Saturday, July 17, 2010

களவாணி - ரவுசு

தமிழில் கிராமத்து திரைப்படம் என்றால், அது தூத்துக்குடி அல்லது மதுரையை மையப்படுத்தியே இருக்கும். அதை உடைத்து இந்த முறை, எங்க ஊர் பக்கம் வந்து இருக்கிறார்கள். அதாங்க, " தஞ்சாவூர், திருவாரூர்" பக்கம் வந்து இருக்காங்க. எங்க ஊர்பக்கம் எல்லா பேச்சுவழக்கிலும், எங்கேயாவது நையாண்டி இருந்துகொண்டே இருக்கும். அது திரைப்படம் முழுவதும் இருக்கிறது.

படம் ஆரம்பித்தது முதல், இறுதிவரை அந்த சிரிப்பொலி அடங்கவே இல்லை. திரைப்படம் முழுவதும் எத்தனையோ ப்ளஸ்'களை சொல்லிக்கொண்டே போகலாம். இதை ஒரு சாதாரண கமர்ஸியல் திரைப்படம் என்று கண்டிப்பாக சொல்லிவிட முடியாது. சின்ன சின்ன விசயங்களை கூட யோசித்து செய்து இருக்கிறார் டைரக்டர் சற்குணம். கண்டிப்பாக இவரும் தஞ்சாவூர் பக்கமாகத்தான் இருக்க வேண்டும். படத்தில் சின்ன சின்ன காட்சிகளில் கூட கிராமத்து நெடி வீசிக்கொண்டே இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லை, ஹீரோ மரத்துக்கு மரம் தாவவில்லை, ஹீரோயின் டூ பீஸில் ஒட வில்லை. அந்த வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி போட்டு கொண்டு விமல் விடுகின்ற ரவுசு இருக்கே. சான்ஸே இல்லை. கஞ்சா கருப்பு, சரண்யா, கதாநாயகி ஓவியா என்று படத்தில் நடித்த எல்லாரையும் பாராட்டிக்கொண்டே போகலாம்.

திரைப்படம் முடிந்து, திரையரங்கில் இருந்து வந்த அனைவரும் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தெரிந்ததே, அதான்யா ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி.

சற்குணம், உங்களின் அடுத்த திரைப்படத்துக்கு ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

பின்குறிப்பு:

இந்த திரைப்படம் வெளிவந்த கொஞ்ச நாட்களில், அந்த பெரிய பேனரின் திரைப்படமும் வெளிவந்தது. அந்த so called பெரிய மனிதர்கள், பல திரையரங்குகளில் "களவாணி" திரைப்படத்தை தூக்க சொல்லிவிட்டு அவர்கள் படத்தை திரையிட சொன்னதாக கேள்வி. பெரிய பேனர்களின் காரணமாகத்தான் தமிழ் திரைப்படங்கள் உலகளவில் செல்ல முடியும் என்ற மாயை எல்லாம் இனி செல்லாது.

2 comments:

நிலவுக்காதலன் said...

nice movie. but they cud hav shown dat gal atleast studying college. too small age la :) not much touching luvsss. but natural. gud.

சரவண வடிவேல்.வே said...

சகா, நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்.

இப்பொழுதுலாம், ஸ்கூல் படிக்கிற பொண்ணை காதலிக்கிறதுதான் பேஷன்.

இனி வரும் காலங்களில், L.K.G பொண்ணை காதலித்தால் கூட ஆச்சர்யப்படுவதற்க்கு இல்லை.