Sunday, September 19, 2010

Operation Green Hunt

செய்தி 1:

நாள்: 2 Jul 2010

நாமக்கல் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி மலைப்பகுதியில்  "பிளாட்டினம்" இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்திய புவியியல் ஆய்வுத்துறை மற்றும் கனிமவளத்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.

செய்தி 2:

நாள்: 6 Apr 2010

சத்தீஷ்கரில் தண்டேவாடே மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 73 சி.ஆர்.பி.எஃப் படையினர் கொல்லப்பட்டனர்.

விளக்கம்:

இந்த இரண்டு செய்திகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்துக்கொள்வதற்க்கு, முதலில் சத்தீஷ்கரின் தண்டேவாடே மாநிலத்தைப்பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும்.

தண்டேவாடே மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. இங்கு பின்தங்கிய என்றால், படிப்பறிவு சதவீதம் மிகவும் குறைவான, காடுகள் நிறைந்த வனப்பகுதி என்று சொல்லாம். அந்த பகுதி மக்களை மேம்படுத்த அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. " அந்த பகுதி மக்களுக்குப் படிப்பறிவை வளர்பதுதான் அந்த திட்டம் " என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் கண்டிப்பாக இந்திய நாட்டில் வசிக்கும் தமிழராக இருக்க முடியாது.

தண்டேவாடே மாவட்ட மக்களுக்காக அறிமுகம் செய்த திட்டத்தின் பெயர் "Operation Green Hunt". அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான சுமார் " 74 ஆயிரத்து 836 ஏக்கர் " நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு (டாடா மற்றும் எஸ்ஸார்) கொடுப்பது. தனியார் நிறுவனங்கள் அந்த நிலத்தில் தங்களுக்கு தேவையான் தொழில்சாலைகள் அமைத்து அந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த 74 ஆயிரம் ஏக்கர் தவிர்த்து மிச்சம் உள்ள இடத்தில் அந்த பகுதி மக்கள் சந்தோஷமாக இருக்கலாம். இதுதான் "Operation Green Hunt".

சரி, அந்த வனப்பகுதியில் ஏன் தொழில்சாலைகள் அமைக்க வேண்டும்??. ஏனென்றால் அந்த பகுதிதான் கனிம வளம் நிறைந்த பகுதியாகும்.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லாம், பழங்குடி மக்கள். அதாவது காலம் காலமாக அங்கேயே வாழ்பவர்கள். நம் சென்னைவாசிகள் போல் அல்ல இவர்கள், ஒரு லட்சம் ரூபாய் அதிகமாகக் கிடைத்தால் நிலத்தை விற்றுவிட்டு போக.

74 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பழங்குடியினரிடம் இருந்து கைப்பற்ற அரசால் முடியவில்லை. 5 சதவீத இடம்தான் அரசால் கையகப்படுத்த முடிந்தது. இதுவே அரசாங்கம் வழு கட்டாயமாக கைப்பற்றியதுதான். தங்களை கொடுமைப்படுத்திய அரசுக்கு எதிராக பழங்குடியினர் துப்பாக்கி எடுத்தனர். இதற்க்கு  மாவோயிஸ்டுகள் உதவி செய்தனர். தற்பொழுது அந்தப்பகுதியில் மாவோயிஸ்டுகளாக இருக்கும் முக்கால்வாசி பேர் பழங்குடியினரே, அவர்கள் யாரும் பிறக்கும்போதே மாவோயிஸ்டுகளால பிறக்கவில்லை. தங்களையும், தங்கள் நிலத்தையும் பாதுகாக்க அவர்களுக்கு வேறு வழிகள் தெரியவில்லை.

முடிவுரை:

விரைவில், இந்திய அரசாங்கத்துக்கு ஒரு விசயம் தெரிய வரலாம். அதாவது நாமக்கல் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்று. அரசு அவர்களை மேம்படுத்த "Operation Green Hunt - 2" என்ற திட்டத்தை கொண்டுவரும். தமிழக அரசாங்க குடும்பத்திற்க்கு இது ஒரு 'ஜாக்பாட்' பரிசுதான், இதன்மூலம் "எந்திரன்" போல இன்னும் பல சமுதாய அக்கறைக்கொண்ட படங்கள் எடுக்கலாமே!!.

ஆனால் இப்படி எல்லாம் நடந்தால், ஏற்கனேவே கொந்தளித்து இருக்கும் தமிழர் சிலர் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் உருவாகும் நாள் மிக தொலைவில் இல்லை.

பின்குறிப்பு 1:

1854 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ·ப்ராங்க்லின் பியர்ஸ் செவ்விந்திய நிலப்பகுதியை வாங்குவதற்காக ஆட்களை அனுப்பினார். அப்பொழுது செவ்வியந்தியத் தலைவன் ஸியட்டில் சொன்ன பதில், (தமிழில் : சுகுமாரன் - உயிர்மை)

"நான் ஒரு காட்டுமனிதன்; என்னால் வேறு வகையில் புரிந்துகொள்ள முடியவில்லை. புல்வெளிகளில் செத்து அழுகும் ஆயிரக்கணக்கான எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். பாய்ந்து ஓடும் ரயிலிருந்து வெள்ளைக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டவை உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல்லும் எருமைகளை விட, புகை கக்கும் இரும்புக் குதிரைகள் எப்படி முக்கியமானவை என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு காட்டு மனிதன்.

விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன்? எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வதுயாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.

எங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.

எங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையானதல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்"


இதன் முழுக்கட்டுரைக்கு இங்கே செல்லவும்.

பின்குறிப்பு 2:

கிழே உள்ள புகைப்படம் சமீபத்தில் நண்பன் திருமணத்திற்காக பொன்னமராவதி சென்றபோது எடுத்தது. இந்தப் புகைப்படத்தில் உள்ளது போல "சாவி வாங்கிக்கொண்டு திருடும் திருட்டுதான் இங்கு நடந்துக்கொண்டு இருக்கிறது".

1 comment:

தனி காட்டு ராஜா said...

சிந்திக்க வைக்கும் பதிவு சரவணா....