Saturday, November 20, 2010

புரிந்தும் புரியாமலும் - III

என் சுதந்திரத்தை என்னிடமே விட்டுவிடுங்கள். எனக்கு தெரியும், இந்த சதுரங்க ஆட்டத்தில் எனது ராஜாவை எப்பொழுது நகர்த்த வேண்டும் என்று. எனக்கு தெரியும், ஒரு மந்திரியின் உதவியை எப்பொழுது நாட வேண்டும் என்று, எனது குதிரைகளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று, ராணி எப்பொழுது எனக்கு தேவைப்படும் என்று. என் சுதந்திரத்தை என்னிடமே விட்டுவிடுங்கள்.

நீங்கள் ஒரு பார்வையாளர் மட்டும்தான். ஒரு பார்வையாளனுக்கு எல்லாவித சலுகைகளும் இருக்கிறது. அதற்காக எனது படைவீரர்களை நகர்த்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது??. என்னிடம், என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள என் சுதந்திரம் மட்டுமே மிச்சம் இருக்கிறது, தயவு செய்து அதையும் பறித்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் சொல்படித்தான் நான் கட்டங்களில் நகர வேண்டும் என்றால், எது சரி, எது தவறு என்பதை நீங்கள்தான் உறுதிப்படுத்துவீர்கள் என்றால்,. பின் நான் எதற்கு, ”நான்” என்ற வார்த்தைத்தான் எதற்கு??.

என் பாதையை நானே தேர்வு செய்துக்கொள்கிறேன். நீங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்.

என் சுதந்திரத்தை என்னிடமே விட்டுவிடுங்கள். 

No comments: