Friday, December 26, 2008

சாரு நிவேதிதாவின் பத்து புதிய புத்தகங்கள்

ஜனவரி பத்தாம் தேதி முதல் சென்னை புத்தக கண்காட்சி தொடங்க இருக்கிறது. மிகுந்த எதிர்பார்புடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் சாரு நிவேதிதாவின் பத்து புதிய புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறது. நான் மிகவும் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் சாரு நிவேதிதா.

2008'ம் ஆண்டு நடுவில் இருந்து தான் சாருவின் எழுத்துக்களை படிக்க தொடங்கினேன். அவரின் இனையதளத்தில் ( http://www.charuonline.com/ ) இருந்து தான் எனக்கு அவரின் எழுத்துக்கள் அறிமுகம் ஆனது. சாரு என் ஊர்காரர் என்று தெரிந்த பின்னர் அவரின் எழுத்துக்கள் மீது ஒரு தனி ஈடுபாடு உருவானது.

சாருவின் பழைய கதைகள் எதுவும் தெரியாமல் தான் அவரின் எழுத்துக்களை படிக்க தொடங்கினேன். அதனால் அவரின் எழுத்துக்கள் முதலில் எனக்கு பயங்கர அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அனைவரும் பேசவே வெட்கபடுகின்ற, பயப்படுகின்ற விஷயங்களை சாருவால் மிகவும் சாதாரன முறையில் எழுத முடிகின்றது. சிறிது சிறிதாக அவரை பற்றியும், அவருடைய பழைய கதைகளையும் படித்த போது எனக்குள் உருவான சாருவின் பிம்பம் எனக்கு பயத்தை உண்டு பண்ணியது. அவருக்கு மனநோய் எதாவது இருக்கலாம் என்று கூட நான் பயந்தது உண்டு.

சாரு தன் வாசகர்களுக்கு சொல்வது " உனக்கு பிடித்து இருந்தால் படி, இல்லை என்றால் படிக்காமல் விட்டுவிடு ". சாருவுக்கு தெரியும் தன் எழுத்தை ஒருமுறை படித்தவன் பிடிக்கின்றதோ இல்லையோ தொடர்ந்து படிப்பான் என்று. இதன் காரணமாக தான் சாருவின் எழுத்துக்கள் அதிக அளவு விமர்சிக்கப்படுகின்ற என்று நினைக்கிறேன்.

இப்பொழுது உள்ள சாரு, சுஜாதா விட்டு சென்ற இடத்தை பிடிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. அதற்காக தான் ஒரே நேரத்தில் பத்து புத்தக்ங்களை வெளியிடும் முயற்சி என்று நினைக்கிறேன். சாருவின் எழுத்துக்கள் எக்ஸிஸ்டென்ஷியலிசம் (Existentialism) சார்பான எழுத்துக்கள் என்று கேள்விபட்டு அதைபற்றி இன்டர்நெட்டில் தேட ஆரம்பித்தேன். ஆனால் அதை பற்றி இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை, அதற்கு பதிலாக பின்நவீனத்துவம், postmodernism என்று புதிய கேள்விகள் தான் முளைத்து உள்ளது.

ஸீரோ டிகிரி புத்தகத்தில் கடைசி 30 பக்கங்களில் சாரு தன் மகளுக்கு எழுதி இருக்கும் கவிதைகள் படித்த அனைவரும் கண்டிப்பாக கண்ணிர் சிந்தி இருப்பார்கள்.

சாருவின் மன்னிக்கவும் பெருமாளின் "குட்டிக் கதைகள் நூற்றியெட்டு " புத்தகமாக வெளிவர இருக்கிறது. இந்த தமிழின் முதல் இன்டர்நெட் தொடர்கதையை எற்கனேவே அவரின் வலைபதிவில் படித்து விட்டேன், இருந்தாலும் இந்த புத்தகத்தை வாங்கி ஒரே முச்சில் படித்து முடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இப்படி தான் சாரு தன் வாசகர்கள் அனைவரையும் தன் எழுத்தால் கட்டிப்போட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

குட்டிக் கதைகள் நூற்றியெட்டில் 38வது கதை படித்துவிட்டு நானும் என் நண்பனும் இரவு 12 மணிக்கு கண்டிப்பாக ஒரு குவார்ட்டர் போட வேண்டும் என்று ஒவ்வொரு டாஸ்மார்க் கடையாக அலைந்தது ஒரு தனிக்கதை.

எனக்கும் என் நண்பனுக்கும் சாருவின் கதைகளில் உள்ள நம்பகதன்மை பற்றி எப்பொழுதும் விவாதம் நடந்து கொண்டே இருக்கும். அவரின் எழுத்தில் எது உண்மை, எது பொய், எது கற்பனை என்று விவாதித்து கொண்டே இருப்போம். "குட்டிக் கதைகள் நூற்றியெட்டில்" வருகின்ற ஜெஸ்ஸியும், பெருமாளின் மகளும் எத்திராஜ் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று வரும். அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள என் நண்பன் அவனுக்கு தெரிந்த எத்திராஜ் கல்லூரி மாணவிகளிடம் எல்லாம் "குட்டிக் கதைகள் நூற்றியெட்டு" கதையை சொல்லி விசாரித்து இருக்கான் (அவனுக்கு நண்பர்கள் வட்டம் அதிகம் ). அதில் ஒர் பெண் இவனை கொலை செய்யவே வந்து விட்டாள்.

அதே "குட்டிக் கதைகள் நூற்றியெட்டின்" முடிவுரையில் இந்த கதையால் தன் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகி உள்ளது என்று சாரு எழுதிய போது, இது எந்த அளவு உண்மை என்ற கேள்வி தான் எனக்கு உருவாகியது.

சாருவின் புதிய புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு மிண்டும் உங்களை இங்கு சந்திக்கிறேன்.

பின்குறிப்பு:
==========

இது வரை வலைபதிவிலும், இ-மெயிலிலும் மட்டுமே பேசி கொண்டு இருக்கும் நானும் தோழி வனிதாவும் இந்த சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம் என்று இருக்கிறோம். நான் சென்னை புத்தக கண்காட்சியை அவலுடன் எதிப்பார்க்க இதுவும் ஒரு காரணம்.

2 comments:

A N A N T H E N said...

:)

Subramania Athithan said...

//பின்குறிப்பு//

wil call u abt dis matter saga :)