Sunday, June 21, 2009

நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா...

கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த நேரம். எவனை பார்த்தாலும் Campus Interview’யை பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தான். நான்காம் ஆண்டு ஆரம்பத்திலேயே Placement’ம் தொடங்கிவிட்டது (நான் சொல்வது 2007ம் ஆண்டு).

இதுவரை பத்து கேம்பஸ் இண்டர்வியூ போயும் ஒன்றில் கூட Select’ஆகவில்லை. அப்பொழுது மறைமலை நகரில் தங்கியிருந்தேன். இண்டர்வியூ நடப்பது எல்லாம் சத்யபாமா, ஜோசப், ஜேப்பியார். வெங்கடேச்வரா போன்ற கல்லூரிகளில். காலையில் ஜந்து மணிக்கு எழுந்து, ஆறு மணி பஸ்யை பிடித்து ஏட்டு மணிக்கு Interview நடக்கும் கல்லூரிக்கு போனால், “வாடா மச்சி, ஏண்டா லேட்?” என்று உரிமையுடன் கேட்க ஒரு கூட்டம் இருக்கும். “உனக்கு என்னடா, இந்த தடவை கண்டிப்பாக செலக்ட் ஆயிடுவ!!!” என்று புகழ்ச்சி வேறு, பத்து இண்டர்வியூவில் ஆறு தடவைக்கு மேல் Written Exam பாஸ் செய்தவன் என்பதால் எனக்கு இந்த வஞ்சபுகழ்ச்சி அணி.

இண்டர்வியூ நடப்பது ஜோசப், ஜேப்பியார் போன்ற கல்லூரி என்றால் எங்கள் அனைவருக்கும் ஒரே சந்தோசமாக இருக்கும், ஏன்னென்றால் மதியானம் கண்டிப்பாக பிரியாணி உண்டு அதுவும் இலவசமாக (அப்பொழுது எல்லாம் ஜேப்பியார் கடவுளை போல காட்சியளிப்பார்). அதிர்ஷ்டம் இருந்தால் காலையில் இட்லிக்கே சிக்கன் கிடைக்கும்.

அன்று Mindtree'யின் கேம்பஸ் இண்டர்வியூ சத்யபாமா கல்லூரியில் நடந்தது. Written Test’ல் Clear அடுத்து Group Discussion'க்காக ஒரு அறையில் பதினைந்து நபர் உட்கார்ந்து இருந்தோம். எனக்கு கண்டிப்பாக தெரியும் நான் Clear செய்ய போவதுயில்லை என்பது. வலது பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தாள். அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்ததால் முகத்தை தவிர வேறு அனைத்தையும் பார்க்க முடிந்தது. சீ..எங்கு வந்து எதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து நானும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டேன். G.D தொடங்கியது தலைப்பு “இன்றைய இளையர்களுக்கு தேசபக்தி இருக்கிறதா??”. அனைவரும் ஏதோ ஏதோ பேச தொடங்கினர், இதுவே தமிழில் இருந்தால் நான் பக்கம் பக்கமாக பேசி இருப்பேன் என்றி நினைத்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

G.D’யை நடத்திக்கொண்டு இருந்தவன் தீடிர் என்று “Saravana, U can speak" என்றான். இந்த தீடிர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நான் எனது அங்கிலத்தில் ஏதோ பேசினேன். அதுவரை வலது பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தவள் “I am agree with saravana" என்று தொடங்கி பேச தொடங்கினாள், இவளுக்கு எப்படி என் பெயர் தெரியும் என்று யோசனை செய்துக்கொண்டு இருக்கும் போதே G.D முடிந்துவிட்டது. நான் எதிர்பார்த்தது போலவே செலக்ட் ஆகவில்லை. என்னுடைய வருத்தம் எல்லாம் அவளுடைய ரிசல்ட் பற்றித்தான்.

இரண்டு நாட்கள் கழித்து Tech Mahindra’வின் கேம்பஸ் இண்டர்வியூ ஜோசப் கல்லூரியில் நடந்தது. இதிலும் Written Test’ல் Clear செய்து, Technical Interview’க்காக அமர்ந்து இருந்தேன். என்ன அச்சரியம் மீண்டும் அவள், என் அருகில் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்து “Hi" என்றாள். நான் மீண்டும் "Hi" சொல்லிவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். (நான் பெண்களிடம் பேச தொடங்கியதே சமீபகாலமாகத்தான், கல்லூரி நாட்களில் எந்த பெண்ணிடமும் நான் பேசியது கிடையாது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் மாயாஜாலில் நான்கு வருடங்கள் ஒரே வகுப்பில் என்னுடன் படிதத ஸ்வேதா ரூபாவை பார்த்து “ ஹாய் “ என்றேன். பதிலுக்கு அவள் “ r u from S.R.M ??" என்றாள். நாம் இருவரும் ஒரே வகுப்பு என்று சொல்லியும் அவள் முதலில் நம்பவில்லை. பின்னர் அரைமணி நேரம் நன்றாக சிரித்து பேசினாள். அவள் அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவன் என்னை முறைத்து பார்த்தான். அவளிடம் அவன் யார் என்று நானும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை.)

ம்... எங்கே விட்டேன்???. "Hi" சொல்லிவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். சிறிது நேரம் கழித்து ஒரு Puzzle சொல்லி விடைத்தெரியுமா என்றாள். சகுந்தலா தேவியின் புத்தகத்தில் அதை படித்து இருந்தபடியால் நான் உடனே விடையை சொன்னேன். அச்சரியத்துடன் என்னை பார்த்துவிட்டு “ I am Madana" என்று கையை நீட்டினாள். அன்றுதான் என் வாழ்க்கையில் முதல்முதலாக ஒரு பெண்ணிற்க்கு கைகொடுக்கிறேன். புண்ணியவான்கள் அன்று எங்களை ஒரு மணிநேரத்திற்க்கு மேல் Interview’க்காக காக்கவைத்து விட்டார்கள். அந்த ஒரு மணிநேரத்தில் மதனா தன்னை பற்றி எல்லாவற்றையும் ஒப்பித்தாள். அந்த ஒரு மணிநேரத்தில் பத்து நிமிடம் மட்டும்தான் நான் பேசியிருப்பேன். போன் நம்பர்களை கேட்டு வாங்கிக்கொண்டோம்.

நான் Interview'க்கு உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து பார்த்த போது அவள் அங்கு இல்லை, வழக்கம் போல் நான் செலக்ட் ஆகவில்லை. நான் மீண்டும் பஸ் பிடித்து மறைமலை நகர் வந்துகொண்டு இருக்கும் போது, அவளுக்கு “Selected ah?" என்று ஒரு SMS அனுப்பினேன். அவளிடம் இருந்து போன் வந்தது. H.R Interview'க்கு காத்துயிருப்பதாக.

அன்று முதல் அவளிடம் போனில் தொடர்ந்து பேச தொடங்கினேன். ஆனால் முக்கால்வாசி அவள்தான் பேசிக்கொண்டு இருப்பாள். நான் இந்த பக்கம் ”அப்படியா, அப்படியா” என்று கேட்டுக்கொண்டு இருப்பேன். ஆறு மாதங்கள் இப்படி சென்று இருக்கும். நான் ஒரு முறை ஏதோ போனில் சொல்லிவிட அன்றுமுதல் அவளிடம் இருந்து போனில் பேசுவது நின்றுவிட்டது. செல்வா என்னிடம் “உனக்கு மற்றவர்களிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை” என்று சொல்வான், அது சரிதான் போல.

கடந்த மூன்று மாதங்களாக மீண்டும் ஒரு பெண்ணிடம் போனில் அடிக்கடி பேச தொடங்கினேன். இங்கு நான் சொன்ன அடிக்கடி என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் “வாரத்திற்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறை” அவ்ளவுதான். அப்பொழுதே அருண் என்னிடம் சொன்னான் “இதுலாம் நமக்கு சரிபட்டு வராதுடா”. ஒருமுறை அவளிடம் போனில் “ என்ன Timepass’க்கு கால் பண்றீயா?” என்று நான் கேட்க அன்றுமுதல் அவள் எனக்கு போன் செய்வதுயில்லை.

If u wann to walk with me
come and walk, with me
if u wann to cry with me
come and cry, with me
if u wann to laugh with me
come and laugh, with me
if u wamn to die with me
come and die, with me
if u wann to talk with me
sorry, I'm not the one
you are searching for.

2 comments:

பேரின்பா said...

பாரேன் இந்த பய மனசுல இவ்வளோ இருந்திருக்கு... உனக்கு இருக்கற அழகுக்கும் அறிவுக்கும் நிச்சயம் திரிஷா மாதிரி ஒரு பொண்னு வருவா...

Subramania Athithan said...

very interesting machi. life la ivlo open ah innaikkuthan pesiyirukka :) want more :)