Friday, November 25, 2011

முகநூல் கதைகள்

நான் சிறுவனாக இருந்த போது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் என்னிடம் கேட்கும் கேள்விகள் இப்படியாகதான் இருக்கும். " பெயர் என்ன??" "எத்தனாவது படிக்கிற??" "நல்லா படிக்கிறீயா??". கொஞ்சம் நெருங்கிய சொந்தம், மற்றும் குழந்தைகளை பிடிக்கும் என்றால் இன்னொரு கேள்வியும் சேர்ந்து வரும், அது " உனக்கு எத்தனை பிரண்ட்ஸு??". இப்பொழுது என்னிடம் யாராவது இந்த கேள்வியை கேட்டால் நான் "291" என்று பதில் சொல்லியிருப்பேன். இது என்னுடைய முகநூல் (Facebook) நண்பர்களின் எண்ணிக்கை. நீங்கள் இதைப் படித்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த எண்ணிக்கையில் சில மாற்றங்கள் நடந்திருக்கலாம். நானாவது பரவாயில்லை, எனக்கு தெரிந்த எங்க ஊர் பெண்ணொருத்தி, முகநூலில் இருக்கிறாள், அவளின் நண்பர்களின் எண்ணிக்கை 1266. இன்னும் சில நாட்களில் அவளின் நண்பர்களின் எண்ணிக்கையை பவரில் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், 2 பவர் 8 என்று சொல்வோமே அப்படி. அவள் இப்பொழுதுதான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் என்பது இங்கு கூடுதல் செய்தி.

முகநூலில் பல நன்மைகளும் இருக்கதான் செய்கிறது. எடுத்துக்காட்டுக்கு பல வருடங்களாக நாம் தேடிக்கொன்டு இருக்கும் நண்பர்களை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என்று அனைவரையும். என்னுடைய பள்ளி நண்பர்களை தேடி நான் முகநூல் வரைக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. நாகையில் இருப்பதே நான்கு தெருக்கள்தான் என்பதால், ஊருக்கு போகும் போது அவர்களை நேரிலேயே சந்தித்துவிடலாம். கல்லூரி நண்பர்களை கண்டுபிடிக்கதான் முகநூல் எனக்கு ரொம்ப உதவியது. நான் மூதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த போது என்னுடன் கல்லூரியில் மூதலாம் ஆண்டு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1500 அருகில். நான் படித்த எலக்ட்ரானிக்ஸுக்கு மட்டும் ஏ, பி, சி, என்று மொத்தம் ஒன்பது வகுப்புகள், ஒரு வகுப்புக்கு 60 மாணவர்கள் என்றால், மொத்தமாக எலக்டிரானிக்ஸ் படித்தவர்களின் எண்ணிக்கை 500'யை தொடும். நான்கு ஆண்டு கல்லூரி படிப்பு முடித்தப்பின் கூட அந்த 500'ல் பாதி பேரிடம்தான் எனக்கு பழக்கம் எற்பட்டு இருந்தது.

அந்த 500'ல் ஒருவனிடம் இருந்துதான் சமீபத்தில் எனக்கு Friend Request வந்திருந்தது. நான் அவனிடம் கல்லூரியிலேயே நான்கு முறைக்கு மேல் பேசியிருக்கமாட்டேன். சரி சும்மா கொடுத்து இருப்பான் போல, நானும் என்னுடைய நண்பர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுமே என்று முடிவு செய்து, எனது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.

அடுத்த நாளே அவனிடமிருந்து முகநூலில் எனக்கு ஒரு செய்தி வந்திருந்தது. "Hi Machi, How r u??. காலையிலேயே அனுப்பி இருப்பான் போல், நான் மாலையில்தான் அந்த செய்தியை படித்தேன்.  "நலம்" என்று நானும் ஒரு செய்தியை அனுப்பினேன். பின்னர் எனக்கும் அவனுக்கும் நடந்த முகநூல் உரையாடல் கீழே,

"How is ur Class mates da?? still in Touch??"

"Yes Machi, every one fine"

"hey, i lost ur contact number, can u pls msg me from ur number. My New number: 98213######"

இனி எனக்கும் அவனுக்கும் நடந்த செல்போன் குறுஞ்செய்தி உரையாடல்..

"Ashok here. It's my Number"

"Thanks Machi"

அடுத்து அவனிடமிருந்து வந்த குறுஞ்செய்திதான் இந்த பதிவுக்கு காரணம்,

"Machi, are you having ur classmate gowri phone number??"
 
என்னுடய கேள்வி எல்லாம், ஆறுபது பேர் படித்த எங்கள் வகுப்பில் என்னிடம் மட்டும் அவன் இந்த கேள்வியை கேட்க காரணம் என்ன??. உண்மையாகவே இவர்களாம் என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்???

"Sorry Da, i dont have. She is in facebook"

"ok machi..np"


No comments: