Monday, June 8, 2009

கனவு

கடந்த மூனறு நாட்களாக ஓரே கனவு மீண்டும் மீண்டும் வந்துக்கொண்டு இருக்கிறது. முதல் நாள் கனவில் நான் இருட்டில் நடந்து வந்துக்கொண்டு இருக்கிறேன், எதிரில் ஒரு உருவம் என்னை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இருவரும் எதிரெதிரே நடந்து வந்தாலும், எங்களுக்குள் இருந்த இடைவெளி குறையவேயில்லை. கடைசிவரை அந்த உருவத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

இரண்டாம் நாள் கனவில் நான் நடந்து சென்று கொண்டு இருக்கிறேன். என்னை பின்னால் ஒரு உருவம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நான் திரும்பி அந்த உருவத்தை பார்க்கிறேன், இருட்டில் முகத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

மூன்றாம் நாள் கனவில், நான் அந்த உருவத்தை பின் தொடர்ந்து செல்கிறேன். எப்படியாவது முகத்தை பார்த்துவிடும் எண்ணத்தில், நான் வேகமாக நடந்தால் அந்த உருவமும் வேகமாக நடக்கிறது. கடைசிவரை எனக்கு அந்த உருவத்திற்க்கும் இடைவெளி குறையவேயில்லை.

எனோ இந்த கனவுகள் என்னை எதோ ஒரு விதத்தில் பாதித்தது. எப்பொழுதும் அந்த உருவத்தின் பற்றிய எண்ணமாகவே இருந்தது. சிவாவிடம் இந்த கனவுகளை பற்றி சொன்னவுடன் அவன் கேட்ட முதல் கேள்வி " அது ஆணா, பெண்ணா ??" . மேலும் கனவுகளை தொடர்ந்து ஏழு நாட்கள் ஒரு டைரியில் எழுதிவந்தால் கனவுகளே வராது என்றான்.

எப்படியும் அந்த உருவத்தை பார்த்துவிடுவது என்று முடிவுசெய்து, கொஞ்சம் விரைவாகவே அன்று படுக்கசென்றேன். படுக்கை அருகில் பேனாவும், ஒரு டைரியும் வைத்து இருந்தேன், கனவில் இருந்து விழித்தவுடன் அதனை பற்றி எழுதுவதற்கு.

மீண்டும் கனவில் அந்த உருவம் வந்தது. ஆனால் இப்பொழுது இருள் அல்ல, பனி விழும் ஒரு அதிகாலை பொழுது. நானும் அந்த உருவமும் ஒன்றாக நடந்துக்கொண்டு இருக்கிறோம். எனக்கு நிமிர்ந்து அந்த உருவத்தை பார்க்க பயம். " என் முகத்தை பார்க்க பயமா ?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. நான் நிமிர்ந்து பார்க்கிறேன், அது ஒரு பெண்ணின் முகம். அழகான முகம், எங்கேயோ பார்த்த முகம், இல்லை இல்லை நான் எப்பொழுதும் அருகில் பார்க்கும் ஒரு முகம். ஆனால் அது யாரின் முகம் என்று சரியாக சொல்லமுடியவில்லை.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு " நீ யார் ?" என்றேன். " நான்தான் உன் காதல் ' என்றாள் அந்த பெண். " கடந்த நான்கு நாட்களாக நான் உன் கூடவே வந்துக்கொண்டு இருக்கிறேன், ஏன் என்னிடம் நீ பேசவில்லை " என்று உரிமையுடன் கேட்டாள். என் கையில் இருந்த பேனாவையும், டைரியையும் பார்த்தாள்.

" இனியும் நான் உன்னை தொடர்வதாக இல்லை, இப்பொழுதே நான் உன்னைவிட்டு பிரிந்து போகிறேன் " என்று சொல்லிவிட்டு உடனே மறைந்து போனாள். கனவும் கலைந்தது.

இப்பொழுது எல்லாம் கனவுகள் வருவது இல்லை. ஆனால் நான் எப்பொழுதும் படுக்கை அருகில் பேனாவும், டைரியும் வைத்து உள்ளேன், கனவுகளை எழுதுவதற்க்கு,

1 comment:

பேரின்பா said...

அந்த கனவைப்பற்றிய உன் விவரனை உண்மையாய் இருந்தது... நிஜ உலக மயக்கங்கள் கனவுகளாக வரும் என்பார்கள். உனக்கு என்ன ஏக்கம்?