Thursday, December 15, 2011

படித்ததில் பிடித்தது


என்னை மிகவும் பாதித்த ரமேஷ்-பிரேம் எழுதிய பின்நவீனத்துவ நாவலான "சொல் என்றொரு சொல்" புத்தகத்திலிருந்து சில வரிகள்,

"அவன் இருள் நகரத்தில் இருக்கிறான். இன்னும் குறிப்பாகச் சொன்னால்-இருள் நகர எழுத்தாளனான அதீதன் எழுதிய "உடலில் வலியும் உணர்வில் இசையும்" என்ற நூலுக்குள் பதுங்கிக்கொண்டுருக்கிறான். நன்மொழித்தேவன் இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில் தான் பதுங்கி வாழ்ந்து வருகிறான். அங்குத் தான் அவன் அதீதன் நூலைக் கண்டெடுத்தான். சரி, இருள் நகரம் எங்கிருக்கிறது. அது அதீதனின் புனைவு நூலுக்குள் இருக்கிறது. அப்படியென்றால் அதீதன் எங்கிருக்கிறான். நன்மொழித்தேவன் படித்துக்கொண்டிருக்கும் உடலில் வலியும் உணர்வில் இசையும் என்ற நூலுக்குள் இருக்கிறான். அந்த நூல் எங்கிருக்கிறது? இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில்"

No comments: