Tuesday, March 3, 2009

நானும் செய்தித்தாளும்

இப்பொழுது எல்லாம் Newspaper மன்னிக்கவும் செய்தித்தாள்களை படிக்கவே வெறுப்பாக இருக்கிறது. எந்த செய்தித்தாள்களை பிரித்தாலும் எழுத்துக்கள் கொட்டிக்கிடப்பது போல் ஒரு தோற்றத்தைத்தான் தருகின்றன. படிக்கவே பிடிக்கவில்லை. இந்த எண்ணம் எல்லாம் கடந்த ஒரு மாதமாகதான்.

எனக்கு செய்தித்தாளுக்கும் உள்ள பந்தம் மிகவும் பெரியது. நான் செய்தித்தாள்களை படிக்க ஆரம்பித்தது எனது ஜந்தாம் வகுப்பில் இருந்துத்தான். எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியை பெயர் சரியாக ஞாபகம் இல்லை. காலையில் முதல் வகுப்பு ஆரம்பித்தவுடனே மாணவர்கள் அனைவரும் ஸ்கூல் டைரியை அந்த ஆசிரியரிடம் காட்ட வேண்டும். ஸ்கூல் டைரியில் அன்றைய பாடத்தை பையன் வீட்டில் படித்தான் என்பதற்கு சான்றாக பெற்றோர்களின் கையெழுத்தும், அன்றைய செய்தித்தாள்களின் முக்கிய செய்திகளும் இருக்க வேண்டும். பெற்றோர்களின் கையெழுத்து இல்லை என்றால் கூட அந்த ஆசிரியர் விட்டுவிடுவார், ஆனால் முக்கிய செய்திகளை அதில் எழுதவில்லை என்றால் அந்த மாணவன் செத்தான்.

என்ககு இப்படித்தான் செய்தித்தாள்கள் படிக்கும் ( முதல் பக்கத்தை மட்டும் ) பழக்கம் ஆரம்பித்தது . எனக்கு அப்பொழுது எல்லாம் செய்திகளின் தீவிரம் தெரியாது. தினமலர் முதல் பக்கத்தில் உள்ளதை அப்படியே பார்த்து எழுதிக் கொண்டு போவேன்.

ஆறாம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்ந்தவுடன் தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் நின்றுவிட்டது. எங்கள் வீட்டில் காலையில் எழுந்தவுடன் என் அப்பா " பேப்பர் வந்துருச்சா??" என்று கேட்டுக் கொண்டே வீட்டு வாசலுக்கு போவதும், ஒரு கையில் பேப்பரும் மறுகையில் காபியும் வைத்துக்கொண்டு ஸ்டைலாக பேப்பர் படிப்பது இன்னும் என் நினைவில் இருக்கிறது. இது தான் என்னை மீண்டும் செய்தித்தாள்ளை படிக்க தூண்டியது. நானும் அப்பாவை போல் கையில் காபியுடம் செய்திதாள்களை எடுத்து படம் பார்த்துக்கொண்டு இருப்பேன். நான் படம் மட்டும்தான் பார்க்கிறேன் என்று தெரிந்தும், என்னிடம் இருந்து பேப்பரை என் அப்பா வாங்க மாட்டார். நானே தரும்வரை காத்துக்கொண்டு இருப்பார்.

டெய்லர் மாமாவின் கடை, மூடி வெட்டும் சலூன் கடை என்று எங்கு சென்றாலும் நான் உடனே எடுத்து படிப்பது "சிந்துப்பாத்" படக்கதையைதான். சிந்துப்பாத கதையை ஒரு வருடம் இடைவெளி விட்டு படித்தாலும், கதை நாம் விட்டுச் சென்ற இடத்தில் இருப்பது போலதான் இருக்கும். இது தான் சிந்துப்பாத் கதையில் சிறப்பு..:)

ஒன்பதாம் வகுப்பில் இருந்துதான் செய்திகளை தீவிரமாக படிக்க தொடங்கினேன் என்று ஞாபகம். பள்ளி வகுப்பில் நானும் பிரகாஷும் தினமும் அன்றைய செய்திகளை பற்றி விவாதிப்போம். பிரகாஷுக்கு என்னை விட ஞாபகசக்தி அதிகம். எல்லா செய்திகளையும் துள்ளியமாக சொல்வான். எனக்கோ பிரிட்டனின் புதிய ஜனாதிபதி பெயரை எத்தனை முறை படித்தாலும் நினைவில் தங்காது.

கல்லூரி விடுதியில் சேர்ந்தவுடனே நான் பார்த்த முதல் நண்பன் " The Hindu " செய்தித்தாள்தான். பின்னர் Bonny'யுடன், இந்த Bonny'யை பற்றி தனியாக பதிவே போடலாம் அந்த அளவு வித்தியாசமானவன். என்னுடைய Role-Model அவன். எங்கே விட்டேன்,,ம், பின்னர் Bonny'யுடன் எற்பட்ட பழக்கத்தினால் New Indian Express, Economic Times என்று படிக்கும் செய்தித்தாள்களின் எண்ணிக்கை அதிகரித்தது. Bonny'யில் ரூமில் எப்பொழுதும் கண்டிப்பாக மூன்று விதமான செய்தித்தாள்களாவது இருக்கும். அவன் எப்பொழுது அதை எல்லாம் படிப்பான், அல்லது எற்கனவே படித்து முடித்து விட்டானா என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் எல்லாம் செய்திகளையும் புட்டுப் புட்டு வைப்பான்.

இப்படி எனக்கும் செய்தித்தாளுக்கும் உள்ள உறவை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் திடீர் என்று கடந்த ஒரு மாதமாக செய்தித்தாள்களை பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது. செய்தித்தாள் என்று இல்லை, எவை எல்லாம் முன்னால் பிடித்ததோ அவை எல்லாம் எனக்கு இப்பொழுது வெறுப்பை தருகின்றன். ஒரு வேளை ஒரு பெண் என் மனதை டிஸ்டர்ப் செய்வது தான், இதற்கு எல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு:
============

" என்னடா இந்த பதிவில் பெண் என்ற வார்த்தையே இல்லையே " என்று நண்பன் கேட்டதால் கடைசியில் அந்த வரியை சேர்க்க வேண்டியதாய் போயிற்று. நம்புங்க பா....

3 comments:

Subramania Athithan said...

எனது school la இது வழக்கம்தான் சகா. but used to read newspaper from back to front. think 90% people havin d same habit. :) s.. bonny wil read all news papers in all rooms(hostel) :) he knows all d football player names. bcoz of him only we used to watch foolball matches at midnyt in hostel :) gotta post seperately abt him. wil do later.

அது சரி அந்த பெண் பெயரென்ன சகா...... :)

Ponnarasi Kothandaraman said...

Nanban sonnathala Pen add paningalo? :P Enna koduma saravana ithu!

பேரின்பா said...

ஏனுங்க ஆபீசர் நீங்க பொண்ணுங்கள பத்தியே எழுதறீங்க?