Friday, March 16, 2012

ஒரு சின்ன உரையாடல்

"மச்சி, ரயில்வே பட்ஜெட்டைப் பற்றி ஒரு மெயில் அனுப்பி இருந்தேனே. பார்த்தியா??"

"ம்.. பார்த்தேன்"

"சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணிநேரத்தில் போகலாமா, புதுசா ரயில் விட போறாங்களாம்"

"ம்"

"இனிமேல், பெங்களூர் ஆபிஸ்ல எதாச்சும் மீட்டிங் என்றால், இதுலயே போய்டலாம். காலையில் ஆறு மணிக்கு கிளம்பினா, எட்டு மணிக்கு அங்கே போய்டலாம். செமல"

"ஆனால், டிரயின் காலை ஆறு மணிக்கு கிளம்பனுமே?? இன்னும் டைம்லாம் ஒன்னும் சொல்லலே.. அதுவும் இதுக்கு தனியா ரயில்வே டிராக் போடனுமாம்.. எப்படியும் நாலு வருஷம் ஆகும்"

"அதுலாம் சீக்கிரமா போட்டுருவாங்க பாரேன். சென்னை. பெங்களூர் இரண்டுமே முக்கியமான ஊருல"

"எங்க ஊருல, மாயவரத்துல இருந்து திருவாரூர் வர நான்கு மணிநேரம் ஆகுது. காரில் வந்தால் ஒரு மணிநேரத்துக்குள் வந்துடலாம். டிரயின் கும்பகோணம், தஞ்சாவூரு, நீடாமங்கலம் எப்படி சுற்றி வருது. திருவாரூர் , மாயவரம் பாதையை மீட்டர் கேஜிலிருந்து ப்ராட்கேஜ் மாற்ற ஆரம்பித்து பத்து வருஷம் முடிய போகிறது. இன்னும் மாற்றி முடிக்கல"

"அது லோக்கல் ஊரு மச்சி, இது மெட்ரோல"

"அப்ப லோக்கல் ஊரு இருக்குறவனாம், மனுசன் இல்லையா??"

"அதானே பார்த்தேன். எல்லாவற்றிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பியே.. இந்த இரண்டு மணிநேர ரயிலைப் பற்றி ஒன்னும் சொல்லலேயேனு"

"இல்ல மச்சி, அப்ப அந்த ஊரு மக்கள் மட்டும் என்ன பாவம் செச்சாங்க?? முன்னேற்றம் என்பது சம அளவில் இருக்க வேண்டும். இல்லைனா அது ஊனம்"

"உங்கிட்ட மனுசன் பேச முடியாது. சரி கூடங்குளம் போகனும்'னு சொன்னியே என்ன ஆச்சு"

"இப்ப போகல. நேரம் இல்லை"

"உங்களை மாதிரி ஆளுக, வாய்கிழியேப் பேச மட்டும்தான் லாய்க்கு" 

No comments: