Friday, December 23, 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள் - "கண்கள் நீயே..காற்றும் நீயே"

என் Playlist'ல் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பாடல்தான் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருக்கிறது. "முப்பொழுதும் உன் கற்பனைகள்" திரைப்படத்தில் வரும் "கண்கள் நீயே..காற்றும் நீயே" என்ற அற்புதமான பாடல்.

 பா.தாமரை எழுதிய பாடல் வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு தாய் தன் குழந்தையைப் பற்றி பாடுவது போல் இயற்றப்பட்டு உள்ளது. முக்கியமாக பாடல் வரிகள் முழுவதுமே நமக்கு புரிகிறது. அதற்காக ஜீ.வி.பிரகாஷ்க்கும் சபாஷ் சொல்லலாம்.

அந்த பாடலில் வரும் ஒரு வரி,

"நான் கொள்ளும் கர்வம் நீ"


இந்த பாடல் எனக்கு பிடித்துப்போக சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது. என் தற்பொழுதைய உலகம் புதிதாக பிறந்த குழந்தைகளால் சூழப்பட்டு உள்ளது. என் அக்காவின் குழந்தை, நான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் என்னைப் பார்த்து தினமும் சிரித்து டாட்டா காட்டும் ஒரு குழந்தை, தோழிக்கு புதிதாக பிறந்திருக்கும் இரட்டை குழந்தை, அலுவலகத்தில் தன் குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கும் அலுவலக நண்பர்.. இப்படி குழந்தைகளால் சூழப்பட்டு, எதைப்பற்றி பேசினால் அது குழந்தைகள் பற்றியதாகவே முடிகிறது.

நண்பன் ஒருவனிடம் இந்த பாடலைப் பற்றி சொல்லி கேட்கச் சொன்னேன். இந்த பாடலை கேட்ட பின் அவன் சொன்னது "குழந்தையைப் பற்றி பாடுவது போல் இல்லையே, ஏதோ காதல் பாடல் போல இருக்கே". என்ன செய்ய எல்லாவற்றையும் காதலுடன் இணைத்து பார்க்கும் உலகில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம், என்னையும் சேர்த்து.

பாடல் வரிகள்
********************
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நினைவே
இயக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே
இதழை செல்லி
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழைந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தூளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாலே பல பல ஓசை
செய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்

எனை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
குறையா நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடலை ஐயிந்தாறு மலை ஐயிநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

No comments: