Thursday, June 9, 2011

பின்லாடன் கொல்லப்பட்டார்

பின்லாடன் கொல்லப்பட்டார். இது நடந்து ஒரு மாதம் மேல் ஆகப்போகிறது. அப்பொழுதே எழுதவேண்டியது, நாளை நாளை என்று தள்ளிப்போய், கடைசியாக இன்றுதான் ஒரு விடிவுகிடைக்கிறது. சிலர், எப்பொழுதோ இறந்ததாக சொல்லப்படும் காந்தியைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது,  போன  மாதம் இறந்த பின்லாடன் பற்றி எழுதலாம், தவறே இல்லை.

பின்லாடன் கொல்லப்பட்டு, அவரின் உடல் கடலில் தூக்கிப் போடப்பட்டது. இதை  நம்பலாமா?? வேண்டாமா??. நம்பிதான் ஆகவேண்டும், எனென்றால், இதைச் சொல்வது அமெரிக்கா. சதாமை  உயிரோடு  பிடித்த அமெரிக்காவால்,  ஏன், பின்லாடனை  உயிரோடு பிடிக்க முடியவில்லை??. ஒருவேளை  பின்லாடனை எப்பொழுதோ கொன்றுவிட்டு, பாகிஸ்தான் மீது பழி போடுவதற்க்கு அமெரிக்கா நடத்து நாடகமாக கூட இது இருக்கலாம.

இன்னும் கொஞ்ச நாள் சென்றிருந்தால் அவரே இறந்திருப்பார். கடைசி காலத்தில் அவரை  கொன்று நல்ல பெயரை  தேடிக்கொள்கிறது அமெரிக்கா அரசு. பின்லாடனை கொன்றதால் இப்பொழுது தீவிரவாதம் முற்றிலும் அழிந்துவிட்டதா?? உலகம் முழுவதும் நடக்கும் எல்லா குண்டு வெடிப்புக்கும் பின்லாடன் மட்டும்தான் பொருப்பா?? அப்படிப்பட்ட பிம்பத்தைதான் இப்பொழுது அமெரிக்கா அரசு கொண்டுவர முயற்சிக்கிறது. இரண்டாம் உலகம் போருக்கு எல்லா காரணமும் இந்த ஹிட்லர்தான் என்று சொல்லி எல்லா உலக நாடுகளும் தப்பித்தது போல் உள்ளது இது.

இந்த கட்டுரை  எழுதுவதற்க்கு காரணம் பின்லாடனை கொன்றதால் அல்ல. அது நடந்த இடத்தால். பாகிஸ்தான் மீது போர் தொடுக்க நல்ல சந்தர்ப்பம அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது, பின்லாடன் பாகிஸ்தானில் வாழ்ந்தார், இந்த ஒரு காரணமே அமெரிக்காவுக்கு போதும் உலக நாடுகளை  நம்ப  வைப்பதற்க்கு. என்ன கொடுமை என்றால், எந்த உலக நாடுமே இதை எதிர்க்கவில்லை.

ஒரு தீவிரவாதி ஒரு நாட்டில் இருந்தால், அந்த நாட்டின் மீதே போர் எடுக்க வேண்டுமா?? ஆம் ஏனெனில்,  முதலில் அமெரிக்கா தன் மீதே குண்டுகளை  வீசிக்கொள்ள வேண்டும். அங்குதான் அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற  உலகின் மிக பெரிய தீவிரவாதி ஒருவனும்,  அவனுடைய சகாக்கள் பலரும் வாழ்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

பாகிஸ்தானின் உளவு அமைப்பு மீது தடை விதிக்க வேண்டுமாம். அடப்பாவிங்களா, மற்ற நாட்டின் அரசியலில் மறைமுகமாக மூக்கை  நுழைப்பதாக வீக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய அமெரிக்கா உளவுத்துறையை  என்ன செய்வது??

அமெரிக்கா  எப்பொழுது பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று பலரும் எதிர்ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் என் நண்பர்கள் பலரும்  உண்டு. பாகிஸ்தான் மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்விக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி சொன்ன ஒரு வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது "I want to say sorry to my nation".

2 comments:

நிலவுக்காதலன் said...

இன்னும் கொஞ்ச நாள் சென்றிருந்தால் அவரே இறந்திருப்பார் .. hehe enda ipdi.. athu sari fbi or isi.. ella kedi pasangathan...

நிலவுக்காதலன் said...

http://thatstamil.oneindia.in/news/2011/06/13/us-diver-launches-underwater-search-bin-laden-body-aid0091.html chk dis machi..