Tuesday, March 27, 2012

.

    எனக்கு தெரிந்த எல்லா வழிகளையும் அடைத்துவிட்டீர்கள்

இனி நீங்கள் காட்டும் வழியில்தான் நான் செல்லவேண்டும்
வழி காட்டுவதற்கு நன்றி.

    என் குரலின் ஓசையினை மறக்க செய்தீர்கள்

என் வாழ்நாள் முழுவதும் எனக்காக குரல் கொடுத்துக்கொண்டும்,
இனி கொடுக்கவும் செய்யும் உங்களுக்கு
மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

    எனது கனவின் மேலோட்டத்தை அழித்துவிட்டீர்கள்

இதுவே
நான் கண்ட கனவு
என்று நம்பவைக்க முயற்சிக்கிறீர்கள்,
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    எனது சுயகருத்துக்கள் அனைத்தும் போலியானவை
    என என்னை நம்பவைத்தீர்கள்.

இருந்தும் என் அடிமனதில் சில வார்த்தைகள்
கேட்டுக்கொண்டே இருக்கிறது

    "நான் செய்வது அனைத்தும் தவறாகவோ, முட்டாள்தனமாகவோ
      இருந்துவிட்டு போகட்டுமே"

நான் உங்களை போல்தான்
பேசவேண்டும்,
அழவேண்டும்,
சிரிக்கவேண்டும்,
நடிக்கவேண்டும்
என்றால்

பின் நான் எதற்கு.

No comments: