்து போட்டால் கண்டிப்பாக ஒன்று இரண்டு லைக்குகளாவது வரும். சுதந்திர தினத்தன்று குறுஞ்செய்திகளுக்கு ஒரு ரூபாய் எடுக்கவில்லை என்றால், "Wish u happy independance Day" என செல்போனில் இருக்கும் அனைத்து நம்பர்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாம். ஒருவேளை ஒரு ரூபாய் எடுத்தாலும், பெண் தோழிகளுக்கு மட்டும் வாழ்த்து செய்தி அனுப்பி நமது நாட்டுப்பற்றை நிலைநாட்டிக்கொள்ளலாம். நீங்கள் இந்த குறுஞ்செய்தி அனுப்பும் வேலையை "இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக" என்று காட்டப்படும் எதாவது ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டே கூட செய்யலாம்.

முன்னொரு காலத்தில் சுதந்திர தினம் என்பது "மிட்டாய்" கிடைக்கும் நாள், அதுவும் ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாய்களின் மவுசு குறைந்த இந்த காலத்தில், சுதந்திர தினம் என்பது "ஒரு விடுமுறை நாள்".

வெள்ளையர்களை விரட்டி வாங்கிய சுதந்திரம், உண்மையாகவே நமக்கு தேவைதானா??. அந்நியர்களை விரட்டிவிட்டு, இப்பொழுது அவர்களுக்கு தானே நமது பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைத்துக்கொண்டு இருக்கிறோம். இதற்காகவா நாம் சுதந்திரம் பெற்றோம்.

எல்லா துறைகளிலும் அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம். முதலில் 25 சதவீதம், பின்னர் 49%, 51% என்று போய் இப்பொழுது 100 சதவீத அந்நிய மூதலீட்டிற்கு நமது அரசாங்கம் ஏற்பாடுகளை  செய்துக்கொண்டு இருக்கிறது. கேட்டால் இதற்கு உலகமயமாக்கல் என்று பெயர் வேறு.

அரசாங்கத்தை மட்டும் சொல்லி குற்றம் இல்லை. இது நமது அனைவரின் குற்றம். நான் வேலைப் பார்க்கும் கம்பெனி அமெரிக்க கம்பெனி என்று சொல்லிக்கொள்ளதானே நமக்கும் ஆசை. இது என்னையும் சேர்த்துதான்.

No comments: