Friday, June 26, 2009

மூன்று சம்பவங்கள்

சம்பவம் - 1

வலைப்பதிவு தோழி ஒருத்தி, பெயர் காவ்யா. அவளுடைய வாழ்க்கையில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிக்களை தனது வலைப்பதிவில் எழுதி வருபவள். அவளுடைய காதல் சமீபத்தில் Break ஆகிவிட்டது. இது காவ்யாவின் இரண்டாவது காதல். காவ்யாவின் முதல் காதலனுக்கு ஒரு வருடம் முன்னர் திருமணம் நடந்துவிட்டது. காவ்யா தனது வலைப்பதிவில் கடைசியாக எழுதி இருப்பதின் சுருக்கம் "என்னுடைய முதல் காதலனை நேற்று Facebook'யில் பார்த்தேன். Online'யில் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டோம். என்னுடைய காதல் தோல்வியை அவனிடம் பகிர்ந்துக்கொண்டேன், ஏதோ என் மனப்பாரம் குறைந்தது போல ஒரு எண்ணம். பிறகு போனில் இரவு முழுவதும் எதை பற்றியோ பேசிக்கொண்டு இருந்தோம். வரும் ஞாயிறு மாலை சந்திப்பதாக முடிவு செய்து உள்ளோம். அவனை கடைசியாக பார்த்து ஒரு வருடம் மேலாகிவிட்டது. நான் செய்வது தவறு என்று எனக்கு தெரியும்."

சம்பவம் - 2

என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், பெயர் குரு. குருவும் ஒரு பெண்ணும் மிகவும் தீவிரமாக காதலித்தனர். அந்த பெண் வீட்டில் அவளை கட்டாயபடுத்தி வேறு ஒரு பையனுடன் கல்யாணம் செய்து வைத்தனர். இது நடந்து ஒரு வருடம் மேல் இருக்கும். அந்த பெண்ணின் கணவர் ஒரு பெரிய கம்பேனியில் Sales Department'ல் வேலை செய்பவன். Meeting Meeting என்று எதாவது ஊருக்கு அலைந்துக்கொண்டு இருப்பான். குரு கடந்த சில மாதங்களாக தன் பழைய காதலியுடன் போனில் இரவு முழுவது பேசிக்கொண்டு இருக்கிறான். இதை பற்றி அவன் என்னிடம் சொன்னது "மச்சி, நான் செய்றது சரியா, தப்பானு எனுக்கு தெரியல டா??"

சம்பவம் - 3

கர்ணாவிற்கு திருமணம் நட்ந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது. குழந்தைகள் இரண்டுமே பயங்கர சுட்டி. கர்ணாவின் மனைவி Income-Tax Department'ல் நல்ல வேலையில் இருக்கிறாள். சமீபகாலமாக கர்ணாவின் பழக்கவழக்கத்தில் மாற்றம் தெரிந்தது. ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவதாக எனக்கு செய்தி வந்தது. நேற்று E.C.R'யில் கர்ணாவும் ஒரு பெண்ணும் கட்டிப் பிடித்துக்கொண்டு பைக்கில் போவதை பார்த்தேன். இதை பற்றி அவனிடம் விசாரித்தபோது அவன் சொன்ன பதில் "இதுல என்ன தப்பு இருக்கு சரவணா??".

Sunday, June 21, 2009

நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா...

கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த நேரம். எவனை பார்த்தாலும் Campus Interview’யை பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தான். நான்காம் ஆண்டு ஆரம்பத்திலேயே Placement’ம் தொடங்கிவிட்டது (நான் சொல்வது 2007ம் ஆண்டு).

இதுவரை பத்து கேம்பஸ் இண்டர்வியூ போயும் ஒன்றில் கூட Select’ஆகவில்லை. அப்பொழுது மறைமலை நகரில் தங்கியிருந்தேன். இண்டர்வியூ நடப்பது எல்லாம் சத்யபாமா, ஜோசப், ஜேப்பியார். வெங்கடேச்வரா போன்ற கல்லூரிகளில். காலையில் ஜந்து மணிக்கு எழுந்து, ஆறு மணி பஸ்யை பிடித்து ஏட்டு மணிக்கு Interview நடக்கும் கல்லூரிக்கு போனால், “வாடா மச்சி, ஏண்டா லேட்?” என்று உரிமையுடன் கேட்க ஒரு கூட்டம் இருக்கும். “உனக்கு என்னடா, இந்த தடவை கண்டிப்பாக செலக்ட் ஆயிடுவ!!!” என்று புகழ்ச்சி வேறு, பத்து இண்டர்வியூவில் ஆறு தடவைக்கு மேல் Written Exam பாஸ் செய்தவன் என்பதால் எனக்கு இந்த வஞ்சபுகழ்ச்சி அணி.

இண்டர்வியூ நடப்பது ஜோசப், ஜேப்பியார் போன்ற கல்லூரி என்றால் எங்கள் அனைவருக்கும் ஒரே சந்தோசமாக இருக்கும், ஏன்னென்றால் மதியானம் கண்டிப்பாக பிரியாணி உண்டு அதுவும் இலவசமாக (அப்பொழுது எல்லாம் ஜேப்பியார் கடவுளை போல காட்சியளிப்பார்). அதிர்ஷ்டம் இருந்தால் காலையில் இட்லிக்கே சிக்கன் கிடைக்கும்.

அன்று Mindtree'யின் கேம்பஸ் இண்டர்வியூ சத்யபாமா கல்லூரியில் நடந்தது. Written Test’ல் Clear அடுத்து Group Discussion'க்காக ஒரு அறையில் பதினைந்து நபர் உட்கார்ந்து இருந்தோம். எனக்கு கண்டிப்பாக தெரியும் நான் Clear செய்ய போவதுயில்லை என்பது. வலது பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தாள். அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்ததால் முகத்தை தவிர வேறு அனைத்தையும் பார்க்க முடிந்தது. சீ..எங்கு வந்து எதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து நானும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டேன். G.D தொடங்கியது தலைப்பு “இன்றைய இளையர்களுக்கு தேசபக்தி இருக்கிறதா??”. அனைவரும் ஏதோ ஏதோ பேச தொடங்கினர், இதுவே தமிழில் இருந்தால் நான் பக்கம் பக்கமாக பேசி இருப்பேன் என்றி நினைத்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

G.D’யை நடத்திக்கொண்டு இருந்தவன் தீடிர் என்று “Saravana, U can speak" என்றான். இந்த தீடிர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நான் எனது அங்கிலத்தில் ஏதோ பேசினேன். அதுவரை வலது பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தவள் “I am agree with saravana" என்று தொடங்கி பேச தொடங்கினாள், இவளுக்கு எப்படி என் பெயர் தெரியும் என்று யோசனை செய்துக்கொண்டு இருக்கும் போதே G.D முடிந்துவிட்டது. நான் எதிர்பார்த்தது போலவே செலக்ட் ஆகவில்லை. என்னுடைய வருத்தம் எல்லாம் அவளுடைய ரிசல்ட் பற்றித்தான்.

இரண்டு நாட்கள் கழித்து Tech Mahindra’வின் கேம்பஸ் இண்டர்வியூ ஜோசப் கல்லூரியில் நடந்தது. இதிலும் Written Test’ல் Clear செய்து, Technical Interview’க்காக அமர்ந்து இருந்தேன். என்ன அச்சரியம் மீண்டும் அவள், என் அருகில் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்து “Hi" என்றாள். நான் மீண்டும் "Hi" சொல்லிவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். (நான் பெண்களிடம் பேச தொடங்கியதே சமீபகாலமாகத்தான், கல்லூரி நாட்களில் எந்த பெண்ணிடமும் நான் பேசியது கிடையாது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் மாயாஜாலில் நான்கு வருடங்கள் ஒரே வகுப்பில் என்னுடன் படிதத ஸ்வேதா ரூபாவை பார்த்து “ ஹாய் “ என்றேன். பதிலுக்கு அவள் “ r u from S.R.M ??" என்றாள். நாம் இருவரும் ஒரே வகுப்பு என்று சொல்லியும் அவள் முதலில் நம்பவில்லை. பின்னர் அரைமணி நேரம் நன்றாக சிரித்து பேசினாள். அவள் அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவன் என்னை முறைத்து பார்த்தான். அவளிடம் அவன் யார் என்று நானும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை.)

ம்... எங்கே விட்டேன்???. "Hi" சொல்லிவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். சிறிது நேரம் கழித்து ஒரு Puzzle சொல்லி விடைத்தெரியுமா என்றாள். சகுந்தலா தேவியின் புத்தகத்தில் அதை படித்து இருந்தபடியால் நான் உடனே விடையை சொன்னேன். அச்சரியத்துடன் என்னை பார்த்துவிட்டு “ I am Madana" என்று கையை நீட்டினாள். அன்றுதான் என் வாழ்க்கையில் முதல்முதலாக ஒரு பெண்ணிற்க்கு கைகொடுக்கிறேன். புண்ணியவான்கள் அன்று எங்களை ஒரு மணிநேரத்திற்க்கு மேல் Interview’க்காக காக்கவைத்து விட்டார்கள். அந்த ஒரு மணிநேரத்தில் மதனா தன்னை பற்றி எல்லாவற்றையும் ஒப்பித்தாள். அந்த ஒரு மணிநேரத்தில் பத்து நிமிடம் மட்டும்தான் நான் பேசியிருப்பேன். போன் நம்பர்களை கேட்டு வாங்கிக்கொண்டோம்.

நான் Interview'க்கு உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து பார்த்த போது அவள் அங்கு இல்லை, வழக்கம் போல் நான் செலக்ட் ஆகவில்லை. நான் மீண்டும் பஸ் பிடித்து மறைமலை நகர் வந்துகொண்டு இருக்கும் போது, அவளுக்கு “Selected ah?" என்று ஒரு SMS அனுப்பினேன். அவளிடம் இருந்து போன் வந்தது. H.R Interview'க்கு காத்துயிருப்பதாக.

அன்று முதல் அவளிடம் போனில் தொடர்ந்து பேச தொடங்கினேன். ஆனால் முக்கால்வாசி அவள்தான் பேசிக்கொண்டு இருப்பாள். நான் இந்த பக்கம் ”அப்படியா, அப்படியா” என்று கேட்டுக்கொண்டு இருப்பேன். ஆறு மாதங்கள் இப்படி சென்று இருக்கும். நான் ஒரு முறை ஏதோ போனில் சொல்லிவிட அன்றுமுதல் அவளிடம் இருந்து போனில் பேசுவது நின்றுவிட்டது. செல்வா என்னிடம் “உனக்கு மற்றவர்களிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை” என்று சொல்வான், அது சரிதான் போல.

கடந்த மூன்று மாதங்களாக மீண்டும் ஒரு பெண்ணிடம் போனில் அடிக்கடி பேச தொடங்கினேன். இங்கு நான் சொன்ன அடிக்கடி என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் “வாரத்திற்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறை” அவ்ளவுதான். அப்பொழுதே அருண் என்னிடம் சொன்னான் “இதுலாம் நமக்கு சரிபட்டு வராதுடா”. ஒருமுறை அவளிடம் போனில் “ என்ன Timepass’க்கு கால் பண்றீயா?” என்று நான் கேட்க அன்றுமுதல் அவள் எனக்கு போன் செய்வதுயில்லை.

If u wann to walk with me
come and walk, with me
if u wann to cry with me
come and cry, with me
if u wann to laugh with me
come and laugh, with me
if u wamn to die with me
come and die, with me
if u wann to talk with me
sorry, I'm not the one
you are searching for.

Thursday, June 11, 2009

கதை கேளு கதை கேளு

அண்ணாநகர் Coffee Day'யில் நான் அவளுக்குகாக காத்துக்கொண்டு இருந்தேன். அண்ணாநகர் Coffee Day என்றவுடன் அனைவருக்கும் சாந்தி காலணி அருகில் இருக்கும் Coffee Day'தான் நினைவில்வரும், ஆனால் நான் சொல்லும் Coffee Day திருமங்கலம் சிக்னல் அருகில் உள்ளது.

L.C.D T.V' யில் Akon'னின் Beautiful பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. Beautiful என்ற வார்த்தையை Akon'யை தவிர வேறுயாராலும் இந்தளவு Beautiful'ஆக சொல்லமுடியாது.

அரைமணி நேரம் கழித்துத்தான் வந்தாள். வந்தவள் "Sorry'டா லேட் ஆயிடுச்சு" என்றாள். சுஜாதா சொல்வது போல, அழகான பெண்கள் செய்யும் தவறுகள் மட்டும் உடனே அனைவராலும் மன்னிக்கபடுகின்றன.

அவள் கையில் ஒரு வெள்ளை துணி இருக்க,

"என்னது கையிலே ?"

"துப்பட்டா" என்றாள்.

"அது என் கையில் வைத்து இருக்கிறாய்?"

" வெயில் அதிகமாக இருக்குல, அதான் தலையில் போட்டுக்கொண்டு வந்தேன்".

நல்லவேளை இப்பொழுது எல்லாம் நான் பெண்களின் கழுத்தைப்பார்த்து பேசுவது கிடையாது.

Compass'யை வைத்து குத்தினால் போல நேற்றியில் ஒரு பொட்டு, கையில் போட வேண்டிய வளையலை காதிலும், கலுத்தில் போட வேண்டிய செயினை கையிலும் அணிந்துயிருக்கிறாள். இதை அவளிடம் சொல்ல நினைத்து பின் ஏன் வம்பு என்று நிறுத்திவிட்டேன்

டேய் போதும் கதைக்கு வா என்கிறீர்களா. யார் சொன்னது இப்பொழுது கதை எழுதபோறேன் என்று. ஏன் பா, நீங்க என்னை ஒரு கதையாவது நிம்மதியா எழுதவிடுறீங்களா ?. எது எழுதுனாலும் அதில் ஒரு குற்றம் சொல்லவேண்டியது. இதுல மதி சொல்றான் நான் எல்லா கதையையும் Romantic'காக முடிக்கவேண்டுமாம். செல்வாவோ நான் எழுதுறது எல்லாம் "cut n copy" என்கிறான். நரேனுக்கும், மதனுக்கும் அவர்களின் கதாபாத்திர பெயர் குறித்து பிரச்சனை. சுப்புரமணி தனது வலைப்பதிவில் என்னைப்பற்றி கதை எழுதபோவதாக கங்கனம் கட்டிகிட்டு அலைகிறான். "கடவுளே கணபதி" பதிவை நீக்கவேண்டும் என்று ஒரு பெண்ணிடம் இருந்து கொலை மிரட்டல் வேறு.

மேலும், எனக்கு இதுவரை தொடர்ந்து Comments எழுதிவந்த ரீ-மதி புதிதாக வேலையில் சேர்ந்து உள்ளதால், எனக்கு இப்பொழுது Comments'கள் எழுதுவதுயில்லை. நான் கடைசியாக எழுதிய இரண்டு பதிவுகளுக்கும் இதுவரை Zero Comments. (சுப்புரமணிக்கு SMS செய்து " எதாவது Comments எழுதவும் " என்று சொல்லியும் இதுவரை " No Response ")

இப்பொழுது சொல்லுங்கள் இப்படிபட்ட இந்த " So Called " readers'க்காக நான் ஏன் தொடர்ந்து எழுதவேண்டும் (உன்னை யாருடா எழுத சொன்னா ? என்கிறீர்களா). ஆனால், நான் உங்கள் உயிரை எடுக்கும்வரை தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருப்பேன். அருணை போல என் பதிவும் உயிரோசையில் வரும்வரையாவது நான் எழுதுவதை நிறுத்துவதாக இல்லை. அதுவரை என் பதிவை தொடந்து படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் ஆறு பேரும், என் பதிவை தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும்மாறு வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறேன்!!!!!!!!! Plz...

Tuesday, June 9, 2009

உயிரோசையில் அருண்

அருணின் " வெள்ளைக்கார பச்சைத் தமிழர்: பெர்னார்ட் " என்ற கட்டுரை இந்த வார உயிரோசையில் வெளிவந்து உள்ளது. அதன் முகவரி http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1508 .

அருணின் வலைப்பதிவு முகவரி http://perinba.wordpress.com/ .

வாழ்த்துக்கள் அருண்.

Monday, June 8, 2009

கனவு

கடந்த மூனறு நாட்களாக ஓரே கனவு மீண்டும் மீண்டும் வந்துக்கொண்டு இருக்கிறது. முதல் நாள் கனவில் நான் இருட்டில் நடந்து வந்துக்கொண்டு இருக்கிறேன், எதிரில் ஒரு உருவம் என்னை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இருவரும் எதிரெதிரே நடந்து வந்தாலும், எங்களுக்குள் இருந்த இடைவெளி குறையவேயில்லை. கடைசிவரை அந்த உருவத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

இரண்டாம் நாள் கனவில் நான் நடந்து சென்று கொண்டு இருக்கிறேன். என்னை பின்னால் ஒரு உருவம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நான் திரும்பி அந்த உருவத்தை பார்க்கிறேன், இருட்டில் முகத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

மூன்றாம் நாள் கனவில், நான் அந்த உருவத்தை பின் தொடர்ந்து செல்கிறேன். எப்படியாவது முகத்தை பார்த்துவிடும் எண்ணத்தில், நான் வேகமாக நடந்தால் அந்த உருவமும் வேகமாக நடக்கிறது. கடைசிவரை எனக்கு அந்த உருவத்திற்க்கும் இடைவெளி குறையவேயில்லை.

எனோ இந்த கனவுகள் என்னை எதோ ஒரு விதத்தில் பாதித்தது. எப்பொழுதும் அந்த உருவத்தின் பற்றிய எண்ணமாகவே இருந்தது. சிவாவிடம் இந்த கனவுகளை பற்றி சொன்னவுடன் அவன் கேட்ட முதல் கேள்வி " அது ஆணா, பெண்ணா ??" . மேலும் கனவுகளை தொடர்ந்து ஏழு நாட்கள் ஒரு டைரியில் எழுதிவந்தால் கனவுகளே வராது என்றான்.

எப்படியும் அந்த உருவத்தை பார்த்துவிடுவது என்று முடிவுசெய்து, கொஞ்சம் விரைவாகவே அன்று படுக்கசென்றேன். படுக்கை அருகில் பேனாவும், ஒரு டைரியும் வைத்து இருந்தேன், கனவில் இருந்து விழித்தவுடன் அதனை பற்றி எழுதுவதற்கு.

மீண்டும் கனவில் அந்த உருவம் வந்தது. ஆனால் இப்பொழுது இருள் அல்ல, பனி விழும் ஒரு அதிகாலை பொழுது. நானும் அந்த உருவமும் ஒன்றாக நடந்துக்கொண்டு இருக்கிறோம். எனக்கு நிமிர்ந்து அந்த உருவத்தை பார்க்க பயம். " என் முகத்தை பார்க்க பயமா ?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. நான் நிமிர்ந்து பார்க்கிறேன், அது ஒரு பெண்ணின் முகம். அழகான முகம், எங்கேயோ பார்த்த முகம், இல்லை இல்லை நான் எப்பொழுதும் அருகில் பார்க்கும் ஒரு முகம். ஆனால் அது யாரின் முகம் என்று சரியாக சொல்லமுடியவில்லை.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு " நீ யார் ?" என்றேன். " நான்தான் உன் காதல் ' என்றாள் அந்த பெண். " கடந்த நான்கு நாட்களாக நான் உன் கூடவே வந்துக்கொண்டு இருக்கிறேன், ஏன் என்னிடம் நீ பேசவில்லை " என்று உரிமையுடன் கேட்டாள். என் கையில் இருந்த பேனாவையும், டைரியையும் பார்த்தாள்.

" இனியும் நான் உன்னை தொடர்வதாக இல்லை, இப்பொழுதே நான் உன்னைவிட்டு பிரிந்து போகிறேன் " என்று சொல்லிவிட்டு உடனே மறைந்து போனாள். கனவும் கலைந்தது.

இப்பொழுது எல்லாம் கனவுகள் வருவது இல்லை. ஆனால் நான் எப்பொழுதும் படுக்கை அருகில் பேனாவும், டைரியும் வைத்து உள்ளேன், கனவுகளை எழுதுவதற்க்கு,

Friday, June 5, 2009

அன்புள்ள நண்பனுக்கு

அன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம், இதை படிக்கும் நீ யார் என்று எனக்கு தெரியாது. நீ ஆணா, பெண்ணா என்று எனக்கு தெரியாது. கடிதங்கள் மூலமாக மட்டுமே நம்முடைய உண்மையான ஏக்கங்கள், ஆசைகள் ஆகியவற்றை பகிர்ந்துக்கொள்ள முடியும் என்று நம்புவதால் உனக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீ கண்டிப்பாக இதை படித்துவிட்டு எனக்கு பதில் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் நீ பதில் எழுதினால் நான் கண்டிப்பாக சந்தோஷம் அடைவேன். குறைந்தபட்சம் இந்த கடிதத்தை முழுமையாக படித்துப்பார் (நீ விரும்பினால் மட்டும், நான் இதுவரை யாரையும் கட்டாயபடுத்தியது இல்லை).

நான் கடைசியாக எழுதிய கடிதம், என் நண்பனுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது, இப்பொழுது எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.

"உனது ஆசைகள் பேராசையாக இருந்தால், உனது ஆசைகள் நிறைவேறும்" , "அனைத்துக்கும் ஆசைபடு". இவை எல்லாம் ஆனந்த விகடனில் எப்பயோ படித்தது. எத்தனையோ வாக்கியங்கள் படித்தாலும் நம் வாழ்வோடு சம்பந்தம் உள்ள சிலவை மட்டும் நம் நினைவில் அப்படியே நின்றுவிடும். அப்படி நின்றவைதான் நான் மேலே சொன்ன இரண்டு வாக்கியங்கள்.

எனக்கு எப்பவுமே ஒரு எண்ணம் உண்டு, "நான் ஆசைபட்டால் அது கண்டிப்பாக நட்க்காது". ஒரு சின்ன பென்சிலில் இருந்து Apple Ipod வரை இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம். ஆனால் நான் தொடர்ந்து ஆசைபட்டு கொண்டுத்தான் இருக்கிறேன். இவை எதுவுமே நடக்காது என்று தெரிந்தும் ஆசைபடுகிறேன்.

உனக்கு தோல்விக்கும் வெற்றிக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? " என்ன கேள்வி இது, தோல்விக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாமல் யாராவது இருப்பார்களா? " என்றுதானே நீ கேட்கிறாய். எனக்கு தோல்விக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாது, என்னென்றால் எனக்கு தோல்வி எது வெற்றி எது என்றே புரியவில்லை. சில நேரங்களில் நான் வாழ்க்கையில் தோல்வியே அடைந்தது இல்லை என்று எண்ணுகிறேன், சில நேரங்களில் நான் வாழ்க்கையில் வெற்றியை பார்த்ததே இல்லை என்று நினைக்கிறேன்.

உண்மையில் நான் வெற்றி அடைகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்துக்கொண்டு இருக்கிறேன். சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஒரு வாக்கியம்வரும் " கேட்டதை விட அதிகமாக் கிடைக்கும் போது வருகின்ற சந்தோஷத்தை விட, கேட்டது கிடைக்கும்போது வருகின்ற சந்தோஷம்'தான்பா உண்மை".
அதைபோலத்தான் எனக்கும், எனக்கு எப்பொழுதும் கேட்பதைவிட அதிகமாக கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

எனக்கு இப்பொழுது எல்லாம் தீடிர் என்று ஒரு பயம், "நம்மால் சிறு தோல்வியைக்கூட தாங்கிகொள்ள முடியாமல் போய்விடுமோ" என்று. இதற்காகவே நான் எனக்கு நானே தோல்விகளை உருவாக்குகிறேன். ஆனால் அந்த தோல்விகள் எல்லாம், மீண்டும் எனக்கு நானே உருவாக்குகின்ற வெற்றிகளைக்போல காட்சியளிக்கிறது.

நான் இன்னும் உன்னிடம் பலவற்றை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவைகளை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை, நான் சொல்லவருவதை தவறான அர்த்தத்தில் சொல்லி, எங்கே நம் முதல் சந்திப்பே கடைசி சந்திப்பாக மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

இதுவரை இதை பொறுமையாக படித்ததற்கு நன்றி. முடிந்தால் நீ எனக்கு பதில் கடிதம் எழுது, என் முகவரி saravana338@gmail.com. எனக்கு கடிதங்களை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை, அதனால் கடிதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு நட்புடன்,
அசோக்.