Tuesday, October 7, 2008

மஜ்னு

நண்பர்களுக்கு போன், sms, Orkut Scrap ஆகியவற்றின் மூலம் என்னுடைய முதல் பதிவை பற்றி அறிவித்து விட்டு feedback க்காக காத்துக்கொண்டு இருந்தேன்.

முதலில் நரேன் போன் செய்தான், என்னுடைய பதிவு நன்றாக இருப்பதாகவும் சில தமிழ் பிழைகள் இருப்பதாகவும் கூறினான். நரேன் இதுவரை எதையும் நன்றாக இல்லை, இது waste என்று சொன்னது இல்லை. அவன் கதிரவன் ஹோட்டல் உணவையே நன்றாக இருக்கு என்று சொன்னவன். யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு.

அடுத்து செல்வா பேசினான் "இனிமேல் நீ தமிழில் blog எழுதினா முகப்பேர் வந்து உன்னை அடிப்பேன்" என்றான். சங்கர் போன் செய்து எனது பதிவில் சந்திப்பிழை இருப்பதாக கூறி அரைமணி நேரம் பேசினான், ஆனால் கடைசிவரை சந்திப்பிழை என்றால் என்னவென்று அவன் சொல்லவில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் french'யை second language ஆக படித்த கவிதா எனது பதிவில் உள்ள பிழைகளை கூறியவுடன், என்து தமிழ் புலமை மிது எனக்கு சிறிது சந்தேகம் வர அரம்பித்தது.

நான் தமிழில் கடைசியாக் எழுதியது பிளஸ் 2 examக்கு என்று ஞாபகம். அதன் பிறகு நான் தமிழ் புத்தகங்கள் பலவற்றைப் படித்தாலும் நான் இது வரை தமிழில் எழுதுவதற்கு முயற்சி செய்தது கிடையாது. அதனால் தான் எனது பதிவில் பல தவறுகள் உள்ளன என்று பொய் சொல்ல மாட்டேன்.

எனக்கு சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கணம் என்றால் ஆகாது. எனக்கு பள்ளியில் வந்த ஆசிரியர்கள் அப்படி. ஒருவேளை நல்ல அழகான தமிழ் டிச்சர் யாராவது வந்து இருந்தால் நான் இந்நேரம் ஓர் தமிழ் வித்வான் ஆகியிருக்கலாம். என் எல்லா பள்ளியிலும் கணிணி ஆசிரியர்கள் மட்டும் அழகாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நான் எட்டாவது படிக்கும் போது ஓர் நாள் தமிழ் வகுப்பில் என் நண்பனிடம் "ஏன்டா நேருவை எல்லோரும் மாமா மாமானு சொல்றாங்களே, அவரு மாமா வேலை ............... " அப்படினு கேட்க, அந்த உத்தமபுத்திரன் அப்படியே தமிழ் டிச்சரிடம் சொல்லிவிட்டான். அந்த period மூமுவதும் நான் நிற்க வைக்கபட்டேன். இதன் காரணமாகவே நான் வைராக்கியமாக இரண்டு மூன்று மாதங்கள் தமிழ் புத்தகத்தை தொடாமல் இருந்தேன். அப்புறம் அப்பாவிடம் பல அடிகள் வாங்கி படித்தது தனி கதை.இப்படி தமிழுக்கும் எனக்கும் உள்ள பினைப்பு பல சண்டை சச்சரவுகளை உடையது.

என்ன தான் இருந்த போதும் நான் தமிழில் blog எழுதுவதை நிறுத்துவதாக இல்லை. தமிழ் இலக்கணத்திற்கு எதாவது நல்ல website இருந்தால் எனக்கு இ-மெயில் அனுப்பவும்.

என்னிடம் பேசுபவர்கள் எல்லாரும் இப்பொழுது என்னிடம் கேட்கும் முதல் கேள்வி யார் அந்த கவிதா ??, யாரும் என்னிடம் உனக்கும் சாருவுக்கும் எப்படி பழக்கம் என்று கேட்காததை நினைத்து எனக்கு வருத்தம் தான்.

பின்குறிப்பு::
==========
இதை எழுதி முடிக்கும் பொழுது மணி 2.25 AM. ரேடியோ மிர்ச்சியில் வைரமுத்துவின் வரிகளில் 'மஜ்னு' பட பாடல் ஒலித்து கொண்டு இருந்தது,

"இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்,என்னையும் கவிஞன் ஆக்காதே!என்னையும் கவிஞன் ஆக்காதே!"

சரத் அவன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஓர் பெண்ணிடம் அவள் பெயரை கேட்ட அன்றே "இந்த வாரம் சினிமாவுக்கு போலாமா " என்று கேட்டு இருக்கிறான். அதற்கு அவள் " சினிமாவுக்கு போயிற்று, அடுத்தது beach-க்கு போலாம் என்றால் நான் வருகிறேன்" என்று சொல்லியிருக்கிறாள். சரத் கடந்த மூன்று நாட்களாக பைக்கை துடைத்து கொண்டு இருக்கிறான்.

ரேடியோ மிர்ச்சியில் இன்னும் அந்த பாடல் ஒலித்து கொண்டு இருக்கிறது.

"ஏற்கனவே மனம் எரிமலை தானே,ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?"

1 comment:

Comrade Ragul Anand said...

all your PINKURIPU are more interesting then your content..