Friday, September 10, 2010

ஒரு கிறுக்கல்

அவளுக்கு நான் ஒரு முத்தம் கொடுக்கவேண்டும். மீண்டும், மீண்டும் எனது காதலை, சொற்களால் அவளுக்கு புரியவைக்க விரும்பவில்லை. ஒரே ஒரு முத்தம் போதும், அந்த ஒரு முத்தத்தில் எனது காதல் முழுவதையும் அவளுக்கு புரியவைத்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

முதலில் அந்த முத்தத்திற்கு அவளை சம்மதிக்க வைக்கவேண்டும். ஒரு முத்தத்தால் அவள் கற்புக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடாது என்பதை அவளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஒரு முத்தத்தால, கருவில் குழந்தை உருவாகிவிடும் என்று நம் தமிழ்சினிமாக்கள் உருவாக்கியிருக்கும் மாய தோற்றத்தை அவளிடம் இருந்து உடைக்க வேண்டும்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரே முத்தத்தால் என் காதலை அவளுக்கு புரியவைக்கமுடியும் என்று. என்னையே அவளுக்கு முழுவதுமாக தந்துவிட முடியும் என்று. என்னை அவள் புரிந்துக்கொள்ள முடியும் என்று. எப்படி ஒரே முத்தத்தில் இவை எல்லாம் சாத்தியம் என்று கேட்கிறீர்களா??. நான் இதைபற்றி ஒரு நொடிகூட சந்தேகப்படவில்லை. ஆகவே அதை பற்றி நான் யோசிக்கவே விரும்பவில்லை.

அந்த முத்தத்தை எங்கே, எப்பொழுது, எப்படி தரவேண்டும் என்பதை நான் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டேன். ஒரு நாடகத்தின் ஒத்திகையை போல அவை என் மனக்கண்ணில் எப்பொழுதும் இருக்கிறது. அந்த முத்தம் இதுவரை எந்த ஒரு காதலனும் தன் காதலிக்கு தராத ஒன்றாக இருக்கும்.

இது எத்தனையோ அங்கிலப் படங்களை பார்த்து உருவாக்கிய முத்தம் அல்ல. முற்றிலும் என் உணர்ச்சிகளால், என் உண்மையான காதலால் உருவாக்கபட்ட முத்தம்.

அந்த முத்தத்தை அவள் உதட்டில்தான் தரவேண்டும். அதுவும் முக்கியமாக கீழ் உதட்டில். நாங்கள் முத்தம் தரும்போது, அவள் கைகள் என் பின்தலை முடிகளை கோதிக் கொண்டு இருக்கும். நான் என் ஒரு கையால் அவள் பின்தலையையும், மற்றொரு கையால் அவள் இடுப்பையையும் பிடித்துக்கொள்வேன். அவள் அன்று புடவை அனிந்துவந்தாள், இன்னும் உத்தமம். அப்பொழுதுதான் என் கைகளால் அவள் இடுப்பு பகுதியை முழுமையாக தொட முடியும். இதனால் கைகளுக்கும், இடுப்புக்கும் ஒரு உஷ்னம் பரவும். தோல்கள் உரசும் போதுதான் உண்மையான காதல் வெளிப்படும் என்று நம்புகின்றவன் நான். நீங்கள் நினைப்பது போல் இந்த முத்தத்தை ஒரு விநாடியோ, ஒரு நிமிடமோ, ஒரு மணிநேரமோ தரப்போவது இல்லை. யுகங்கள், யுகங்களாக தர வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்படாமல், விண்வெளியில், ஆகாயத்தில், மேக கூட்டத்தின் நடுவில், பனிவிழும் மலைகளில், கடல்நீருக்கு அடியில், காற்றில் என்று எல்லா இடங்களிலும், யுக யுகங்களாக தரவேண்டும்.

இது காதல் இல்லை காமம் என்கிறீர்களா?, எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. காமம் இல்லாத காதல் ஏது??. காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமே காமம்தானே??. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், காதலுக்கும் காமத்திற்க்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டியது. அதை பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டு என்னிடம் வாருங்கள், என் முழுக்கதையையும் உங்களிடம் சொல்கிறேன். அதுவரை என் காதல், அவளைப்போலவே உங்களுக்கும் புரியாது.

2 comments:

நிலவுக்காதலன் said...

காதலியின் முதல் முத்தம் உணர்ந்தவன் போலும் :)

சரவண வடிவேல்.வே said...

இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புது!!