Wednesday, March 7, 2012

.

நீ என் பயத்தை போக்கவில்லை தேவி,
என் பயத்தின் வேரினை மட்டுமே நீக்கினாய்.

விருட்சமாகிய என் உடலில்
பயம் இன்னும் எங்கோ ஒரு இடத்தில்
ஒளிந்துக்கொண்டுதான் இருக்கிறது.

அது எப்பொழுது வேண்டுமானாலும் விழித்துவிடும்
என்ற எண்ணமே என்னை
இன்னும் பயம் கொள்ள செய்கிறது.

இப்பொழுது என்னிடம்
"அன்பு, பாசம், காதல், நட்பு, காமம், மகிழ்ச்சி"
என்று எதுவுமில்லை தேவி.

பயம் மட்டுமே தங்கியிருக்கிறது.

அடுத்தமுறையும்
என் முட்டாள்தனமான
வேண்டுகோளுக்கு
செவி சாய்த்து
என் பயத்தை நீக்க வந்தால்,
என் பயத்தை நீக்காதே தேவி,
என் பயமிகுந்த உயிரினை நீக்கிவிடு..

No comments: