Saturday, October 9, 2010

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - III

 Love the way you lie

வணக்கம் சார். இந்த புதுமை புதுமை என்ற வார்த்தை இருக்கிறதே, அது மீது எனக்கு ஒருவித மோகம் சார். யாருக்கு தான் புதுமை மீது ஆசை இல்லை என்கிறீர்களா??. என்னை பொருத்தவரை எதாவது புதிதாக செய்துக்கொண்டே இருக்கனும் சார். புதிதாக செய்தால் நம்மை அனைவரும் திரும்பி பார்ப்பார்கள், அதனால் தான் நான் புதுமை மீது ஆசைக் கொள்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எனக்கு எப்பொழுதும் பத்தோடு பதினொன்றாக இருக்கவே பிடிக்கும். அந்த பதினொன்றாவது நபராக இருந்துக்கொண்டு நம்மால் முடிந்த புதுமையை செய்துக்கொண்டே இருக்கவேண்டும், இது தான் என் ஆசை. என்னை பொருத்தவரை எப்பொழுதும் நான் தனியாக தெரிய கூடாது. எனக்கு அது ஒரு லஜ்ஜையை ஏற்படுத்தும். (இங்கு என்ன வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியல சார்).

சரி, நீ இதுவரை புதுமையாக என்ன செய்துயிருக்காய் ?? என்று கேட்டீர்கள் என்றால், அதற்கு என் பதில் “ஒன்றும் இல்லை” என்பதுதான். ஆனால், எதாவது புதிதாக செய்யவேண்டும் என்ற வெறி மட்டும் எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது சார். ஏதாவது புதிதாக செய்ய வேண்டும். அட்லீஸ்ட் எழுத்திலாவது புதுமை செய்ய வேண்டும், நம்ம பேயோனை போல. ஆனால், இப்பொழுது நூற்று கணக்கான போலி பேயோன்கள் நாடு முழுவதும் உருவாகிவிட்டார்கள். போகிறபோக்கில் பார்த்தால், நம் சொந்த பெயரில் எழுதுவதுகூட புதிய முயற்சியாக மாறிவிடும் போல் இருக்கிறது. ஏன்னென்றால், இப்பொழுது பல பேர் பேயோனை போல வேறு பெயர்களில்தான் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் போன வாரம் சரவணாவின் வலைப்பதிவை படித்தீர்களா சார்?? ஒரு கதை எழுதியிருந்தான். “சாவின் நடுவில் கதையும் அதற்க்கு வந்த இருபது பின்னூட்டங்களும்”. இதுதான் சார் அந்த பதிவின் தலைப்பு. “அதாவது ஒரு கதைக்கு வந்த பின்னூட்டங்களை மையமாக வைத்து ஒரு புனைவுகதை எழுதியிருக்கிறான்”. என்னமா யோசிக்கிறாங்க சார். இது மாதிரிதான் புதுமையாக யோசிக்கனும் சார். இவன மாதிரி ஆள்தான் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் சார்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை சார், ஒரு நாடகம் போட வேண்டும். கதைகூட ரெடி சார். எஸ்.ராவின் “கடவுளின் குரலில் பேசி” என்ற கதையிருக்கு’ல அதை மையமாக வைத்து நான் ஒரு நாடகத்தை உருவாக்கியிருக்கேன். போன வருடம் எங்கள் ஊர் திருவிழாவில் போடலாம் என்று நண்பர்கள் பலரிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தேன், யாருமே ஒ.கே சொல்லல சார். நான் எழுதிய நாடகம் யாருக்கும் புரியவில்லையாம்.

என் எழுத்தையும் மதிக்கும் சில பேரு இருக்கதான் செய்கிறார்கள் சார். எனக்கு தெரிந்த கிறித்தவ பொண்ணு ஒன்னு இருக்கு சார். போன வருடம், அது என்னையும் மதித்து ஒரு நாடகம் எழுதி கேட்டுச்சு சார். அவர்கள் சர்சில் கிறிஸ்துமஸ் தினம் அன்று நடிப்பதற்க்கு, சின்ன குழந்தைகள் நடிக்கும் நாடகம் அது. இந்த பொண்ணுதான் நாடகம் போடுவதற்க்கு Organizer (இதற்க்கு தமிழ் வார்த்தை என்ன சார்??). நானும் எழுதி கொடுத்தேன், ஏசு உண்மையாக எங்கு பிறந்தார் எனபதைப்பற்றி “மத்தேயு, மார்க்கு, யோவான், லூக்கா” ஆகியோருக்குள் நடக்கும் வாக்குவாதம்தான் நாடகம்.

இந்த நால்வரும் தாங்கள் எழுதிய நற்செய்தி நூல்களை வைத்து ஏசுவின் பிறப்பை பற்றி விவாதிக்கிறார்கள். இது சிறுவர்களுக்கான நாடகம் என்பதால், ஏசுவின் பிறப்பை பற்றி அதிகமாக பேசாமல் கொஞ்சம் காமெடியாக எழுதிக்கொடுத்தேன். இந்த நாடகத்துக்கு சர்சில் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவளே நாடகத்தில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து அந்த நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டிவிட்டாள். என்ன ஒன்று, நான் எழுதியது வேறு, அங்கு நடந்த நாடகம் வேறு. ஆனால், மேடையில் நாடகத்தை எழுதியவர் என்று என் பெயர் படிக்கப்பட்டது.

இப்ப சொல்லுங்க சார், இந்த உலகத்தில் எந்த மாதிரி புதுமையை நான் செய்ய முடியும்??. இங்கு யாருமே புதுமையை விரும்பவில்லை. எற்கனவே ஒருவன் வகுத்த வாழ்க்கை எல்லைக்குள் சொகுசாக வாழ நினைக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு புதுமை என்றால் என்னவென்று புரிவதில்லை. ஏதோ அது ஒரு சமூக நோய் என்று நினைக்கிறார்கள்.

இருந்தாலும் ஒரு சிலர் அவர்கள் துறைகளில் புதுமை செய்துக்கொண்டு இருக்கதான் செய்கிறார்கள். அவர்களை பார்க்கும் போதுலாம், எனக்கு ஒருவித வியப்புதான் வருகிறது. EMINEM சமீபத்தில் Recovery என்று ஒரு ஆல்பம் வெளியீட்டு உள்ளார். அதில் உள்ள ஒரு பாடலின் தலைப்பு “Untiltle". என்ன ஒரு புதுமையான பெயர்??. EMINEM’ன் எல்லா பாடல்களுமே புதுமையாக இருக்கும். “The Real Slim Shady" என்று ஒரு பாடல், தன்னைப்போல் போலியாக உருவாகி கொண்டிருக்கும் Rap பாடகர்களைப்பற்றி பாடுவதுதான் மையக்கருத்து. இப்படி EMINEM’ன் எல்லா பாடல்களுமே கொஞ்சம் different'ஆக இருக்கும். தமிழில் பரத்வாஜ் இசையில் வந்த “உனக்கென்ன உனக்கென்ன, தம்பி உனக்கென்ன ” பாடலை இந்தவகையில் கொஞ்சம் different'ன பாடல் என்று சொல்லலாம்.

அய்யோ, எங்கேயோ ஆரம்பித்து கடைசியில் இசைக்கு வந்தாச்சு சார். நீங்கள் தமிழ்நாட்டில் இசையை தவிர்த்து வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். இசைப்பற்றி எழுதும் ஷாஜியின் நிலைமை உங்களுக்கே தெரியும். விஜய் டி.வி’யின் புண்ணியத்தால், இப்பொழுது வீட்டுக்கு வீடு பாடகர்கள் உருவாகிவிட்டார்கள். தமிழ்நாட்டில் தடுக்கிவிழுந்தால் நீங்கள் ஒரு பாடகர் தோளில்தான் விழ வேண்டும். அந்ததளவு பாடகர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆனால், சிறந்த பாடகரை தேர்வு செய்யும் நடுவர் இன்னும் ஒரு மலையாளி தான். போனவாரம் விஜய் டி.வியில் ஒரு நடுவர் சொல்கிறார் “நீங்கள் உங்கள் Face Expression 'னை இன்னும் அதிகமாக்கனும்” அடப்பாவிங்களா, பாடுறதுக்கும், முகபாவனைக்கும் என்னையா சம்மந்தம் ??. ஒருவேளை உங்களுக்கு தெரியுமா சார்.

சரி, இந்த முறை பதிவு கொஞ்சம் பெரிசா போச்சு சார். நாம் மீண்டும் அடுதத முறை சந்திப்போம்.

கடைசியாக ஒன்று சார்,

EMINEM Recovery ஆல்பத்தில் Rihanna ஒரு பாடல் பாடியுள்ளார். அதான் சார் "Unfaithful Rihana", ”காதலில் விழுந்தேன்” படத்தில் கூட நம்ம சுனைனாக்கா பாடுவாங்களே “உனக்கென நான், எனக்கென நீ, நினைக்கையில் இனிக்குதே" என்று, அந்த பாடலின் Orginal Track’யை பாடியவர். இவர் இந்த Recovery ஆல்பத்தில் EMINEM கூட சேர்ந்து "Love the way you lie" என்ற பாடலை பாடியுள்ளார். என்னமா இருக்கு தெரியுமா சார், நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள். அதன் லீங்க் கீழே,

2 comments:

தனி காட்டு ராஜா said...

//”காதலில் விழுந்தேன்” படத்தில் கூட நம்ம சுனைனாக்கா பாடுவாங்களே “உனக்கென நான், எனக்கென நீ, நினைக்கையில் இனிக்குதே" என்று,//

எல்லாமே நினைக்கையில் இனிக்க தான் செய்கிறது சரவணா ...

நிலவுக்காதலன் said...

audio mattum pottu Kekka mattum pannirukkalam :) puthumaiyo. heheheh :)