Wednesday, July 10, 2013

MMTC'யும் 16,000 கோடி ரூபாயும்.

முதலில் ஒரு விசயம், இந்தியாவின் Dis-Investment Policy சரியா, தப்பா என்பதைப் பற்றியது அல்ல இந்த குறிப்பு. எண்களைப் பற்றிய ஒரு சின்ன விளையாட்டு அவ்வளவே.

சென்ற ஆண்டு செபி ஆணையிட்டப்படி பங்குசந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் குறைந்தது 25% சதவீத பங்கினையாவது பொதுசந்தையில் ( பொதுசந்தை என்பது பொதுமக்கள், மியூசுவல் பண்ட், நிதி நிறுவனங்கள் என்று எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்) விற்று இருக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் ஓனர்களுக்கு 75% சதவீத பங்குகள் மட்டுமே இருக்க வேண்டும். இந்த ஆணை அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் அரசு நிறுவனங்கள் என்றால் இந்த சதவீத எண்கள் 10%, 90%. இப்பொழுது நெய்வேலியில் நடந்துக்கொண்டு இருக்கும் போராட்டத்துக்கும் இது தான் காரணம்.

இந்த ஆணையை செயல் முறைக்கு கொண்டுவர ஏதுவாக ஏற்கனவே லிஸ்ட் செய்யப்பட்டு உள்ள நிறுவனங்கள் OFS மூலம் புதிய ஷேர்களை விற்கலாம் என்று செபி சொன்னது.

OFS என்றால் என்ன?? ஏதற்காக 75% , 25 %?? ஏதற்காக இப்படி ஒரு ஆணை? இதனால் யாருக்கு பயன்?? என்ற கேள்விகளுக்கு பதில் தேடிக்கொண்டு போனால், பின்னர் இந்த பதிவு கன்னி தீவு போல் நீண்டுவிடும். ஆகவே மேட்டருக்கு வருவோம்.

பங்குசந்தையில் உள்ள அனைவருக்குமே MMTC'யைப் பற்றி தெரிந்து இருக்கும். MMTC ஒரு அரசு நிறுவனம். ஒரு காலத்தில் இதன் ஷேர் 18,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. பின்னர் Spliting மூலம் 1000 ரூபாய்க்கு வந்தது. இது பழைய கதை, இப்பொழுது

MMTC'யை Dis-Investment Policy காரணமாக OFS மூலம் அதன் ஷேர்களை கடந்த மாதம் விற்றார்கள். OFS'யில் ஒரு ஷேரின் விலை 60 ரூபாய் என்று நிர்ணயம் செய்தார்கள்.

இந்த விற்பனை மூலம் இந்திய அரசாங்கத்துக்கு கிடைத்த பணம் 560 கோடி ரூபாய். இந்த விற்பனை நடந்த போது MMTC'யின் ஒரு ஷேர் 200 ரூபாய்க்கு பங்குசந்தையில் விற்றுக்கொண்டு இருந்தது.





200 ரூபாய்க்கு விற்ற ஷேரினை அரசாங்கம் 60 ரூபாய்க்கு விற்றதால், MMTC நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து குறைய தொடங்கியது. இன்றைக்கு NSE'யில் அதன் விலை 67.80.

அதாவது MMTC ஷேரினை விற்பனை செய்ததுமூலம் அரசாங்கத்துக்கு லாபம் 560 கோடி ரூபாய். ஆனால் MMTC கம்பெனியில் மதிப்பு 16,000 கோடி கம்மியாகி உள்ளது. இதுவே MMTC ஒரு தனியார் நிறுவனம் என்றால் இப்படி நடந்து இருக்குமா?? MMTC நிறுவனத்தை Dis-Investment செய்யாமல், de-list செய்திருந்தால் இந்த சரிவை மிகவும் சுலபமாக தடுத்து இருக்கலாம்.

இல்லை, Dis-Investment மூலம் liquidity அதிகமாகும். MMTC நிறுவனத்தின் உண்மையான மதிப்பு இதுதான் என்கிறார்கள். சரி, அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே. இப்பொழுது MMTC'யின் மதிப்பை அதிகமாக காட்டுவதால் யாருக்கு என்ன நஷ்டம்.

எது எப்படியோ, நான் MMTC ஷேர் எதையும் வாங்கவில்லை. MMTC ஷேர் வாங்காமயே எனது Portfolio 70% சதவீத நஷ்டத்தில்தான் போய்க்கொண்டு இருக்கிறது.


No comments: