Sunday, October 31, 2010

Animal Farm (விலங்குப் பண்ணை) - by George Orwell

நான் ஆங்கில புத்தகங்கள் அதிகம் படிப்பதில்லை. சமீபத்தில் மற்றொரு புத்தகத்தை தேடி சென்றபோது, கையில் கிடைத்தது "Animal Farm". ஏற்கனவே கேள்விப்பட்ட நாவல் என்பதைவிட அதன் ஸீரோ சைஸ் என்னை ஈர்த்தது. (மொத்தம் 90 பக்கங்கள்தான்).

முதலில் கிழே உள்ள ஒரு மேலோட்டக் கதையை படியுங்கள்.

"அரசாட்சி நடக்கும் நாடு. ஒரு நாள், ஒரு வயதானவர் அங்கு உள்ள மக்கள் அனைவருக்கும்  கம்யூனிசம் பற்றி விளக்குகிறார். "எல்லாருக்கும் சுதந்திரம், நம் உழைப்பு நமக்காவே, நாமே ராஜா  நாமே மந்திரி" என்று அவர் சொல்ல சொல்ல மக்கள் அனைவரும் சுதந்திர கனவினைக் காண தொடங்குகிறார்கள். அடுத்த சில நாட்களில் அந்த வயதானவர் இறந்து விடுகிறார். நாடு முழுவதும் புரட்சி வெடிக்கிறது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக போராடுகிறார்கள். அரசன் பயந்து நாட்டை விட்டு ஒடுகிறான். அவர்கள் நாடு சுதந்திரம் அடைகிறது. மக்கள் சந்தோஷத்தில் குதுகலம் அடைகிறார்கள். மக்கள் பிரதிநிதியாக இருக்க இருவர் முன்வருகிறார்கள். அவர்கள் மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை உருவாக்குகிறார்கள். மக்களாட்சி ஆரம்பமாகிறது. எங்கும் கம்யூனிசம். மக்கள் ஒருவரை ஒருவர் "காம்ரேட்" என்று அழைத்துக்கொள்கிறார்கள்."

"நாடு செழிப்பாக மாறுகிறது. பக்கத்து நாட்டில் உள்ள அரசர்கள் இதை பார்த்து போராமை கொள்கிறார்கள். போருக்கு வருகிறார்கள். ஆனால், மக்கள் ஒற்றுமையாக போராடுவதால் எதிரி நாட்டு அரசர்கள் தோல்வியடைகிறார்கள். போரில் இறந்தவர்கள் தியாகிகள் என்று அறிவிக்கபடுகிறது. மக்கள் பிரதிநியாக தேர்தேடுக்கப்பட்ட இருவருக்குள் எப்பொழுதும் கருத்து வேறுபாடு இருந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அது உச்சத்துக்கு போக, ஒருவனை மற்றொருவன் படைவீரர்கள் வைத்து கொன்றுவிடுகிறான். அதன் பின், அவன் கொஞ்ச கொஞ்சமாக சர்வதிகாரியாக மாறுகிறான். எதிர்த்து பேசினால் மரணம் நிச்சயம் என்பதால், மக்கள் அனைவரும் பயத்துடன் வாழ்கிறார்கள். முன்னர், அரசாட்சியில் இருந்ததை விட அவர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. ஆனால், முன்னரை விட இப்பொழுது சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாக நம்ப தொடங்கினர்."

மேலே சொன்ன மேலோட்டக் கதையை, குழந்தைக்களுக்கும் புரிவது போல், தெளிவாகவும், விரிவாகவும், மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களை வைத்து சொன்னால் எப்படி இருக்கும், அதுதான் George Orwell எழுதிய "Animal Farm".

"ஒரு பண்ணையில் வாழும் மிருகங்கள் அனைத்தும், அந்த பண்ணை உரிமையாளரை  விரட்டிவிட்டு, மிருகங்களின் அரசாங்கத்தை அமைக்கின்றன. வெள்ளை பன்றிகள் தலைமை பொருப்பை ஏற்கின்றன. மிருகங்களின் அரசாங்கம் என்ற போக்கு மாறி, கொஞ்ச கொஞ்சமாக பன்றிகளின் சர்வதிகார ஆட்சியாக மாறுகிறது. இதுதான் Animal Farm‘ன் ஒன்லைன் ஸ்டோரி.



George Orwill இந்த கதையை  எழுதியது 1935‘களில். அதாவது உலகம் முழுவதும் கம்யூனிசம் என்ற புதிய சித்தாந்தம் சுடர்விட்டு எரிய துவங்கிய காலம். கம்யூனிசத்திற்க்காக பலர் தங்கள் உயிர்களை கூட துறக்க தயாராக இருந்தனர். கவிஞர்கள் புதிய புரட்சி கவிதைகளை எழுதி குவித்த நாட்கள். வருமையின் பிடியில் சிக்கிக்கொண்டு எதாவது மாற்றம் வருமா?? என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்ததனர். இந்த காலக்கட்டத்தில் தான், கம்யூனிசத்தை பற்றி George Orwill இந்த நாவலை எழுதினார்.

இதனை கம்யூனிச எதிர்ப்பு நாவல் என்று சொல்லி நிராகரித்துவிட முடியாது. கம்யூனிசத்தின் எழுச்சி மற்றும் தோல்வி ஆகிய இரண்டை பற்றியும் இந்த நாவல் சொல்கிறது. ஒரு முழுமையான கம்யூனிச ஆய்வு நாவல் என்று இதை சொல்லலாம்.

கதையில் வரும் இரண்டு பன்றிகள் Nepoleon,Snowball ஆகியவை  ஸ்டாலின், லெனின் ஆகியோரை குறிக்கிறது என்பதை அனைவராலும் சுலபமாக ஊகித்து விடமுடியும். முதல் முதலாக சுதந்திரத்தை பற்றி பேசும் Old Major என்ற கதாபாத்திரமும் Karl Marx‘தான் என்பது சுலபமாக புரிந்துவிடுகிறது. இப்படி ரஷ்யா, அமெரிக்கா, அந்த காலத்து புகழ் பெற்ற கவிஞர்கள், போர் தளபதிகள் என்று அனைவருமே இந்த Animal Farm நாவலில் இருக்கிறார்கள்.

விலங்குகள் சுதந்திரம் அடைந்தவுடன், அவர்கள் தங்களுக்குள் கொண்டுவரும் ஏழு கட்டளைகள்,

1. Whatever goes on two legs is an enemy.
2. Whatever goes on four legs, or has wings, is a friend.
3. No animal shall wear clothes.
4. No animal shall sleep in a bed.
5. No animal shall drink alcohol.
6. No animal shall kill any other animal.
7. All animals are equal.

இந்த கட்டளைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு இப்படி முடிகிறது,

1. No animal shall sleep in a bed. with sheets
2. four legs good, two legs better
3. No animal shall drink alcohol. to excess
4. No animal shall kill any other animal. without cause
5. All animals are equal. but some animals are more equal than others

கம்யூனிசம் பற்றி புரிந்துக்கொள்ள கண்டிப்பாக இந்த நாவல் உதவும். அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.

பின்குறிப்பு: "விமர்சன கட்டுரைகள் எழுதுவதற்கு நீ லாய்க்கற்றவன்" என்று நண்பன் ஒருவன் என்னிடம் சொல்கிறான். இது எனக்கும் தெரிந்ததுதான். என்ன செய்ய?? நமக்கு வராது என்று தெரிந்த ஒன்றைத்தானே எப்பொழுதும் செய்ய ஆசைப்படுகிறோம். 

4 comments:

தருமி said...

அழகான எளிதான ஆய்வு.
நன்றி

சரவண வடிவேல்.வே said...

நன்றி தருமி...

தனி காட்டு ராஜா said...

சரவணா ...உனகுள்ள இம்முட்டு தெறமையா :)
அருமை ....

சரவண வடிவேல்.வே said...

தெறமையா??? இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுது :)